மார்ச் 30, 2011

மேற்குலகின் ஆதிக்கம் இலங்கையில் தளம்பல் நிலையை அடைவது ஏன்?? – கிருஷ்ணமூர்த்தி

ஒரு காலத்தில்   ஐரோப்பியப் பொருட்களே    இலங்கையில் அதிக புழக்கத்தில் இருந்தன.   கெஸலி, பி.எஸ். ஏ, ஹம்பர், றலி போன்ற சைக்கிள்கள், ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ், மொறிஸ், பேர்ஜோ, பென்ஸ் போன்ற வகையான கார்கள், மேர்ஸி பெர்குஸன், டேவிட் பிறவுண் ட்றக்ரர்கள், வெஸ்பா, பி. எஸ். ஏ, ட்ராம் போன்ற மோட்டார் சைக்கிள்கள், மொறிஸ், லெலண்ட் போன்ற லொறிகள், பிலிப்ஸ், குறுண்டிக் ரக வானொலிகள், றோமர், றேடோ போன்ற மணிக்கூடுகள் என்று இலங் கையின் சந்தைகளிலும் மக்களின் புழக்கத்தி லும் இருந்த பொருட்கள் இவை.

மார்ச் 29, 2011

உள்ளூராட்சித் தேர்தல் முடிவு கூட்டமைப்புக்கு சாதகமானதா? -ஹரிகரன்


உள்ளூராட்சித் தேர்தலில் தமக்குக் கிடைத்துள்ள வெற்றியை இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என்று கோரியுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.     இந்தத் தேர்தலில்  12 உள்ளூராட்சி சபைகளைக்   கைப்பற்றிய  பின்னரே   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  இவ்வாறு கூறியுள்ளது.
அத்துடன் தாம் இந்தத் தேர்தலில் சமஷ்டித் தீர்வை வலியுறுத்திப் பிரசாரம் மேற்கொண்டதாகவும், அதற்கு மக்களின் ஆணை கிடைத்துள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.    இது சமஷ்டித்   தீர்வுக்கான அங்கீகாரமாகக் கருதப்படக் கூடியதா,    இந்த வெற்றியை

ஐ.நா. நிபுணர் குழு இலங்கையில் விசாரணை நடத்தவே முடியாது ஜனாதிபதி


ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பாகீ மூன் நியமித்த நிபுணர் குழு போர்க் குற்றங்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்கவென இலங்கையில் விசாரணை நடத்த ஒருபோதும் அனுமதிக்கப்படாது என்று திட்டவட்டமாகத் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் அவர்கள் வேண்டுமானால் இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியம் அளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இருந்து செயற்படும் வெளிநாட்டுப் ஊடகவியலாளர்களை ஜனாதிபதி நேற்று அலரி மாளிகையில் சந்தித்துப் பேசியுள்ளார் அதன்போது . போர் குற்றங்கள் தொடர்பாக தனது ஆலோசனை வழங்கவென ஐ.நா. பொதுச் செயலாளர் நியமித்த மூவர் கொண்ட நிபுணர் குழு இலங்கை வந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க விரிவாக  ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க முடியும் என்று கூறியுள்ளார் இது தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்தில் “அவர்கள் இலங்கை வந்து நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக சாட்சியங்களை வழங்குவதை அரசு வரவேற்றிருக்கின்றது. ஆனால் அவர்கள் விசாரணைகள் எதனையும் நடத்த முடியாது. அது மிகத் தெளிவானனது. அத்தகைய எந்த முயற்சியும் நிராகரிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்

மார்ச் 28, 2011

இலங்கைத் தமிழர்களுக்காக பேசுவது யார்? என்பது தொடர்பாக மேற்குலகு விரைவில் தீர்மானிக்கவேண்டும்: ரவிநாத் ஆரியசிங்க


இலங்கைத்  தமிழர்களுக்காக யார் பேசுவது   என்பது தொடர்பாக  மேற்குலக நாடுகள் தீர்மானத்துக்கு வர வேண்டுமென்று இலங்கை கூறியுள்ளது.
சுதந்திர தமிழீழத்தைத் தொடர்ந்து நாடுகின்ற புலம்பெயர்ந்த சமூகத்திலுள்ளவர்களா? அல்லது இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள சமாதானத்தை விரும்பும் தமிழர்களா? என்பது பற்றி அதாவது யார்? இலங்கைத் தமிழர்களுக்காகப் பேசுவது என்பது குறித்து மேற்குநாடுகளின் அரசாங்கங்கள் முடிவுக்கு  வரவேண்டுமென்று  இலங்கை தெரிவித்திருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியம், பெல்ஜியம்,  லக்ஷம்பேர்கிற்கான
இயற்கை பேரழிவுகள் ஓர் இறை எச்சரிக்கை

எவ்வித முன்மாதிரியுமின்றி எல்லாவற்றையும் படைத்து ஆட்சி புரியும் அல்லாஹ்விற்கே எல்லா புகழும். ஸலவாத்தும் ஸலாமும் சங்கை நபி நாதருக்கும், சஹாபா தோழர்களுக்கும் ஆன்றோர் யாவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!

மனிதன் இவ்வுலகில் வாழப் பிறந்தவன். இவ்வுலக வாழ்வின் மூலம் அவன் மறுமைக்கு தயாராகிறான். இவ்வுலகில் மனிதன் தன் வாழ்க்கையை எப்படியும் வாழலாம் என்பதல்ல. மனித வாழ்க்கை வரையறுக்கப்பட்டது. வரம்புகளுக்குட்பட்டது. எனவே இவ்வுலக வாழ்வில் பூமியில் குழப்பத்தை ஏற்படுத்தாதீர். வரம்பு மீறாதீர் என இறைவன் எச்சரித்துள்ளான். அவற்றை உணர்ந்துக் கொண்டே மனித இனம் மீறும் போது

மார்ச் 27, 2011

புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார் – விக்கிலீக்ஸ் தகவல்

கடைசிக்கட்ட  போரில்  தமிழீழ விடுதலைப்   புலிகளின்  தலைவர்  பிரபாகரனை   எப்படியாவது  உயிருடன் கைது செய்ய ஜனாதிபதி உத்தரவிட்டிருந்ததாகவும்,    பிரபாகரன்  எங்கும்  தப்பித்து  போகாமலிருக்க   மே 16- 17 இல்  இராணுவத்தினர்     24 மணித்தியாலமும்     உசார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகவும்,  இராணுவத்தினர்  பிரபாகரன், பொட்டம்மன்  போன்றோரை  உயிருடன்   பிடிப்பதற்கு  பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டதாகவும்  விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
அதற்காக என்ன விலை கொடுக்கவும் இராணுவத்தினர்  தயாராக இருந்துள்ளனர்.   அதன் காரணமாகவே யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில்  சரணடையும் பொதுமக்களின்  பாதுகாப்பது குறித்து அரசாங்கமோ

மார்ச் 25, 2011



ஒரு குற்றவாளி பல பயங்கரவாதிகளால் தாக்கப்படுகின்றான்

with 3
லிபியா மீது மேற்கின் தாக்குதல்கள் தொடர்கின்றது லிபியா மக்களின் போராட்டத்தை ஆதரித்துள்ள  இஸ்லாமிய இயக்கங்கள், நிறுவனங்கள் என்பன மேற்குலகம் இராணுவ ரீதியில் லிபியா மீது தலையிடுவதை பெரும்பாலும் ஏற்று கொள்ளவில்லை அதற்கு பிரதான காரணமாக மேற்கின்  நிகழ்கால, கடந்த கால வரலாறு அமைந்துள்ளது மேற்கு  லிபியாவின் மக்களை பாதுகாக்க களம் இறங்கியுள்ளதாக எந்த ஒரு சாதாரண சர்வதேச பார்வை கொண்ட மனிதனும்  ஏற்றுகொள்ள தயாரில்லை



லிபியா மீதான தாக்குதல்களுக்கு இரட்டை தலைமை ?


நேட்டோ லிபியா மீதான ஐநாவின் ‘விமான பறப்பு தடையை’ அமுல்படுத்தும் நடவடிக்கைக்கு தலைமை வகிக்க இணங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது. நேட்டோ லிபியா மீதான நடவடிக்கைகளை வழிநடத்தவேண்டும் என்று இத்தாலி , பிரிட்டன், உட்பட பல நாடுகள் வலியுறுத்தி வந்தன பிரான்ஸ் மற்றும் சில நாடுகள் அதை விரும்ப வில்லை என்று செய்திகள் தெரிவித்தன இந்த நிலையில் நேட்டோ பொது செயலாளர் அண்டெர்ஸ் ரஸ்முசென் ‘விமான பறப்பு தடையை’

த.தே. கூட்டமைப்பு தயாரித்து வைத்துள்ள அரசியல் தீர்வுத்திட்ட யோசனையை அரசிடம் கையளிக்க முடிவு!

தமிழர் பிரச்சினைக்குத்   தீர்வு காணும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதல் தடவையாக அடுத்த மாதம் அதிகாரப் பகிர்வு உள்ளடங்கிய தீர்வுத் திட்டம் ஒன்றை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கிறது.
அடுத்த மாதம்  27 ஆம் திகதி நடைபெறவுள்ள   அரசு – கூட்டமைப்பு சந்திப்பின் போது இந்தத் திட்டத்தை தமிழ்க் கூட்டமைப்பு  

மார்ச் 24, 2011

புலம்பெயர் தமிழ்ப் பிரதிநிதிகளுடன் எரிக் சொல்ஹெய்ம் பேச்சுவார்த்தை: கோரிக்கை நெடியவனால் நிராகரிப்பு

இலங்கையின் சமாதான பேச்சுவார்த்தைகளின் போது நடுநிலையாளராக கடமையாற்றியவரும் நோர்வே  சர்வதேச அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் புலம்பெயர் தமிழ்ப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
சில தமிழ் புலம்பெயர் அமைப்புக்களினால்

ஐ.நா. செயலாளர் ‘பான் கீ மூன்’ மீது எகிப்தில் தாக்குதல் (படங்கள் இணைப்பு)


Ban Ki-Moon’s bodyguards look around nervously amid the shouting and green-flag waving in Cairo
எகிப்திய கெய்ரோ நகருக்கு    விஜயம் செய்த     ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அந்நாட்டிலுள்ள லிபிய அரசாங்கத்துக்கு ஆதரவானவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.  லிபியாவில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே அவர்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
அரபு   லீக்கின்    தலைமையகத்துக்கு விஜயம் செய்த ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அங்கு அரபு     லீக்கின் செயலாளர் நாயகம்

மார்ச் 22, 2011

போலியோ சொட்டு மருந்தின் பலன் போலியா?



உலக போலியோ ஒழிப்பு முயற்சி (GPEI) இயக்கத்தின் பகுதியாக 1995ல் இந்தியாவில் போலியா ஒழிப்பு இயக்கம் துவங்கப்பட்டது. அப்போது கி.பி. 2000க்குள் போலியோ ஒழிக்கப்பட்டுவிடும் என உறுதியளிக்கப்பட்டது. பின்னர் இக்காலத்துக்கு 2007 வரை நீட்டிக்கப்பட்டது. 2007 கடந்தப்பின்னும் போலியோ ஒழிந்தபாடில்லை. போலியோ சொட்டு மருந்தால் பயனேதும் இல்லை, இந்த இயக்கம் வீணானது என புகழ் பெற்ற புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (CSMCN) பேராசிரியர்கள், இந்தியன் மெடிக்கல் அசோசியேசனின் தடுப்பு மருந்து உபபிரிவின் துணைத்தலைவர் ஜேக்கப் புலியேல் (ஆதாரம் Tehelha – Jan 28, 2007) நேஷனல் நாலேட்ஜ் கமிஷன் முன்னாள் துணைத்தலைவர் Dr. புஷ்பா, M. பார்கவா போன்ற ஏராளமான

அன்புள்ள ‘எமது மகன்’பராக் ஹுசைன் ஒபாமாவுக்கு.. என விழித்து முஅம்மர் கடாபி கடிதம்!

லிபியத் தலைவர் முஅம்மர் கடாபி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஒபாமாவை ‘எமது மகனே’ என விழித்துள்ளதுடன் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான தனது தீர்மானத்தையும் நியாயப்படுத்தியுள்ளார்.
மேலும் ஐ.நா.பொதுச் செயலர் பான் கீ மூன் மற்றும்

பிரதமர் பதவிப் போட்டியால் ஆளும்கட்சிக்குள் முரண்பாடு வரும்! – கொழும்புத் தகவல்கள் தெரிவிப்பு

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள பிரதமர் பதவி மாற்றம் காரணமாக ஆளும் கட்சி இரண்டாக உடைவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக கொழும்புத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சி தேர்தலையடுத்து பிரதமர் மற்றும் அமைச்சரவைப் பொறுப்புகளில் மாற்றம் கொண்டுவர ஜனாதிபதி ஏற்கெனவே உத்தேசித்திருந்தார். அதன் போது பிரதமர் பதவி பெரும்பாலும் ராஜபக்­ பரம்பரையைச் சேர்ந்த ஒருவரிடம் ஒப்படைக்கப்படும் என்றே தகவல்கள் வெளியாகியிருந்தன.

மார்ச் 21, 2011


காஷ்மீர்: சவக்குழியின் சாட்சியங்கள்

காஷ்மீர்:
இந்திய அரசின் படுகொலைகளும் சவக்குழியின் சாட்சியங்களும்


சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை!

முன்னுரை

காஷ்மீர் : இந்திய அரசின் படுகொலைகளும் சவக்குழியின் சாட்சியங்களும் என்ற இவ்வெளியீட்டில் காஷ்மீரில் 1989 -2009ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இந்திய ராணுவ மற்றும்
துணை ராணுவப் படையினரால் படுகொலை செய்யப்பட்டு அடையாளம் காணப்படாமல் புதைக்கப்பட்ட சடலங்களை தோண்டி எடுத்து, ஆய்வு செய்து காஷ்மீர் மீதான சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தினரால் வெளிக்கொணரப்பட்ட “புதைக்கப்பட்ட சாட்சியங்கள்” என்ற ஆய்வு அறிக்கையின் தமிழாக்கத்தை குடியுரிமை பாதுகாப்பு நடுவம் வெளியிட முன்வந்துள்ளது.
காஷ்மீர் பிரச்னை என்பதே இந்திய அரசுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் இடையிலான பிரச்னை என்றும், காஷ்மீரிகளின் அடையாளம் மற்றும் சுதந்திர வேட்கைக்கான போராட்டம்
என்றும், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான யுத்தம் என்பது போன்றும், இந்திய இராணுவப் படையினர் போராளிகளிடம் இருந்து காஷ்மீர் மக்களை காப்பாற்றிவிடவே

மார்ச் 20, 2011

ஜப்பானில் அதிகரிக்கும் அணுகதிர்வீச்சு அபாயம்!!


ஜப்பானில் எங்குமே சோகம் நிரம்பி வழிகின்றது.    சுனாமி தாக்கியழித்த நகரங்கள் ஒரு புறமிருக்க அங்கு தோன்றியுள்ள அணுக்கதிர்வீச்சு எங்கே பேராபத்துக்குள் கொண்டு சென்று விடுமோ என்ற ஏக்கத்தையே மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.
ஜப்பானைப் பொறுத்தமட்டில் நில நடுக்கங்கள் அவர்களுக்கு புதிய விடயமாக இல்லாத போதிலும் ஜப்பான் வரலாற்றில் இதுவரை நிகழாத அளவு ஏற்பட்ட நில நடுக்கம் அதனைத் தொடர்ந்து உருவான சுனாமி பேரலையும்     மக்களை ஒரு கணம் அதிர்ச்சியின் விளிம்புக்கே கொண்டு சென்றுள்ளது.     அதேவேளை,   பூகம்பத்தில் தப்பிப்பிழைத்தாலும் அதனைத்தொடர்ந்து   ஏற்பட்டுள்ள   அணுக்கசிவும்  கதிர்வீச்சும் 

விடுதலைப் புலிகளுடனான முழுப்போரிலும் சிறிலங்கா வான்படை 62 வானூர்திகளையும், 38 வானோடிகளை இழந்தது. – முன்னாள் விமான தளபதி

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா வான்படை தனது நான்கில்    ஒரு பங்கு வானோடிகளை இழக்க நேரிட்டது ,  இவ்வாறு கூறியுள்ளார் சிறிலங்கா வான்படையின் முன்னாள் தளபதியும், சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியுமான எயர் சீவ் மார்சல் றொசான் குணதிலக.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் அவர் வழங்கிய செவ்வியின் முக்கிய பகுதிகளின் தொகுப்பு இது.

‘விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் பலத்தை முறியடிக்க நாம் தயாராக இருந்ததற்கு புலிகளின் இரண்டு வானூர்திகள்

அணு உலைகளை மூட திட்டம் : பூகம்ப பலி 20 ஆயிரமாக உயர்வு!


ஜப்பானின் புக்குஷிமா அணுமின் நிலையத்தில் பழுதடைந்துள்ள உலைகள் மூடப்பட்டு விடும் என்று, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பலியானோர் மற்றும் மாயமானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தொட்டு விட்டது.
புக்குஷிமா டாய் இச்சி அணுமின் நிலையத்தில் தற்போது,

விக்கிலீக்ஸ் அதிர்ச்சித் தகவல் – புலிகளுடனான போரை நிறுத்த இந்தியா அறவே விரும்பவில்லை! – அமெ. ராஜாங்கத் தகவல்கள் பகிரங்கம்

இலங்கையில், 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையே நடந்த இறுதிக் கட்டப் போரின்போது, போர் நிறுத்தம் செய்யுமாறும், பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறும் சர்வதேச நாடுகள் கொடுத்த அழுத்தத்தில் இருந்து இலங்கையை காப்பாற்றுவதற்கு இந்திய அரசு முக்கியப் பங்காற்றியதாக விக்கிலீக்ஸ் இணைய தளம் மூலம் வெளியான அமெரிக்க ராஜாங்க தகவல் பரிமாற்றத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
விக்கிலீக்ஸ் தகவல்களை ஹிந்து நாளிதழ் பிரசுரித்துள்ளது.

மார்ச் 16, 2011

4 அணுஉலைகள் இதுவரை வெடிப்பு: கதிர்வீச்சுக் காற்று டோக்கியோவை நோக்கி நகர்வதாக எச்சரிக்கை


பூகம்பத்தினாலும் கடல்கோளாலும் பாதிக்கப்பட்டுள்ள அணுஉலை வெடித்து தாழ்ந்த மட்டத்திலான கதிர்வீச்சு டோக்கியோவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை பாரிய அனர்த்தத்தை எதிர்கொள்ளும் நிலைமைக்கு ஜப்பான் தள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில், தலைநகரிலிருந்து மக்களில் ஒரு பகுதியினர் வெளியேறியுள்ளனர். ஏனையவர்கள் அத்தியாவசியப்

முஸ்லிம் சக்திகள் மேற்கின் பொறியிக்குல் விழுந்து கொண்டிருகின்றது !!

                                               M.ஷாமில் முஹம்மட்
பஹ்ரைனில் மக்கள் ஆர்பாட்டங்கள் தொடர்கின்றது சவூதி மன்னர் ஆயிரம் பேரை கொண்ட இராணுவத்தை கடந்த திங்கள் கிழமை பஹ்ரைனுக்கு அனுப்பியுள்ளார் துபாயும் 500 பேரை கொண்ட படை ஒன்றை அனுப்பியுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிகின்றன  பஹ்ரைன் பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள ஒரு தீவு கூட்டம் இந்த சிறிய தீவு கூட்டம் 33 தீவுகளை கொண்டுள்ளது இதன் பெரிய தீவு 55 கி.மீ நீளத்தையும் 18 கி.மீ அகலத்தையும் கொண்டுள்ளது இங்கு உள்நாட்டு

இனவாதத்தினை முன்னெடுத்த ஜே.வி.பி.யினர் சமஷ்டித்தீர்வினை ஆதரிக்க ஏன் முன்வந்தார்கள்??      முத்துக்குமார்

தமிழ் மக்களின் தேசியப் போராட்டத்தை மூர்க்கத்தனமாக எதிர்த்துவந்த ஜே.வி.பி.யினர் தற்போது பிரிவினையில்லாத சமஷ்டியினை ஆதரிக்கத்தயார் என தமது மாநாட்டில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். ஜே.வி.பி சார்பில் அதன் தலைவர் சோமவன்ச அறிவித்துள்ளார்.
இம்மாநாட்டில் ஏழு தீர்மானங்களை முக்கியமாக

மார்ச் 15, 2011



இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் முதல் செய்மதி தொலைகாட்சி ஏப்ரல் மதம் இயக்கம் பெரும்


OurUmmah: இஹ்வானுல் முஸ்லிமீன் தனது முதலாவது செய்மதி தொலைகாட்சி அலைவரிசை ஒன்றை எகிப்தை தளமாக கொண்டு இயக்க முடிவு செய்துள்ளது ஹுஸ்னி முபாரக் அரசாங்கம் எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பை தடை செய்து வைத்திருந்ததுடன் அதன் மீது அனைத்து வகையான ஊடக கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தது என்பது குறிபிடத்தக்கது.
இந்த அமைப்பின் குரல் வலையை திருகி வைத்திருந்த

மார்ச் 10, 2011

இலங்கையரசு முன்மொழிந்த தூதுவர்களை ஏற்க பிரித்தானியா, அவுஸ்ரேலியா மறுப்பு – போர்க்குற்றச்சாட்டுகளே காரணம்!

முன்னாள் கடற்படைத் தளபதியை அவுஸ்ரேலியாவுக்கும், பாலித கொஹன்னவை பிரித்தானியாவுக்கும் தூதுவர்களாக நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் முன்மொழிந்த போதும்- அதை இந்த நாடுகள் நிராகரித்துள்ளதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் திசார சமரசிங்கவை அவுஸ்ரேலியாவுக்கான தூதுவராகவும், தற்போது ஐ.நாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக உள்ள பாலித கொஹன்னவை பிரித்தானியாவுக்கான தூதுவராகவும் நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
இவர்களின் நியமனங்கள் தொடர்பான முன்மொழிவை இந்த நாடுகளின் அரசாங்கங்களுக்கு சிறிலங்கா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.   ஆனால் பிரித்தானியாவும், அவுஸ்ரேலியாவும் சிறிலங்கா அரசாங்கம்

மார்ச் 09, 2011

அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க ஐந்து கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாக பிரபல சிங்கள நடிகை உபேக்ஷா சுவர்ணமாலி தெரிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சி மூலம் பாராளுமன்றத்துக்குத் தெரிவான தான் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதற்கென ஐந்து கோடி ரூபா லஞ்சமாக வழங்கப்பட்டதென நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலி தெரிவித்துள்ளார்.
பிரபல சிங்கள சினிமா நடிகையும்,

கடாபி நாட்டைவிட்டு வெளியேற 72 மணித்தியாலங்கள் அவகாசம் கெடுத்துள்ள ஆட்சி எதிர்ப்பாளர்கள்!

தானும், தன் குடும்பத்தினரும் சொத்துக்களுடன் எவ்வித ஆபத்துமில்லாமல் லிபியாவை விட்டு வெளியேறுவதற்கு வாய்ப்பளிக்கும்படி, எதிர்த்தரப்பிடம் கடாபி கோரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.    இந்நிலையில், லிபியா மீது போர் விமானங்கள் பறக்கத் தடை விதிப்பது குறித்த தீர்மானம் ஒன்றை, பிரிட்டன்  மற்றும்   பிரான்ஸ் நாடுகள் ஐ.நா.,வில் கொண்டு வந்துள்ளன.

கிபீர் விமானங்களை வீழ்த்த ‘இக்லா’ ஏவுகணைகளை கோரிய பிரபாகரன்!

2007 ஆம் ஆண்டில் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அமெரிக்காவில் செயற்பட்டுவந்த திருநாவுக்கரசு எனப்படும் அமெரிக்க ஆயுதக் கொள்வனவு முகவருக்கு அனுப்பிய தகவலில் கிபீர் விமானங்கள் மூலம்        தனது படையினருக்குப் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும்,

மார்ச் 07, 2011

முபாரக் – முடிந்து போன நவீன பிர் அவ்னின் அத்தியாயம்


”பிர் அவ்னின் பரம்பரைகள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்” என்று எக்காளமிட்ட ஹோஸ்னி முபாரக்கின் முப்பதாண்டு கால சர்வதிகார ஆட்சி அவரே எதிர்பார்க்க முடியா அளவு விரைவாக முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் நலனுக்காகவும் இஸ்ரேலின் நலனுக்காகவுமே தன் நாட்டு மக்களை கூட கொடுமைப்படுத்திய முபாரக் கடைசியில் வேறு வழியின்றி அமெரிக்காவாலேயே கை கழுவி விடப்பட்டதற்கு பரிதாப்பட கூட யாருமில்லை. 

துனிஷியாவில் புரட்சி வெடித்த போதே சிரியாவிலிருந்து வெளிவரும் அரசு ஆதரவு பத்திரிகையான அல்-வதான்  தன் தலையங்கத்தில் “

மார்ச் 06, 2011


லிபியாவில் மக்கள் போராட்டம் யுத்தமாக உருப்பெருகின்றது !


லியியாவில் ஆர்பாட்டங்கள், தெரு சண்டைகள் என்ற நிலை மாறி சிறிய யுத்தமாக மாறிவருகின்றது லிபியாவின் கிழக்கு பிரதேசம் முழுவதும் கடாபிக்கு எதிரான மக்கள் குழுக்களை கொண்ட ஆயுத குழுக்களின்  கட்டுப்பாட்டிலும்  மேற்கின் சில பகுதிகள் தவிர்ந்த மேற்கின் தலைநகர் உட்பட பிரதான பகுதிகள் கடாபியின் கட்டுபாட்டிலும்  உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் திகதி தொடங்கிய  மக்கள் ஆர்பாட்டங்கள்  இரு வாரங்களில் பின்னர் தெரு துப்பாக்கி சண்டைகளாக மாறியது கடந்த ஒரு வாரமாக ஒரு முழு அளவிலான

மார்ச் 04, 2011


தெளிவான தீவிரவாதி…!

இருபதாம் நூற்றாண்டிற்கு மேற்குலகம் கண்டு பிடித்தளித்து, விசித்திரமாகத் தமிழ்ப் படுத்தப் பட்ட சொற்கள்தாம் Terrorism/Terrorist முறையே தீவிரவாதம்/தீவிரவாதி!

தேர்தலில் “தீவிர”ப் பிரச்சாரம் செய்பவர், அரசியல்வாதி.
என்கவுண்டரில் கொல்லப் பட்ட வீரப்பனை இரு மாமாங்கங்களாகத் “தீவிர”மாகத் தேடியவர்கள், காவல் துறையினர்.
நடிக-நடிகையரின் வீட்டில் கருப்புப் பணத்தைத் “தீவிர” வேட்டையாடுபவர்கள், வருமான வரிச் சோதனையாளர்கள்.

Israel Soldier _Palestine Girl

மார்ச் 03, 2011

Why Quran say cut down Christians and Jews? Dr Zakir Naik

.

சிங்க கொடிக்கு ஆதரவளிக்காதவர்கள் இந்த நாட்டில் வாழ தகுதியற்றவர்கள்: பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால

இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையே கடந்த சனிக்கிழமை   நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் போது கொழும்பு    தெமடகொட  அரச வீடமைப்புத் திட்டத்தில்     வசிக்கும் முஸ்லிம் இளைஞர்கள் பாகிஸ்தான் அணியின் வெற்றியை  பட்டாசு கொளுத்திக் கொண்டாடியமையானது   தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டு

யுவான் ரிட்லி பிரபல பத்திரிக்கையாளர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட விதம் விளக்குகின்றார்



யுவான் ரிட்லி (Yvonne Ridley), நம்மில் பலருக்கும் நன்கு தெரிந்த பெயர். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர். பத்திரிக்கையாளர், சமூக சேவகர், அரசியல்வாதி என்று பல பரிமாணங்களை கொண்டவர். இவர் இஸ்லாத்தை தனது வாழ்கையாக கொண்ட விதம்  பற்றி  விபரித்தவை சுருக்கமாக காண்போம்

how did Yvonne Ridley accept Islam

Battlefield video: Libya rebels fight Gaddafi forces

Libya



லிபியாவில் மேற்கின் இராணுவ ஆக்கிரமிப்பு ஏற்படும் ஆபத்து !!


M.ரிஸ்னி முஹம்மட்
  லிபியாவின் நிலை மேலும் மோசமடைந்து வருகின்றது லிபியாவின் கடாபி எதிர்பாளர்களின் கையில் இருந்து எண்ணெய் வளம் கொண்ட கிழக்கு பிரதேசத்தை மீட்கும் நோக்கில் கடாபிக்கு விசுவாசமான படை விமான குண்டு தாக்குதல்களையும் நேரடி இராணுவ தாக்குதல்களையும் ஆரம்பித்து நேற்று கிழக்கின் சில பகுதிகளுக்குள் புகுந்தது எனினும் மக்களையும் , மக்கள் ஆர்பாட்டங்களுக்கு ஆதரவான இராணுவத்தையும் இன்னும் பல அறியப்படாத ஆயுத குழுக்களையும் கொண்ட படையால் கடாபிக்கு விசுவாசமான படை ஆயுத தாக்குதல் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளது.
போர்க்குற்ற விசாரணையை எதிர்நோக்கும்

நெருக்கடியான நிலையில் இலங்கை

ரொபேர்ட் பிளேக் கூறுகிறார்



03.03.2010
யுத்தத்தின் இறுதி மாதங்களின்போது ஏற்பட்ட பொதுமக்கள் 
இழப்புகள் தொடர்பாக போர்க்குற்ற 
நீதிமன்றத்தின் விசாரணையை எதிர்நோக்கும் நெருக்கடி இலங்கைக்கு
இருப்பதாக தெற்கு,மத்திய 
ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி 
வெளிவிவகார அமைச்சர் 
ரொபேர்ட் பிளேக் கூறியுள்ளார்.

China

கிழக்கில் முத்து மாலை. மேற்கில் வைரமாலை : இதயச்சந்திரன்

இந்தியாவைச் சுற்றி, முத்துமாலை[ STRING OF PEARLS ] ஒன்றினை சீனா கோர்த்துக் கொண்டிருப்பதாக பல ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
பாகிஸ்தான்,இலங்கை,பங்களாதேஷ்,மியன்மார் போன்ற, இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில், துறைமுக அபிவிருத்தி என்கிற போர்வையில் சீனா கால் பதிக்கிறது என்பதிலிருந்து இந்த முத்து மாலை விவகாரம் எழுகிறது.
சீனாவின் முதலீட்டில் உருவாகும் இந்த துறைமுகங்கள், நாளை சீனாவின் கடற்படைத் தளமாக மாறி விடலாம் என்று இந்தியாவும்,அமெரிக்காவும் அச்சமடைவதில் நியாயம் உண்டு.
இதைவிட, வேறு ஒரு தந்திர நகர்வில் , சீனா ஈடுபடுவதை, பலர் அவதானிக்க மறந்து விட்டார்கள்.

மார்ச் 01, 2011

Two killed in Omani anti-government protests

Walk


   ஆரோக்கியமான வாழ்வுக்கு நடைப்பயிற்சி அவசியமா?

பொதுவாக நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் ஏற்படுகின்ற விளைவுகள் தொடர்பான சில கேள்விகளும் பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.

1. நடப்பதற்கு முன் ஏதாவது சாப்பிடலாமா?

நிச்சயம் சாப்பிடலாம் கீழே கொடுத்துள்ளபடி முறையாகச் சாப்பிட்டு விட்டு நடக்கலாம் :

 முழுதானிய (ஓட்ஸ், அவல்) சிற்றுண்டி

 முழு கோதுமை பிரட்

 வாழைப்பழம்

 சாப்பிடுவது வயிற்றை நிரப்புவதாக இல்லாமல் குறைந்த அளவாக இருக்க

Oman


 ஓமனில்    போராட்டம் தொடர்வதால் பீதி!

        

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமனில், அரசுக்கு எதிரான போராட்டம் நேற்று மூன்றாவது நாளாகத் தொடர்ந்தது. நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் ஆறு பேர் பலியாயினர்.

இதனால், அரபு நாடுகள் பீதியில் ஆழ்ந்துள்ளன. டுனீசியா, எகிப்து, ஏமன், லிபியா, பக்ரைன், ஜோர்டான், சிரியா, மொராக்கோ, அல்ஜீரியா என அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் நாடுகளின் வரிசையில் தற்போது, எண்ணெய் வளம் மிக்க நாடான ஓமனும் சேர்ந்துள்ளது.

அந்நாட்டை கடந்த 40 ஆண்டுகளாக கபூஸ் பின் சயீத் ஆண்டு வருகிறார். ஓமனில் அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டுள்ளன.

கடந்த 26ம் தேதி, அந்நாட்டின் தொழில் நகரமான சோகாரில்

Army


இலங்கை இராணுவத்தின் இப்போதைய கனவு என்ன? – சுபத்ரா



விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர்  முடிவுக்கு வந்து  இன்னும் மூன்று மாதங்களில் இரண்டு ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன.  முப்படைகளையும் கொண்ட ஒரு மரபுவழிப்படையாக வளர்ச்சி பெற்றிருந்த உலகில் பலம் வாய்ந்ததும், யாராலும் தோற்கடிக்க   முடியாததுமாகக் கருதப்பட்டதுமான புலிகள் இயக்கத்தைத் தோற்கடித்த பெருமை இலங்கை இராணுவத்துக்கு உள்ளது.
புலிகள் இயக்கத்தையும், இரண்டு முறை ஜே.வி.பி.யின் ஆயுதக் கிளர்ச்சிகளையும் தோற்கடித்துள்ள போதும் இலங்கை இராணுவத்துக்கு சர்வதேச அங்கீகாரம் பெரியளவில் கிடைத்து விட்டதாகக் கருத முடியாது.  போர் முடிவுக்கு வந்த போது, இலங்கை இராணுவத்துக்கு மிகப்பெரிய தொழில்சார் அங்கீகாரம் கிடைக்கும் என்று அரசாங்கம் எதிர்பார்த்தது.  ஆனால்,

Navy


பிறவுண் நீர் கடற்படை உருவாக்குவதே இலங்கை அரசாங்கத்தின் அடுத்த இலக்கு –  சுபத்திரா



2007 – 08 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நீலநீர் கடற்படை ((blue-water navy ) என்ற தகுதியை அடைந்து விட்டதாக இலங்கைக் கடற்படை கூறியிருந்தது நினைவிருக்கலாம்.    விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை இலங்கைக் கடற்படை அடுத்தடுத்து  மூழ்கடித்திருந்த நேரம் அது.   அதுவும் இலங்கையின் கரையில்   இருந்து 1000   கி.மீ தொடக்கம் 2000    கி.மீ தொலைவில் அந்தத் தாக்குதல்கள் நிகழ்ந்திருந்தன.
அப்போதைய கடற்படைத்   தளபதி மற்றும்