லிபியாவின் "விடுதலை"
முன்னாள் ஆட்சியாளர் மௌம்மர் கடாபியை தான்தோன்றித்தனமாக படுகொலை செய்த பின்னர், இந்த வாரயிறுதியில் லிபியாவின் நேட்டோ பின்புலத்திலான தேசிய இடைக்கால சபை (NTC) நாடு "விடுதலை"அடைந்துவிட்டதாக அறிவிக்கும் நிலையில் உள்ளது.
கடாபியின் முன்னாள் நீதித்துறை மந்திரியும் இடைக்கால தேசிய சபையின் தலைவருமான முஸ்தாபா அப்தெல் ஜலீலால் அளிக்கப்பட்ட உரையோடு கொண்டாடப்பட்டு வருவது, லிபிய மக்களின் விடுதலை அல்ல, மாறாக அது காலனித்துவ நாட்களை மீண்டும் கொண்டு வரும் நோக்கத்தோடு தொடுக்கப்பட்ட யுத்தங்களில் பிரதான ஏகாதிபத்திய சக்திகளின் வெற்றியாகும்.
அந்நாட்டின் உள்கட்டமைப்பின் பெரும்பகுதிகளை இடித்து ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், மற்றும் குழந்தைகளைக் கொல்லும் மற்றும் காயப்படுத்தும் விதத்தில் சுருங்கி போயிருந்த ஒரு நேட்டோ தாக்குதல் பிரச்சாரத்தின் மூலமாக அது எட்டப்பட்டது. அதன் இறுதி அத்தியாயத்தில்,சிர்ட்டின் கடற்கரை நகரத்தை காட்டுமிராண்டித்தனமாக கைப்பற்றியதும்,கடாபி, அவருடைய மகன் மற்றும் அவருடைய ஆட்சியின் ஏனைய முன்னாள் உறுப்பினர்களைப் படுகொலை செய்ததும் ஒட்டுமொத்த நடவடிக்கையின் குற்றத்தனத்தையே அடிக்கோடிடுகின்றன.
யுத்தத்தின் தொடக்கத்தில் இருந்தே, புவி-மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களைத் பின்தொடர்வதற்காக அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய சக்திகளால் நடத்தப்பட்ட ஆட்சி மாற்றத்திற்கான ஒன்றாகவே அந்த யுத்தம் இருந்து வந்துள்ளது. மத்தியதரைக்கடல் பகுதியின் ஒரு முக்கிய எரிசக்தி-உற்பத்தி நாட்டில் மேற்கின் மேலாதிக்கத்திற்கு சவால்விடுத்து,கடாபி ஆட்சியோடு கணிசமான அளவிற்கு எண்ணெய், உள்கட்டமைப்பு மற்றும் ஆயுத உடன்படிக்கைகளைத் தீர்மானித்திருந்த சீனா மற்றும் ரஷ்யாவின்மீது ஒரு கூர்மையான பழிவாங்கும் தண்டனையை வழங்குவதே அவர்களின் யுத்த நோக்கமாகும்.
அடியாட்களையும், மேற்கத்திய உளவுத்துறை "உடைமைகளையும்",விலைக்கு வாங்கப்பட்ட முன்னாள் லிபிய அதிகாரிகளையும், அந்நாட்டின் மறுகாலனித்துவத்திற்கு தங்களின் சேவைகளை அர்பணிக்கக்கூடியவர்களையும் கொண்டிருக்கும் ஓர் ஆட்சி தான் திரிப்போலியிலும், பெங்காசியிலும் வடிவெடுக்கும். ஐரோப்பாவிலும்,அமெரிக்காவிலும் உள்ள "இடது" என்றழைக்கப்படும் அரசியல்ரீதியாகவும்,அறிநெறிரீதியாகவும் மிகவும் சீரழிந்த உட்கூறுகளால் மட்டுமே "விடுதலை"மற்றும் "ஜனநாயகம்" என்ற இந்த இழிவார்ந்த அமைப்பை ஏற்றுக் கொள்ள முடியும்.
"பணத்திற்கு அப்பாற்பட்டு (எண்ணெய் வளத்திற்கு தான் நன்றி கூற வேண்டும், லிபியா அதில் செழிப்பாக உள்ளது) லிபியாவிற்கு நீடித்த தொழில்நுட்ப ஆலோசனையும், முழுநேர ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது,”என்று நியூ யோர்க் டைம்ஸ் ஆலோசனை கூறியது. இதுபோன்ற "அறிவுரை"லிபியாவில் எண்ணெய் உடன்படிக்கை நிபந்தனைகளை திருத்தி எழுதுகையில் உள்ளடக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மௌம்மர் கடாபியின் காட்டுமிராண்டித்தனமான படுகொலை, வாஷிங்டனால் பகிரங்கமாக கோரப்பட்ட ஓர் அரச படுகொலையாகும். சிர்ட்டேவிற்கு பறந்து கொண்டிருந்த கடாபியின் பயணத்தை நேட்டோ யுத்தவிமானங்களும்,அமெரிக்காவின் ஓர் ஆளில்லா வேட்டை விமானமும் தாக்குவதற்கு வெறுமனே 48 மணிநேரத்திற்கு முன்னதாக, “எதிர்ப்பாளர்களின்"கருணைக்கு அவரை விட்டுவைத்து, திரிப்போலிக்கு பறந்திருந்த வெளிவிவகாரத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன், ஆட்சியில்லாத அந்த லிபிய தலைவரை முடிந்தவரை விரைவாக "பிடிக்க வேண்டும் அல்லது கொல்ல வேண்டுமென" அழைப்புவிடுத்தார்.
நாசரிசத்தால் (Nasserism) ஈர்க்கப்பட்டிருந்த கடாபி, 1969 செப்டம்பரில் இளம் அதிகாரிகளின் ஓர் ஆட்சி கவிழ்ப்பு திட்டத்தைத் தலைமையேற்று நடத்தினார். அவருடைய மரணத்திற்கு நீண்டகாலத்திற்கு முன்னரே, அவர் புரட்சிகர தேசியவாதத்திற்கான எவ்வித யோசனையையும் கைவிட்டிருந்தார்.அந்த ஆரம்பக்கட்ட நாட்களில், பாரிய காலனித்துவ-எதிர்ப்பு போராட்டங்களோடு பிணைந்த ஒரு தேசிய மற்றும் சமூக திட்டத்தை வலியுறுத்திக் கொண்டு, பல நாடுகளில் லிபியாவை போன்ற தேசியவாத ஆட்சிகள் அதிகாரத்திற்கு வந்தன.
லிபியாவில், இது அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு முழுவதுமாக அடிபணிந்திருந்த இட்ரிஷ் மன்னரின் ஊழல்மிக்க முடியாட்சியைத் தூக்கியெறிந்தமை மற்றும் ஆபிரிக்க கண்டத்தில் நிறுவப்பட்டிருந்த மிக பிரமாண்டமான அமெரிக்க இராணுவத் தளமான வீலஸ் விமானத்தளத்தை மூடியமை, வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களோடு கடுமையான பேரத்தில் ஈடுபட்டமை, மற்றும் தடையாணைகளை நடைமுறைப்படுத்தியமை உட்பட எண்ணெய்யை ஓர் ஆயுதமாக பயன்படுத்த OPECக்கு அழுத்தம் கொடுத்தமை ஆகியவற்றை உட்கொண்டிருந்தது.
அனைத்து தீவிர தேசியவாத ஆட்சியாளர்களைப் போலவே கடாபியாலும், ஏகாதிபத்தியத்திற்கும் சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கும் இடையில் சமாளித்துக் கொண்டு, சர்வதேச சூழலின் கீழ், உபாயங்களுக்கான பெரிய வாய்ப்புகளைப் பெற முடிந்தது. அதேவேளை உள்நாட்டிற்குள் எழுந்த சமூக போராட்டங்களை ஒடுக்க ஒடுக்குமுறை மற்றும் சீர்திருத்தங்களின் ஒரு கூட்டுக்கலவையை பயன்படுத்தினார். 1991இல் சோவியத் ஒன்றியத்தின் சிதைவு லிபியாவையும், அதேபோன்ற ஆட்சிகளையும் ஏகாதிபத்திய சக்திகளோடு ஓர் இணக்கத்தை எட்டச் செய்தது.
2003இல், ஈராக்கின் அமெரிக்க தலையீட்டையொட்டி, அணு ஆயுதங்களை நோக்கிய எவ்வித விருப்பங்களையும் மறுத்தும், பயங்கரவாதத்தைக் கண்டித்தும், மேற்குடனான உறவுகளை சமாதானமாக்க விரும்பியது.அதேவேளை அல்கொய்தாவிற்கு எதிரான உலகளாவிய சிலுவையுத்தத்தில் அமெரிக்க உளவுத்துறையோடு கூடி வேலைசெய்தது. அவர் இந்த போக்கை எடுத்த உடனே, எண்ணெய் உடன்படிக்கைகள், ஆயுத ஒப்பந்தங்கள் மற்றும் ஏனைய ஆதாய உடன்படிக்கைகளுக்காக வாஷிங்டனும் மற்றும் ஒவ்வொரு பிரதான மேற்கு ஐரோப்பிய சக்தியும் கடாபியை அரவணைத்துக் கொண்டன.
இருந்தபோதினும், கடாபியின் ஆரம்பக்கட்ட தீவிரத்தன்மையை ஏகாதிபத்திய சக்திகள் ஒருபோதும் மறந்துவிடவும் இல்லை, அவரை ஒருபோதும் நம்பவும் இல்லை. இவ்விதத்தில், வெகுநீண்டகாலத்திற்கு முன்னர் இல்லாமல் அவரிடம் பணிந்து அன்பைக்காட்டிய அதே அரசியல் பிரபலங்கள்,அவரின் பேரச்சமூட்டுகின்ற படுகொலையையும் குரூர திருப்தியுடன் பார்க்கின்றன.
2009 இல் வெளிவிவகாரத்துறையில் இருந்த லிபிய ஆட்சியாளரின் மகன் மௌடெஸ்செம் படுகொலை செய்யப்பட்டதை வரவேற்றிருந்த ஹிலாரி கிளின்டன் வியாழனன்று கடாபியின் படுகொலை குறித்து கூறுகையில்,சிரித்துக்கொண்டே, “நான் வந்தேன், நான் பார்த்தேன், அவர் மரணத்தை”என்று அறிவித்தார்.
இது, புதிய மெக்சிகோவில் பிறந்து ஓர் அமெரிக்க குடிவாசியான முஸ்லீம் மதகுரு அன்வர் அல்-அவ்லாகி விஷயத்தில், ஓர் அரச படுகொலைக்கு சொந்தம் கொண்டாட கடந்த ஆறுமாதங்களில் மூன்றுமுறை தொலைக்காட்சி கேமராவின் முன்னால் தோன்றியுள்ள ஒரு ஜனாதிபதியின் தலைமையில்,அமெரிக்க அரசாங்கத்தின் அடிதடித்தனத்தைத் தொகுத்தளிக்கிறது.
வியாழனன்று அவர் அளித்த உரையில், “உலகில் அமெரிக்க தலைமையின் வலிமையை நாம் காண்கிறோம்,” என்பதையே கடாபியின் படுகொலை நிரூபித்துள்ளதென ஒபாமா முறையிட்டார்.
இது முட்டாள்தனமானதாகும். வெளியுறவு கொள்கையின் ஓர் இடையறா கருவியாக விளங்கும் படுகொலையென்பது அமெரிக்க பலத்தின் அடையாளமல்ல, மாறாக அது வரலாற்று வீழ்ச்சியாகும். அது பகிரங்கமான வன்முறை நடவடிக்கைகள் மூலமாக ஆழமான நெருக்கடியையும், அமெரிக்க முதலாளித்துவத்தின் வீழ்ச்சியையும் ஏதாவதொருவிதத்தில் சரிக்கட்ட முடியுமென்ற ஆளும் வர்க்கத்தின் நம்பிக்கையிழந்த மற்றும் அறிவற்ற நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தலையீடுகளால் உருவாக்கப்பட்ட நெருக்கடிகள், புதிய மற்றும் இன்னும் இரத்தம் தோய்ந்த யுத்தங்களுக்கு மட்டுமே அஸ்திவாரத்தை அமைத்துள்ளன. அமெரிக்கா பின்பற்றும் "மதிப்புகள் மற்றும் நலன்கள்" யுத்தங்கள் வருவதற்கு நீண்டகாலமாகாது என்பது போன்ற பணயத்தில் இருக்குமென உணரப்படும் எந்தவொரு இடத்திலும் அமெரிக்க தாக்குதலை அனுமதிக்கும் ஒரு முன்னெச்சரிக்கை யுத்த கோட்பாட்டை தெளிவாக விளக்க, ஒபாமா லிபிய தாக்குதலைப் பயன்படுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக