ஜூலை 05, 2012


பிரமிட் கனவுகள் - முர்ஸி 

பின்னால் பதுங்கியுள்ள 

இஹ்வானிய இராணுவ 

மூளைகள்   

  
கிப்து அன்று முதல் இன்று வரை மர்மங்கள் நிறைந்த தேசம்.
 உலகிற்கு நாகரீகத்தை அறிமுகம் செய்த காலம் முதல் அந்த 
மக்கள் 
சிறந்த மூளைவளம் மிக்கவர்களாகவே இருந்து வந்துள்ளனர். 
ரோமானியர்களைப்போலவோ, மொங்கோலியர்களைப்போலவோ, 
கிரேக்கர்களைப்போலவோ இந்த நாட்டின் மன்னர்கள் அயல் 
தேசங்களை கைப்பற்றி சாம்ராஜ்ஜியங்களை உருவாக்க 
முனையவில்லை. அதே வேளை  எகிப்தில் இறுக்கமான 
ஒரு உறுதிமிக்க இராணுவ அரசை பேணவும் தவறவில்லை. 
இது பிர்அவ்ன் முதல் ஹுஸ்னி முபாரக்வரை 
தொடரும் நிகழ்வு.
முஹம்மத் முர்ஷி ஐனாதிபதியானமை, அரைவாசி எகிப்தியர் இவரிற்கு 
முரணாக வாக்களித்தமை, இராணுவ கவுன்சிலின் பாரளுமன்ற கலைப்பு, 
பலமான அதிகாரங்களை இராணுவ கவுன்சில் தன்வசம் வைத்துள்ளமை, 
இராணுவத்தை முஹம்மத் முர்ஷி துருக்கியின் எர்பகான் ஸ்டைலில் 
சமாளிப்பாரா? போன்ற இன்னோரன்ன விடயங்கள் இன்று உலக 
ஊடகங்களின் பேசுபொருளாக மாறியுள்ளன.

முஹம்மத் முர்ஷி 
இன்றைய ஜனாதிபதி. எகிப்தின் பீல்ட் மார்ஷல். ஆனால் இந்த 
முஸ்ரிக்கு பின்னால் இஹ்வான்களின் பல உயர் தலைகள் மறைந்து 
கிடக்கின்றன. அவர்கள் தான் உண்மையான கிங் மேக்கர்கள். கியர் 
அவர்கள் கரங்களிளேயே உள்ளது. அல்-காய்தாவின் அய்மன் அல் 
ஸவாஹிரி உட்பட. அமெரிக்க சிறையில் இருக்கும் ஷேஹ் அப்துர் 
ரஹ்மான் உட்பட. 

நேற்றைய தினம் இஹ்வான்கள் பர்மாவில் (மியன்மார்) முஸ்லிம்களிற்கு
 எதிராக நடக்கும் பௌத்த கொலை தாக்குதல்களை கண்டித்துள்ளனர்.
 அந்த கண்டனம் வன்மையான மிரட்டல் கலந்த கண்டனமாகவே 
வெளியாகியுள்ளது.

உலகின் போராட்டங்களிற்கும், ஜிஹாத்களிற்கும் தலைமைத்துவம் 
வகித்த பலர் அடிப்படையில் இஹ்வானிய சிந்தனை தாக்கத்திற்கு 
உட்பட்டவர்களே. தளபதி கத்தாப் (பின்னாள் ஸலபி), தளபதி 
அப்துல்லாஹ் ஆஸம், ஷேஹ் உஸாமா, ஷேஹ் அன்வல் 
அல் அவ்லாகி (பின்னாள் ஸலபி) போன்ற பல இஸ்லாமிய 
போராட்டங்களை முதன்மைபடுத்தியவர்கள் இஹ்வான் எனும் 
குளத்தில் குளித்தவர்களே.

இஹ்வான் அல் முஸ்லிமீன்
முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் என பலராலும் அறியப்பட்ட 
இந்த இயக்கம் வெறுமனே தர்பியர் எனும் பயிற்ச்சிகளை வழங்கும் 
ஒரு இஸ்லாமிய இயக்கமல்ல. இந்த இயக்கம் அதன் ஆரம்பகாலம் 
முதல் அல் குர்ஆனை எகிப்தின் அரசியல் யாப்பாக மாற்ற வேண்டும் 
என்பதில் குறியாக இருந்து வந்துள்ளது. “இஸ்லாமிய ஆட்சி” 
தொடர்பாக ஹசன் அல் பன்னாஹ், செய்யத் குதுப், அப்துல் 
காதிர் அவ்தா போன்ற இதன் தலைவர்கள் நிறையவே சிந்தித்துள்ளனர்.
 எழுதியுள்ளனர். பேசியுள்ளனர். ஆனால் அவர்களிற்கு அதனை 
செயற்படுத்தும் அதிகாரம் தான் கிடைக்கவில்லை.


ஜமால் அப்துல் நாஸர்
 அல் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தை அடியோடு கருவருத்தார். 
இதற்காக அவரால் அமைக்கப்பட்ட “இரகசிய பொலீசார்” மிகவும் 
கொடூரமான முறையில் சகோதரத்துவ இயக்கத்தினரை கொலை 
செய்தனர். அங்கவீனர்களாக, உளவியல் நோயாளிகளாக மாற்றினர். 
சித்திரவதை செய்தனர். பல்லாண்டுகாலம் சிறையில் அடைத்தனர்.

அதேவேளை எகிப்திய இராணுவம் நாஸரால் புணரமைக்கப்பட்டது. 
நவீன ஆயுதங்கள், உபகரணங்கள் எகிப்திய இராணுவத்தில் 
உட்புகுத்தப்பட்டன. போரியல் ஆற்றல் மிக்க ஆபிரிக்காவின் முதன் 
நிலை இராணுவமாக உருவாக்கப்பட்டது. இதனை செய்து முடித்தவர் 
ஜமால் அப்துல் நாஸர்.

சோவியத் ரஷ்யாவின் (U.S.S.R.) பாரிய பங்களிப்பினாலேயே இந்த 
இராணுவ கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. உதாரணமாக 06 நாட்கள் 
அரபு-இஸ்ரேல் யுத்தத்தில் ரஷ்ய டீ70 டாங்கிகள், ரேடார் சாதனங்கள் 
போன்றன அமெரிக்காவிற்கு புதுமையளித்தன.

“இஸ்லாமிய சோஸலிசம்” எனும் மார்க்கத்தை எகிப்திய முஸ்லிம்கள் 
மத்தியில் அறிமுகப்படுத்திய பெரிய தாகூத் ஜமால் அப்துல் நாஸராகும்.

அன்வர் சதாத்
வர் இரண்டாவது தாகூத். கோட் சூட் போட்டு, சிகார் புகைத்த நவீன 
பிர்அவ்ன். இவர் காலத்தில் மீண்டும் எகிப்திய இாணுவம் பல 
மாற்றங்களிற்கு உள்ளாக்கப்பட்டது. அமெரிக்க சார்பான கோட்பாட்டியலை 
மெல்ல எகிப்தில் அறிமுகப்படுத்தியவர் இவர். “பீல்ட் மார்ஷல்” எனும் 
அனைத்து படைகளையும் கட்டுப்படுத்தும் பொருப்பை ஜனாதிபதியின் 
கையில் கொண்டு வந்த பெருமைக்குரியவர் இவர்.

கப்பலில் எழுதப்பட்ட “கேம்ப் டேவிட் ஒப்பந்தம்” எனும் துரோக 
சாஸனத்தில கையெழுத்திட்டதன் மூலம்  எகிப்திய மக்கிளிற்கும், 
அரபுலக முஸ்லிம் உம்மாவிற்கும் பெரிய துரோகத்தை செய்த 
எகிப்திய அதிபர் இவர்.
சகோதரர் “இஸ்லாம் பூலி”யால் ஒரு இராணுவ அணிவகுப்பில் 
வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

ஹுஸ்னி முபாரக் 
தன் மதிப்பிற்குரிய இரண்டு முன்னோர்களான நம்ரூத்தியவாதிகளான 
நாஸர், சதாத் போன்றவர்களின் வழியில் அவர்கள் விட்ட தவறுகளை 
தான் விடாமல் கச்சிதமாக எகிப்திய அரசை நிர்வகித்தவர். துருக்கியை 
போல அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் அடைக்கலம் நாடி நின்றவர். 
இஸ்ரேலுடன் கள்ள தொடர்புகளை வைத்திருந்த முஸ்லிம் மாபியாதான் 
இந்த முபாரக்.

இயங்க முடியாமல் தவித்த இஸ்ரேலிற்கு நிலத்தடி குழாய்கள் மூலம் 
பெற்றோலை வழங்கி அதன் ஆயுத தொழிற்சாலைகளிற்கு புத்துயிர் 
அமைத்தவர் இவர். இன்று காஸாவிலும், மேற்கு கரையிலும் சூடப்படும் 
ஒவ்வொரு பித்தளை குண்டுகளிலும் முபாரக்கின் முத்திரை உள்ளது. 
மசூதிகளில் போடப்படும் குண்டுகளில் இவர் உதவி உள்ளது. இஸ்ரேல் 
எனும் சட்டவிரோத ஸியோனிஸ தேசம் இவர் வழங்கிய எரிபொருள்களை 
கொண்டே தனது இரசாயன, ஆயுத தொழிற்சாலைகளை 
உருவாக்கியமையே வரலாறு.

எகிப்தின் இராணுவத்தினை நவீன மயமாக்கள் என்பதில் முன்னைய 
இருவரை விடவும் வித்தியாசமாக செயற்பட்டவர் முபாரக். சோவியத் 
ரஷ்யா, சீனா, வடகொரியா, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், 
இத்தாலி, ஸ்வீடன் போன்ற நாடுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 
ஆயுதங்களை கொள்வனவு செய்தவர். அனைத்து தேசங்களின் நவீன 
சண்டை விமானங்களையும் தன்னகத்தே கொண்ட ஒரே ஒரு தேசம் 
எகிப்தாகும்.

முசோலினியின் காலத்தில் இருந்த இத்தாலி ஜெனரல்களையோத்த 

அதிக அதிகாரம், அதிக பணம், அதிக புகழ் போன்றவற்றை தமக்கு 
உரி்த்தாக்கிக்கொண்ட ஜெனரல்களை எகிப்தில் தலையெடுக்க 
அனுமதித்தவரும் இவரே. அதனாலேயே இன்றும் முஸ்ரிக்கு 
அழுத்தம் கொடுக்கும் கட்டமைப்பாக எகிப்திய இராணுவ தலைமை 
சவாலாக நிற்கிறது.

இன்றைய களம்
இந்த மூன்று தாகூத்களும் இஹ்வான்களிற்கு எதிராக பாரிய 
அநியாயங்களை செய்துள்ளனர். அவர்கள் குரல் ஒலிக்காதவாறு தங்கள் 
இராணுவ சப்பாத்துக்களால் அவர்கள் குரல்வளையை நெரித்தவர்கள். 
வெளிவராத பல புதைகுழிகளிற்கு சொந்தக்காரர்கள் இவர்கள். இதை 
அமெரிக்கா என்றுமே கேட்காது. கூகுள் ஏர்த் ஒரு போதும் காட்டாது.

அமெரிக்கா செயற்கையாக வடிவமைத்த அரேபிய வசந்தம் என்ற 
பெயரிலான ஏகாதிபத்தியத்திற்கான பாதை இப்போது சற்று வழி 
பிசகியுள்ளது. இஹ்வான்களின் எழுச்சியின் சிவப்பு விளக்கு பென்டகனில் 
அணையாமல் எரிந்து கொண்டேயிருக்கிறது.

சோஷலிஸ சார்பாளர் அப்துல் நாசரை எதிர்க்க இதற்கு முன்னரே பேரம் 
பேசலில் அமெரிக்க சீ.ஐ.ஏ. இஹ்வான்களுடன் இணைந்து 
செயலாற்றியுள்ளது. அவர்களது பிரச்சாரங்கள் உலகம் முழுவதும் 
சென்றடைய துணைசெய்துள்ளது.  எகிப்தில் இஹ்வான்களின் அபரீதமான 
எழுச்சியை கண்டு உடனடியாகவே தனது பழைய பாட்னருடன் 
பேசியுமுள்ளது அமெரிக்கா. “இஸ்லாம் ஒன்றே தீர்வு” எனும் 
இஹ்வான்களின் முழக்கம் இனி மெல்ல ஒலிக்கும் என்பதில் இப்போது 
அமெரிக்காவிற்கு உறுதி.

இஹ்வான்களின் உலகலாவிய தலைமைத்துவம் எனும் கருத்தியல் 

நிச்சயமாக கிலாபா கனவுகளுடன் உழைக்கும் ஹிஸ்புத் தஹ்ரீர் 
அமைப்பினரிற்கு பாரிய பின்னடைவே. அவர்கள் என்னதான் இராஜதந்திர 
ரீதியில் இதற்கு காரணங்கள் சொன்னாலும் எதிர்வரும் காலங்களில் 
உலக விவகாரங்கள் தொடர்பாக இஹ்வான்கள் கெய்ரோவில் விடும் 
ஒரு பிரகடனம் இவர்களின் பல வருட உழைப்பை வீணாக்கிவிடும்.

ஸினாய் பிரதேச மீட்பு, பலஸ்தீன உருவாக்கம், ஜோர்தானில் 
இஸ்லாமிய அரசை உருவாக்கள், டுனீஸியா, அல்ஜீரியா, மொராக்கோ 
போன்ற நாடுகளில் இஸ்லாமிய அரசை உருவாக்கள், துருக்கியை 
விடவும் இராணுவ பலமிக்க நாடாக எகிப்தை உருவாக்கள் என 
இஹ்வான்களின் திட்டம் பாரியது.

அரசயில் வியூகங்களிற்கு அப்பால் ஈரானை எதிர்கொள்ள தக்க ஒரு 
வலிமைமிக்க முஸ்லிம் இராணுவம் இன்று எகிப்திடமே உள்ளது. 
மஹ்தி இராணுவம் என ஷியாக்களால் பெருமைப்படும் இரண்டு 
இராணுவங்களான ஈரானிய குடியரசின் இராணுவத்தையும், லெபனானின் ஹிஸ்புல்லாக்கைளையும் வெற்றி கொள்ளத்தக்க பலமிக்க நாடு எகிப்து. 
அகண்ட பைசாந்திரிய ஷியா இராஜியத்தை முகங்கொடுக்கும் நாடாகவும், 
அகண்ட ஸியோனிஷ யூத இராஜியத்தை முகங்கொடுக்கும் நாடாகவும் 
இன்று எம்மால் இனங்காணகூடிய தேசம் எகிப்தாகும். அந்த வகையில் 
இந்த ஷியா மற்றும் ஸியோனிஸ சக்திகளை முகங்கொடுக்கும் 
தேசமாக எகிப்தின் இஹ்வான்களின் உதயத்தை நாம் உவகையுடன் 
வரவேற்கலாம்.

இதையெல்லாம் தாண்டி அமெரிக்காவின் சீ.ஐ.ஏ. முர்ஸியுடன், 
இஹ்வானிய மிதவாத தலைவர்களுடன், எகிப்திய ஜெனரல்களுடன், 
சோஷலிஸட்களுடன், எதிர்கட்சிகளுடன், கொஸ்பல் கிறிஸ்தவர்களுடன், 
அலெக்ஸான்டிரியா பிரிவினைவாத சிந்தனையாளர்களுடன் என தனியான 
டீல் பேசுகிறது. எங்கு எல்லை கடந்தாலும் அரசை கவிழ்க்கும் வழமையான 
நெட்வோர்க்கை உருவாக்க பார்க்கிறது சீ.ஐ.ஏ.. இது அதற்கு கைவந்த
 கலை என்பது வேறுவிடயம்.

எகிப்தை இரண்டாக உடைத்து 
அலெக்ஸாண்டிரியாவை தனியாக 
பிரிக்கும் அமெரிக்க யூத 
கனவுகளிற்கு ஆப்பு வைப்பாரா முர்ஸி?

Abu Sayyaf 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக