ஏப்ரல் 06, 2011

ஆறு பாரிய பூகம்பங்கள் உலகை உலுக்கும் அபாயம்

உலகில் இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம் என்று இலங்கை யின் பேராதனைப் பல்கலைக்கழக நிபுணர்கள் குழு ஒன்று எதிர்வு கூறியுள்ளது.
உலகளாவிய ரீதியில் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய 05 றிச்டர் அளவுகோலுக்கு மேற்பட்ட இந்த ஆறு பூகம்பங்களில் ஒன்று இந்தோனேசியாவில் ஏற்படலாம் என்றும் அது இலங்கையிலும் பாதிப்புக்க ளை ஏற்படுத்தும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியற் கல்விப் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன தலைமையிலான புவியியல் நிபுணர்கள் குழு இந்த ஆய்வை மேற் கொண்டது.
இதன்போது ஏப்ரல் 03ஆம் திகதிக்கும் 10ஆம் திகதிக்கும் இடையில் ஜப்பானிலும் ஏப்பிரல் 06 ஆம் திகதிக்கும் 10 ஆம் திகதிக் கும் இடையில் சீனாவிலும் ஏப்பிரல் 10ஆம் திகதிக்கும் 15ஆம் திகதிக்கும் இடையில் துருக்கி, ஈரான், நியூசிலாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளையும் பூகம்பங்கள் தாக்கும் வாய்ப்புக்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் ஜப்பானில் ஏப்பிரல் 16ஆம் திகதிக்கும் 20ஆம் திகதிக்கும் இடையில் மீண்டும் பூகம்பம் தாக்கும் வாய்ப்பு வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தோனேசியாவில் ஏற்படக் கூடிய பாரிய பூகம்பத்தினால் இலங் கையிலும் அதன் பாதிப்பு உணரப் படலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர். ஏற்கெனவே 2004ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவுக்கருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பத்தினால் தோன்றிய சுனாமி இலங்கையில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியது குறிப்பிடத் தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக