ஏப்ரல் 12, 2013


ஒபாமாவின் “நெறிப்படுத்தலும்” ஆசியாவில் அணுவாயுதப்போர் அச்சுறுத்தலும்

Peter Symonds

கடந்த ஒரு மாதமாக ஒபாமா நிர்வாகம், வடகொரியாவிற்கு எதிராக பொறுப்பற்றஆத்திரமூட்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. இது வடகிழக்கு ஆசியாவில்அழுத்தங்களுக்கு தீயூட்டி போர் அபாயங்களை அதிகரித்துள்ளது.இப்பிரச்சாரத்துடன் இணைந்த வகையில் வட கொரியா ஆட்சியைஅரக்கத்தனமாக சித்தரிப்பதுடன் மற்றும் அமெரிக்க இராணுவத்தை கட்டியெழுப்புவது முற்றிலும் “தற்பாதுகாப்பிற்கு” என்று கூறப்படுகின்றது.
ஆனால்வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் மற்றும் CNN இரண்டும் நேற்று பென்டகன் பலமாதங்கள் முன்னரே இயற்றப்பட்டு ஒபாமா நிர்வாகத்தால் இந்த ஆண்டுமுன்னதாக ஒப்புதல் கொடுக்கப்பட்ட நெறிப்படுத்தல்” (“the playbook”)எனக்கூறப்படுவதை பின்பற்றுகிறது என்றும் கூறுகின்றனதென் கொரியாவிற்குஅணுவாயுதத்திறன் கொண்ட B52 விமானங்களை மார்ச் 8, 26 திகதிகளில்கொண்டு சென்றதும்மார்ச் 28ல் B2 விமானங்களை அனுப்பியதும்மார்ச் 31ல் F22 Raptor போர்விமானங்களை முன்கூட்டியே அனுப்பியதும் இத் திட்டத்தின் ஒரு பாகமாகும்.
B52, B-2 அணுவாயுதத் திறன் உடைய முக்கியமான குண்டுத்தாக்குதல்விமானங்களில் தற்பாதுகாப்பு” அம்சம் 
ஏதும் இல்லைஇந்த விமானங்கள்முதலில் வட கொரியாவிற்கும் மற்றும் வடகிழக்கு ஆசியாவில் எங்கும்அமெரிக்க இராணுவம் அணுவாயுதத் தாக்குதல்களை நடத்தும் திறனைநிரூபிக்கும் வடிவமைப்பு கொண்டவைஇந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பென்டகன்ஆசிய-பசிபிக்கில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை முறைகளை அதிகரிப்பதை அறிவித்துஇரண்டு அமெரிக்க ஏவுகணை எதிர்ப்பு அழிப்புஅமைப்புக்களை கொரியாவின் கடலோரப் பகுதியில் நிறுத்தியுள்ளது.
CNN உடைய கூற்றின்படி, “நெறிப்படுத்தல்” முன்னாள் பாதுகாப்பு மந்திரி லியோன்பானெட்டாவால் இயற்றப்பட்டுஅவருக்கு அடுத்தாற்போல் வந்துள்ள சகஹாகெல் இதற்கு “வலுவாக ஆதரவு கொடுக்கிறார்.” இத்திட்டம் அமெரிக்கஉளவுத்துறை மதிப்பீடுகளான “வடகொரிய இராணுவ பதிலடி குறைந்தளவேசாத்தியம்” என்ற மதிப்பீடுகளை அடித்தளமாக கொண்டதுவேறுவிதமாகக்கூறினால்பியோங்யாக் தீவிர அச்சுறுத்தல் எதையும் காட்டவில்லை.பெயரிடப்படாத அமெரிக்க அதிகாரிகள் வாஷிங்டன் இப்பொழுது அமெரிக்கஆத்திரமூட்டல்கள் வட கொரியாவில் “தவறாக கணிப்பீடுகளுக்கு வகைசெய்யலாம்” என்ற கவலைகளுக்கு இடையே சற்று பின்வாங்கியுள்ளது எனக்கூறியுள்ளனர்.  
ஆனால்ஆசியாவில் மிக ஆபத்தான வெடிப்புப்பகுதிகளில் வேண்டுமென்றேஎரியூட்டியபின்ஒபாமா நிர்வாகம் பின்வாங்கிக்கொள்ளும் என்பதற்கானஅடையாளங்களும் இல்லைஉண்மையில் புதன் அன்றுபாதுகாப்பு மந்திரிஹாகெல் வடகொரியா காட்டும் இராணுவ அச்சுறுத்தல் பற்றி வலியுறுத்திஇதுஓர் உண்மையானதெளிவானஆபத்தை காட்டுகின்றது என அறிவித்தார்.சொற்களை தேர்ந்தெடுத்தவிதம் கவனம் செலுத்தப்பட்டும்அச்சுறுத்துவதாகவும்உள்ளது. ஒரு தெளிவானஆபத்தை முன்வைக்கின்றது” என்னும்சொற்றொடரின் எதிரொலிகடந்தகால அமெரிக்க ஆக்கிரமிப்பு போர்களைநியாயப்படுத்தப் பயன்படுத்தப்பட்டது.
உறுதியற்றபிரிந்துள்ள வடகொரிய ஆட்சி வாஷிங்டன் வலையில் நேரடியாகவிழுந்துள்ளது எனலாம்அதன் ஆக்கிரோஷமான அறிக்கைகளும் மற்றும்வெற்று இராணுவ அச்சுறுத்தல்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உண்மையானபோராட்டத்துடன் எத்தொடர்பையும் கொண்டிராததுடன், சர்வதேச தொழிலாளவர்க்கத்தின் நலன்களுக்கு விரோதமானவை ஆகும்ஏகாதிபத்தியத்தைஎதிர்ப்பதற்கு முற்றிலும் மாறாகஇதன் ஸ்ராலினிச தலைவர்கள்அமெரிக்காவுடனும் அதன் நட்பு நாடுகளுடனும் பல தசாப்தங்களாக நீடித்திருக்கும்பொருளாதார முற்றகைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு உடன்பாடு காணவிரும்புவதுடன், நாட்டை உலக நிறுவனங்களுக்கு ஒரு குறைவூதியதொழிலாளர் அரங்காக திறந்துவிடவும் தயாராக உள்ளனர்.
தற்போதைய மோதல் காட்டுவது போல்பியோங்யாங் ஒரு சில அற்ப அணுவாயுதங்களைக் கொண்டிருப்பது அமெரிக்கத் தாக்குதலுக்கு எதிராக அதன்பாதுகாப்பை எவ்வகையிலும் அதிகரித்துவிடல்லைதென்கொரியாவிற்கு பறந்துசென்றுள்ள இரண்டு B2 Stealth குண்டுவீசும் விமானங்கள் நாட்டின் முழுதொழில்துறையையும் மற்றும் இராணுவத்திறனை அழிக்கப் போதுமான அணுஆயுதங்களைக் கட்டவிழ்த்துவிடும் திறன் உடையவை. அத்துடன் 1950களில்கொரியாவில் மூன்று ஆண்டுகளில் அமெரிக்க போர் கொன்ற 2 மில்லியன் வடகொரியக் குடிமக்களை விட அதிக கொலை செய்யும் திறனும் உடையவை.
அமெரிக்கஜப்பானிய மற்றும் தென் கொரிய நகரங்களைத் தாக்க முடியும் என்றுகூறும் வடகொரியாவின் அச்சுறுத்தல்கள் ஆளும் வர்க்கங்கள் சர்வதேசதொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த பயன்படுத்தும் அச்ச சூழ்நிலையைபலப்படுத்தவே உதவும். தொழிலாள வர்க்கம் ஒன்றுதான் போரைத் தடுக்கும்திறன் உடைய ஒரே சமூக சக்தி ஆகும்.
சர்வதேசச் செய்தி ஊடகத்தில் உள்ள விமர்சகர்கள் வட கொரிய ஆட்சியின்நடத்தைக்கு காரணங்களைப்பற்றி முடிவிலா ஊகங்களைக் கூறுகின்றனர்.ஆனால் கேட்கப்படாத உண்மையான வினா இதுதான்எதற்காக ஒபாமாநிர்வாகம் வடகிழக்கு ஆசியாவில் ஆபத்தான அழுத்த விரிவாக்கங்களில்ஈடுபடுகிறதுசமீபத்திய அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் டிசம்பர் 2010ல்எடுத்த நடவடிக்கைகளைவிட அதிகம் செல்கின்றன. அப்பொழுது அமெரிக்க மற்றும் தென்கொரிய கடற்படைகள் ஆத்திரமூட்டும்வகையில் வடகொரியாவிற்கும் சீனாவிற்கும் அருகே உள்ள நீர்நிலைகளில்கூட்டுப்பயிற்சிகளை நடத்தின.
ஒபாமாவின் வட கொரியா “நெறிப்படுத்தல்” இந்த “ஆசிய முன்னிலை” எனஅழைக்கப்படுவதில் ஒரு கூறுபாடுதான். ஆசிய முன்னலை என்பது தொடர்ந்துஆசியாவில் அமெரிக்க ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு விரிவான இராஜதந்திரபொருளாதார இராணுவ மூலோபாயமாகும்.பிராந்தியம் முழுவதும் அமெரிக்கா வெடிப்புத்தன்மை மிக்க தளங்களைஊக்குவிப்பதுடன், ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையே மோதலுக்கு உட்பட்டசென்காகு/டயோயுத் தீவுகள் என கிழக்கு சீனக் கடலருகே இருப்பவற்றில்மோதலை தூண்டியிருக்கும் வகையில் புதியவற்றை ஏற்படுத்துகிறது.ஒபாமாவின் முக்கிய இலக்கு வட கொரியாவை பொருளாதார அளவில்திவாலாக்குவதில்லைஆனால் அதன் நட்புநாடு சீனாவே இலக்காகும். இதைத்தான் வாஷிங்டன் போட்டித்திறன் உடைய ஆபத்தான நாடு எனக்கருதுகிறதுஉலகப் பொருளாதார நெருக்கடியின் ஆழ்ந்த தன்மையினால்உந்தப்பெற்ற நிலையில்அமெரிக்க ஏகாதிபத்தியம் தன் இராணுவ வலிமையைபயன்படுத்தி ஆசியா மற்றும் உலகம் முழுவதும் தன் மேலாதிக்கத்தைஉறுதிப்படுத்த முற்படுகிறது.
வட கொரியாவிற்கு எதிரான அதன் இராணுவ நடவடிக்கைகள் தன் நட்புநாடுகளான ஜப்பான்தென் கொரியா ஆகியற்றை தான் பாதுகாக்கும் என்னும்உத்தரவாதத்தை” வழங்கும் வடிவமைப்பைக் கொண்டவை எனக்கூறுகின்றதுஇரு நாடுகளில் இருந்தும் முக்கிய நபர்கள் அவற்றின் சொந்த அணுவாயுதங்களைவளர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்அமெரிக்காவின்உறுதியளிக்கும் சொற்கள்” வடகிழக்கு ஆசியாவில் அணுவாயுதப் போட்டியைதொடங்கும் நோக்கம் கொண்டவை. இது சமாதானத்தை பாதுகாக்கவல்ல மாறாக அமெரிக்க அணுவாயுத ஏகபோக உரிமையை வலுப்படுத்தவாகும்.
வட கொரியா அழுத்தங்களை அதிகரித்துள்ளது சீனா மீது பெரும் அழுத்தங்களைகொடுத்துள்ளது. அதேபோல் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சீனக் கம்யூனிஸ்ட்கட்சியின் தலைமைக்கும் அழுத்தம் கொடுத்துள்ளதுபெய்ஜிங்கில்பியோங்யாங்கைத் தொடர்ந்து ஆதரிப்பதா வேண்டாமா என்ற ஒருமுன்னோடியில்லாத பொது விவாதம் ஆரம்பித்துள்ளதுசீனத் தலைமைஎப்பொழுதுமே வட கொரிய ஆட்சியை தன்னுடைய வடகிழக்கு எல்லைகளில் ஒருமுக்கிய இடைத்தடை நாடு எனக் கருதி வருகிறது. ஆனால் இப்பொழுது கொரியதீபகற்பத்தில் இடைவிடா அழுத்தங்கள் என்பது ஒரு பெரிய இராணுவக்கட்டமைப்பை கட்டியெழுப்ப அமெரிக்காவாலும் அதன் நட்பு நாடுகளாலும்பயன்படுத்தப்படலாம் என அஞ்சுகிறது.
உண்மையில் ஏவுகணை எதிர்ப்பு முறைகளை அதிகரித்தல்அணுவாயுதத்திறன்உடைய விமானங்களின் பரிசோதனை ஓட்டம்  உள்ளடங்கிய பென்டகனின்கடந்த மாத நடவடிக்கைகள் அனைத்துமே அமெரிக்கா சீனாவிற்கு எதிராகஅணுவாயுதப் போர் நடத்தும் திறனை அதிகரித்துள்ளனமேலும் அமெரிக்கா ஒருபோரைத் தூண்ட விரும்பாமல் இருக்கலாம்ஆனால் அதன் ஆத்திரமூட்டல்கள் எப்பொழுதுமே ஆபத்தான முறையில் கட்டுக்கடங்காமல் போய்விரிவடைந்துவிடும் தன்மையைக் கொண்டுள்ளதுஒபாமாவின் ஆசியப்போருக்கான நெறிப்படுத்தல்” என்பது சந்தேகத்திற்கிடமின்றி செய்திஊடகத்திற்கு கவனமாக கசியவிட்டிருப்பதைவிட இன்னும் அதிகமான பலபடிகளை கொண்டுள்ளனபென்டகன் உடைய அனைத்து நிலைப்பாடுகளுக்கும்திட்டங்களில் கொரிய நெருக்கடி அமெரிக்காவையும் சீனாவையும் ஒரு பேரழிவுதரும் அணுவாயுத மோதலின் விளிம்பில் நிறுத்தும் வாய்ப்பைஉள்ளடக்கியுள்ளது.
அணுவாயுதப் போர் ஆபத்தை தீர்க்கக்கூடிய ஒரே தீர்வு அதன் மூலாதாரத்தைஅழிப்பதுதான். அதாவது திவாலாகிவிட்ட இலாபமுறையையும் மற்றும் உலகைபோட்டி தேசிய அரசுகளாக காலம்கடந்து விட்ட முறையில் அது பிரித்துவைத்திருப்பதை அகற்றுவதுதான்சீனாஅமெரிக்காஜப்பான்கொரியாமற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் அனைத்துவித தேசியவாதம்,நாட்டுப்பற்று இவற்றை நிராகரித்து போர் என்னும் காட்டுமிராண்டித்தனத்திற்குமுற்றுப்புள்ளி வைக்கும் உலகளவில் திட்டமிடப்பட்ட சோசலிசப்பொருளாதாரத்திற்கான ஒரு கூட்டு போராட்டத்திற்காக ஐக்கியப்பட்டவேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக