கிறிஸ்தவ தமிழீழமும் இஸ்லாமிய தமிழரும்
இன்று இந்த மக்கள் நம்பி நிற்கும் மேற்குலகும் ஐக்கிய நாடுகள் சபையும் யார் என்பதை முஸ்லிம் உலகில் இவர்கள் செய்யும் அநியாயங்களையும் துரோகங்களையும் பார்த்து பாடம் படித்து கொள்ள வேண்டும். மாறாக மஹிந்தவை ஒழிக்க போய் மீண்டும் ஒரு முறை மாண்டு போய்விடக் கூடாது.
இந்த பிரச்சனைகளிற்கு எல்லாம் ஒரே வழி ஈழத்தை கிறிஸ்தவ தேசமாக மாற்றுவதே. தனித் தமிழீழம் கிடைத்தால் அது பாரதத்துடன் பிற்காலங்களில் இணங்கிப்போக வாய்ப்புண்டு. அதே ஈழம் கிறிஸ்தவ சிந்தனைகளை சுமந்த தேசமாக மாறினால் அது ஒரு குட்டி பிலிப்பைன்ஸ். இது தான் அமெரிக்காவிற்கு தேவை. அதற்கான அனைத்து வாயில்களும் இப்போது திறக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் தேசங்களான கிறிஸ்தவ நாடுகளில் வாழும் டமிழ்ஸ் எல்லோருமே இன்று கொக்கோகோலா கலாச்சாரத்தில் ஊறிப்போயுள்ளார்கள். பேச்சு, நடை, உடை, பாவனை என எல்லாமே மேற்கத்தைய நாகரீகம். சொல்லப்போனால் இனகூறுகள் எனுமடிப்படையில் இவர்கள் தமிழ் பெயரை கொண்டிருப்பது மட்டும் தான் இவர்களது கடைசியிருப்பு. புலம்பெயர் தமிழர்களிற்கு மத்தியில் கத்தோலிக்கத்தை பரப்புவது இன்று பரவலாக இடம் பெறுகிறது. அவர்களும் அதை சில பல சலுகைகளிற்காக ஆவலுடன் ஏற்றுக்கொள்கிறார்கள்.
தமிழர்களது இணையங்களில் கூட கிறிஸ்தவ பிரச்சார விளம்பரங்கள் பரவலாக இடம்பிடித்துள்ளன. இந்த கிறிஸ்தவத்தின் ஆதிக்கம், தமிழீழ போராட்ட வரலாற்றில் அன்று முதலே ஆதிக்கம் செலுத்தியே வந்துள்ளது. வணபிதா சிங்கராயர் முதல் இன்றைய இராயப்பு ஜேக்கப் வரை (அருட் தந்தை)
ஈழ விடுதலை போராட்டத்தில் கனதியான பாத்திரங்களை வகித்துள்ளனர்.
இறுதி யுத்தத்தின் போது மடு மாதாவை வன்னிக்குள் கொண்டு சென்றதும் கொண்டு வந்ததும் கூட இதில் ஒரு அங்கமே.
ஈழ பிரதேசம் கிறிஸ்தவ தேசமாவதும், கன்பூஷிய தேசமாவதும் நமக்கு அலட்டிக்கொள்ள வேண்டிய விடயங்கள் அல்ல. ஆனால் இதே ஈழத்து அன்றைய தமிழ் தலைமைகள் வடக்கு கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்களை இஸ்லாமிய தமிழர்கள் என்று ஒரு எல்லைக்குள் முடக்க முற்பட்டனர். பலமான தமிழரது சாதித்துவ பின் புலத்தில் வெள்ளாலரிற்கு கீழும் நலவரிற்கு மேலும் இஸ்லாமிய தமிழர் எனும் ஒரு இனத்தை புதிதாக உட்புகுத்தி உள்வாங்கினர்.
சர்வதேச முஸ்லிம் உம்மாவின் ஒரு அங்கமாகிய இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம்களை பொய்யான கருத்தியலை முன்வைத்து தமிழ் நாட்டு முஸ்லிம்ள் திடாவிடர்கள் போல் நீங்கள் இஸ்லாமிய தமிழர் என்றும், லெபனானில் மற்றும் பலஸ்தீனில் யூதர்களிற்கு எதிராக மண்விடுதலையை மையமாகக்கொண்டு கிறிஸ்தவர்களும் முஸ்லி்ம்களும் போராடுவது போல் சிங்களவனிற்கு எதிராக நீங்கள் களப்பலியாக வேண்டும் என்றும் பலவந்தப்படுத்தியது இந்த தமிழ் சமூகமே. அதாவது அது ஆதரித்த விடுதலை இயக்கங்களே.
இந்த கீழ்தரமான இனத்துவ அரசியலை பாசிஸ புலிகளும் ஏனையவர்களும் முன்வைத்த போதும் செயற்படுத்திய போதும் சிவத்தம்பி உட்பட பல தமிழ் புத்திஜீவிகளும் அதை சரிகண்டே கருத்துக் கூறினர். தனித்துவ முஸ்லிம் அரசியல் போராட்டத்தை பலவீனப்படுத்துமென்றனர். ஆனால் இன்று இவர்கள் சார்ந்து நிற்கும் புலிபினாமிகளான தமிழர் கூட்டமைப்பு டக்ளஸ் தேவானந்வாவுடன் மல்லுக்கு நிற்கிறது. கருணாவுடன் முரண்படுகிறது. இன்றைய நிலையில் அதுவும் போராட்ட இயக்கங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் இவர்களது இந்த நிலைப்பாடு தமிழர் அபிலாஷைகளை பலவீனப்படுத்தாதா எனும் கேள்வி இங்கே எழுவது நியாயம் என்று நினைக்கின்றேன்.
வடபுல முஸ்லிம்களையும் தென்தமிழீழ முஸ்லி்ம்களையும் இஸ்லாமிய தமிழர் என வலுகட்டாயமாக ஒரு வட்டத்துள் கொண்டு வர நினைத்த இந்த இந்து பேரினவாதம் தான் இப்போது கிறி்ஸ்தவ அரசியலிடம் தன் கற்பை விலை பேசுகிறது.
அமெரிக்காவும் அதன் மேற்கத்தைய கூட்டாளிகளும் விரும்பும் கிறிஸ்தவ சமஷ்டியிலோ அல்லது மாகாண அரசிலோ ஏன் ஈழத்திலோ வாழும் முஸ்லிம்களை இனிவரும் காலங்களில் இஸ்லாமிய கத்தோலிக்கர்கள் என்றா அழைக்கப்போகிறார்கள். அல்லாவிட்டால் இன்று உலகலாவிய ரீதியில் முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்படுகின்ற நவ சிலுவையுத்தத்தின் வரிகளை வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் மீதும் எழுதப்போகிறார்களா?
நடக்கும் நிகழ்வுகளும் அசைவுகளும் அதைத்தான் செய்யப்போகிறார்கள் என்றே எண்ண வைக்கிறது.
அபூ ஸய்யாப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக