ஜூலை 05, 2012


அமெரிக்காவை நோக்கிச் சாய்கிறது இலங்கை


ஒபாமாவின் நிர்வாகம் ஆசியாவில் சீனாவின் செல்வாக்கைப் பலவீனப்படுத்ததனது இராஜதந்திர மற்றும் மூலோபாய நடவடிக்கைகளை தீவிரப்படுத்துகின்றநிலையில்இலங்கை அரசாங்கம் தனது பாதையை மாற்றுகிறதுசீனாவில்இருந்து தன்னை சற்று தள்ளி நிறுத்திக் கொள்ளும் இலங்கை அமெரிக்காவுக்குநெருக்கமாகும் முயற்சிகளில் இறங்குகிறது.
இந்த மாதத்தின் ஆரம்பத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஷங்ரி-லா பாதுகாப்புப்பேச்சுவார்த்தைகளில் இந்த அம்சம் வெளிப்படையாக இருந்ததுஇலங்கையின்பாதுகாப்புச் செயலரான கோத்தபய ராஜபக்சவும் அயலுறவுத் துறைஅமைச்சரான ஜி.எல்.பீரிஸும் அமெரிக்க இராணுவ
 ஊழியர்களின் கூட்டுத்தலைமையகத் தலைவரான ஜெனரல் மார்ட்டின் டெம்ப்சேவை ஜூன் 5அன்றான பேச்சுவார்த்தைகளுக்கு இடையில் சந்தித்துப் பேசினர்இலங்கையின்வேண்டுகோளின் பேரில் இலங்கைக்குகுறிப்பாக இலங்கையின் கடற்படைக்கு,இராணுவ உதவியை அளிக்க டெம்ப்சே ஒப்புக் கொண்டார்.
அதிக விவரங்கள் வெளியாகவில்லைஎன்றாலும் பாதுகாப்பு வீரர்களின்திறனை உயர்த்துவதற்கு மேம்பட்ட பயிற்சி வாய்ப்புகளை வழங்க இராஜபக்சவிடுத்த வேண்டுகோளுக்கு அமெரிக்காவும் இந்தியாவும் சாதகமான பதிலைஅளித்தன என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகத்தின் வலைத் தளம்குறிப்பிட்டதுகோத்தபய இராஜபக்ச ஜனாதிபதி மஹிந்தா இராஜபக்சவின்சகோதரர் ஆவார்.
இந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டதுஒரு கடல் சூழ்ந்த நாடாகஇந்தியப்பெருங்கடல் பகுதியில் அமைந்திருக்கும் கடல் பாதைகளின் பாதுகாப்பைவலுப்படுத்துவதில் இலங்கையின் கடற்படை ஆற்றத்தக்க ஒரு முக்கியமானபாத்திரத்தை இந்த சந்திப்புகள் அங்கீகரித்தன என்பதோடுசர்வதேசப்பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இந்நாடுகளின் ஒன்றுபட்டமுயற்சியைக் கொண்டுவருவதற்கு நெருக்கமாய் ஒத்துழைக்கவும் உறுதிப்பாடுகொண்டன.
சர்வதேசப் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது பற்றிய குறிப்பு இந்தகடற்படைக் கூட்டணியை அபிவிருத்தி செய்வதன் உண்மையான நோக்கத்தைசுலபமாய் மங்கச் செய்கிறது. 2020 ஆம் ஆண்டுக்குள்ளாக ஆசிய பசிபிக்பிராந்தியத்தில் இருக்கும் அமெரிக்காவின் மொத்தப் படைகளில் கடற்படையின்அளவு 60 சதவீதம் என்கிற அளவுக்கு அதனை அமெரிக்கா அதிகப்படுத்தஇருப்பதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலரான லியோன் பனெட்டா சிங்கப்பூர்கூட்டத்தில் அறிவித்தார்
மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து எரிசக்தி மற்றும் கச்சாப் பொருட்களைப் போக்குவரத்து செய்வதற்கு சீனாவால் பயன்படுத்தப்பட்டுவருகின்ற முக்கியமான கடல் வழிகளைக் கட்டுப்படுத்துவதையே கடற்படைசக்தி மீதான அமெரிக்காவின் கவனம் நோக்கமாய்க் கொண்டிருக்கிறது.சீனாவுடன் மோதல் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில்அத்தியாவசியமான சீனஇறக்குமதிகளை நிறுத்தி ஒரு பொருளாதார முற்றுகையை ஏற்படுத்துவதற்குஅமெரிக்க கடற்படையால் இயலுவதாக இருக்கும்.
மூலோபாயரீதியாக இலங்கைஇந்தியத் துணைக் கண்டத்தின் தென்முனையில்இந்தியப் பெருங்கடலில்மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில்இருந்தான முக்கியமான கடல் வழிகளின் அருகே அமையப் பெற்றுள்ளது.அமெரிக்கா-சீனா இடையே ஏற்படக் கூடிய மோதலில்இலங்கைஇரண்டாம்உலகப் போரில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு அது ஆற்றியதைப் போன்ற ஒருஆதாரமான சரக்கு மற்றும் தடவாளப் போக்குவரத்துப் பாத்திரத்தை ஆற்றமுடியும்இரண்டாம் உலகப் போரில் சிங்கப்பூரும் பர்மாவும் ஜப்பானியதுருப்புகளிடம் வீழ்ந்து விட்ட பிறகுநேச நாடுகளின் தென்கிழக்கு ஆசியப்படையின் தலைமையகம் இலங்கையின் மத்திய மலைப் பகுதியில்அமைந்திருக்கும் கண்டிக்கு மாற்றிக் கொள்ளப்பட்டது
ஜனாதிபதி மஹிந்தா இராஜபக்ச பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள்(LTTE)அமைப்புக்கு எதிரான தனது அரசாங்கத்தின் இனவாதப் போரின்பொருளாதாரஅரசியல் மற்றும் இராணுவ ஆதரவிற்கு சீனாவையேபெருமளவில் நம்பியிருந்தார்அதற்கான பிரதிபலனாய்தீவின் தெற்குமுனையில் ஹம்பந்தோட்டாவில் ஒரு பெரும் துறைமுகத்தைக் கட்டுவதற்குஅவர் சீனாவை அனுமதித்தார்.
2009 டிசம்பரில்இலங்கைபோருக்குப் பின் அமெரிக்க மூலோபாயத்தைமறுவரைவு செய்தல் என்ற தலைப்பில் அயலுறவு விவகாரங்களுக்கானஅமெரிக்க செனட் குழு அளித்த ஒரு அறிக்கைஅமெரிக்கா என்ன செலவிலேனும்இலங்கையை இழந்து விடக் கூடாது என்று அறிவித்ததுஇலங்கையைஅமெரிக்காவின் சுற்றுவட்டத்திற்குள் கொண்டுவருவதற்கு தீவிரமானமுயற்சிகள் மேற்கொள்ளப்பட அந்த அறிக்கை அழைப்பு விடுத்தது.
இலங்கையின் இராணுவம் நடத்திய ஒரு கொடூரமான போரில், 2009 மேமாதத்தில் LTTE தோற்கடிக்கப்படுவதற்கு முன்னதாய்பத்தாயிரக்கணக்கிலானஅப்பாவிப் பொதுமக்களும் உயிரிழந்தனர்இலங்கையின் போரை ஒபாமாநிர்வாகம் ஆதரித்திருந்த போதிலும் அமெரிக்காவுடன் நெருக்கமாய் அணிசேரஇராஜபக்சவுக்கு நெருக்குதல் அளிக்கும் பொருட்டு போர்க் குற்ற விசாரணைகள்குறித்த மிரட்டலைப் பயன்படுத்தி வந்திருக்கிறது.
இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில்நீதிசமத்துவம்பொறுப்புடைமை மற்றும்நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதி செய்ய இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்புவிடுக்கின்ற ஒரு தீர்மானத்தை ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்காகொண்டு வந்து அத்தீர்மானம் நிறைவேறியதுஇலங்கையில் தமிழ்சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கம்இத்தீர்மானத்திற்கு ஒருபோதும் இருந்திருக்கவில்லைபதிலாகஇலங்கையின்மீதான இராஜதந்திர நெருக்குதலை அமெரிக்கா இன்னும் தீவிரப்படுத்தக் கூடும்என்பதான ஒரு எச்சரிக்கையாக மட்டுமே அது இருந்தது.
இராஜபக்ச அரசாங்கம் அமெரிக்காவுடனான தனது உறவினைச் சீர்செய்துகொள்ள முடிவெடுத்ததுபோருக்குப் பிந்தைய நல்லிணக்கத்திற்கு அரசாங்கம்என்ன செய்து கொண்டிருந்தது என்பது குறித்த ஒரு அறிக்கையைவழங்குவதற்குஅயலுறவுத் துறை அமைச்சரான பீரிஸை மே 19 அன்றுஅமெரிக்காவுக்கு அது அனுப்பி வைத்தது.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அரசாங்கத்தின்மறுநிவாரண மற்றும் மறுகட்டுமானப் பணிகள் குறித்து பீரிஸ் அளித்தஅறிக்கைக்கு அமெரிக்க இராணுவத் தலைவரான டெம்ப்சேயும் இந்தியபாதுகாப்பு அமைச்சரான .கே.அந்தோனியும் சிங்கப்பூரில் பாராட்டுதெரிவித்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றனதமிழர்கள்பெரும்பான்மையாக வாழ்கின்ற இப்பகுதிகள் இன்னும் இராணுவ ஆக்கிரமிப்பின்கீழ் தான் இருக்கின்றன என்கிற உண்மைக்கு அமெரிக்காவும் இந்தியாவும்கண்ணை மூடிக் கொண்டனஅங்கு ஜனநாயக உரிமைகள் தீவிரமாய்முடக்கப்பட்டிருக்கின்றன என்பதோடு சுமார் 17,000 பேர் இன்னும் தங்களதுவீடுகளுக்குத் திரும்ப வழியின்றி அகதி முகாம்களில் தான் தவித்துவருகின்றனர்
ஆசியாவிலான ஒபாமா நிர்வாகத்தின் மூர்க்கமான தலையீட்டிற்கு இராஜபக்சஅரசாங்கம் தகவமைத்துக் கொள்வது அப்பட்டமாகிக் கொண்டிருக்கிறது.பிராந்தியத்தில் இருக்கும் அதன் சக நாடுகளில் போலவே இலங்கையின் ஆளும்வர்க்கமும் ஒரு அடிப்படையான இருதலைக் கொள்ளி நிலையைஎதிர்கொள்கிறதுஏற்றுமதிச் சந்தையாகவும் உதவி மற்றும் முதலீட்டுக்கானஆதாரமாகவும் இது இன்னும் சீனாவையே பெருமளவிற்குச் சார்ந்திருக்கிறது.அதே நேரத்தில் உலகின் வலிமையான இராணுவ சக்தியும்அத்துடன் சர்வதேசநாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகிய சர்வதேச அமைப்புகளிடம் இருந்துநிதி உதவி கிட்டுவதைத் தீர்மானிப்பதில் ஒரு முக்கியமான பாத்திரத்தைஆற்றுகின்றதுமான ஒரு சக்தியில் இருந்து முற்றிலுமாய் தன்னைஅந்நியப்படுத்திக் கொள்வதற்கும் அதனால் இயலாது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஊசலாடிக் கொள்வதற்குஇலங்கைக்கு இருந்த இடம் மறைந்து கொண்டிருக்கிறதுசீரழிந்து செல்லும்வாழ்க்கைத் தரங்கள் குறித்த பரந்த மக்களின் கோபத்தைத்திசைதிருப்புவதற்கான ஒரு வழியாகஇலங்கைக்கு எதிரான போர்க்குற்றகுற்றச்சாட்டுகளை வைக்கும் சர்வதேச சதியினை மிகவும் எச்சரிக்கையாககண்டனம் செய்வதை இராஜபக்சவும் அவரது அரசாங்கமும் தொடர்ந்து செய்துவருகின்றனர்என்ற போதிலும்சாய்வு அதிகமாய் அமெரிக்காவை நோக்கியதாய்இருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக