அக்டோபர் 25, 2011

ஈரான் மீது போர் அறிவிப்பு செய்யும் சாத்தானிய தேசங்கள்

து வரலாற்றின் கனதியான காலம். ஏன் 
எச்சரிக்கை மிக்கதும் பயங்கரமிக்கதுமான காலம் என்று கூட சொல்லாம்.
ஒரு புரம் உலகலாவிய முஸ்லிம் உம்மாவின் சடுதியான எழுச்சி. மறு 
புரம் சாத்தானிய தேசங்களின் முஸ்லிம்கள் மீதான வியப்பூட்டும் 
தாக்குதல்கள் என உலக சம நிலை குழம்பி நிற்கிறது. நிற்கட்டும்.


உலகம் காலத்திற்கு காலம் பல பயங்கரங்களை கண்டுள்ளது. பகிரப்பட்ட
நம் முப்பாட்டன் கால வரலாற்றில் இருந்து பார்த்தால் “ஜெங்கிஸ்கானின்
படையெடுப்பு”, “சிலுவை போராளிகளினதும் சிலுவை தேசங்களினதும்
வருகை”, “ஹிட்லிரின் நாஸி எழுச்சி”, “பலஸ்தீன் மீதான ஸியோனிஸ 
பயங்கரவாதம்” என இதன் பட்டியல் நீளமானது. இப்போது 
“பயங்கரவாதத்திற்கு எதிரான உலக அமையாளர்களின் யுத்தம்” எனும்
இன்னொரு பல்நாட்டு பயங்கரவாதிகளின் ஆடுகளம் இரத்தம் குழைந்த 
ஈர மண்ணில் தன் காலடி தடங்களை பதித்துள்ளது. அதன் பாதங்கள் 
ஆப்கானில் ஆரம்பித்து ஈராக், லிபியா.. என தொடர்கிறது.

முக்கோண முட்டாள் தேசங்களாகிய அமெரிக்கா,இஸ்ரேல்,சவுதி அரேபியா
என்பன இணைந்து இப்போது ஈரானின் மீதான தாக்குதலிற்கான 
திட்டமிடல்களில் இறங்கியுள்ளன. அதன் ஒரு கட்டமாக ஈரானை 
நேரடியாகவே தாக்குவோம் என “பென்டகன் ஒலி பெருக்கி” மூலம்
கூறியுள்ளன.

அமெரிக்கா ஹைஜேக் செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவும் 
பிரான்ஸும் ஹைஜேக் செய்யப்பட்டுள்ளன. இந்த நாடுகள் அதன் 
சொந்த நாட்டு மக்களின் கட்டுப்பாட்டில் இல்லை. இதை செய்வது 
ப்றீமேஷன். இதற்கா செய்து கொடுப்பது ஸியோனிஸம்.


உலக பயங்கரவாத தேசங்களான அமெரிக்கா,இஸ்ரேல்,சவுதி அரேபியா 
போன்றவை வேகமாக உலகை மூன்றாம் உலக யுத்தத்தினுள் தள்ள 
முற்பட்டுள்ளன. இதனால் பல நாடுகள் இந்த யுத்த களத்தில் உள் 
இழுக்கப்படலாம். இறுதியில் இஸ்ரேலும், ஈரானும் ஏன் அமெரிக்காவும் 
உலக வரைபடத்தில் பிச்சைக்கார நாடுகளாக மாறி நிற்கலாம். இந்த 
தேசங்களின் தலைகள் இந்த யுத்தத்தால் ஒரே வீச்சில் வெட்டப்படும். 
இதை வெட்டுபவர்கள் மேற்குலகின் ஜேர்மனியாகவோ அல்லது 
இஸ்லாமிய எழுச்சியின் மறை கரமாக செயற்படும் இஹ்வான்களாகவோ
இருக்கலாம்.

இந்த மோதல் உண்மையில் மேற்கின் கிறிஸ்தவத்திற்கும் இஸ்லாத்திற்கும்
இடையிலான நாகரீக முரண்பாடுகளின் உச்சத்தில் நிகழும் நிகழ்ச்சி 
நிரலாகும். எமது முட்டாள்தனமான அரசியல் தலைவர்களும், நன்கு 
கட்டமைக்கப்பட்ட ஊடகங்களும் எம்மை இந்த களத்தினுள் வலு 
கட்டாயமாக இழுத்துச் செல்லப்போகின்றன. பொய்களின் உச்சத்தில் 
வைத்து நரகம் எனும் படுகுழியில் மனித இனத்தை தள்ளப்போகின்றன.
இதைத்தான் சாத்தானிய இராட்சியத்திற்காக கனவு காணும் ப்றிமேஷன் 
வேண்டி நிற்கிறது.

இது எவ்வாறு நிகழும்? எப்படி நிகழ்த்தப்படும் எனும் கேள்விகள் எம்முள் 
எழலாம். ஆம் இவையனைத்தும் உலகலாவிய உளவியல் யுத்தத்தின்
ஊடாக நிகழ்த்தப்படுபவை. எம் மனக்கண்களின் முன்பு ஈராக்கின் யுத்தம் 
இன்றும் நிழலாடுகிறது. ஊடகங்கள் ஊடாக மனத மூளையின் உச்சங்களில் 
வருங்கால யுத்த அறிக்கையை வாசிக்கின்றார்கள். இதை வாசிப்பவர்கள் 
அமெரிக்காவும் இஸ்ரேலும் சவுதி அரேபியாவுமே. நாம் எம்மை அறியாமல் 
நகர்த்தப்படுகிறோம். நகர்கிறறோம். யுத்த முனைகளை நோக்கி. ஒன்று
அது இஸ்லாத்தின் களமாக இருக்கும். அல்லது சாத்தானிய களமாக 
இருக்கும். இதோ சில உலகலாவிய மூளைச்சலவையில் வெளுக்கப்பட்ட
உண்மைகள்...

  • ஈரான் அமெரிக்க மண்ணில் அமெரிக்க தலைவர்களையும் அதன்
         தோழமை தலைவர்களையும் படுகொலை செய்ய பல நாசகார
         திட்டங்களை தீட்டுகிறது.
  • இஸ்ரேலும் அமெரிக்காவும் இராணுவ மற்றும் அரசியல் ரீதியில் மிக
          மிக நெருக்கமாக செயற்பட்டால் போதாது. செயலிலும் இறங்க
          வேண்டும்.
  • அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய சுயாதீன எல்லைகள் அகட்டப்படல் 
         வேண்டும்.
  • ஈரானிய அரசு பைத்தியக்காரத்தனமானது. அதன் முல்லாக்கள்
         முட்டாள்கள். இவர்கள் அமெரிக்காவுடன் 1979 முதல் சண்டையிட்டு 
         வருகிறார்கள்.
  • இஸ்ரேலிய அரசிற்கும் அப்பாவி யூதர்களிற்கும் வேறு வழி எதுவும் 
         இல்லை தங்கள் தேசத்தையும் தங்கள் புனித பெருமை மிகு 
         மார்க்கத்தையும் பாதுகாத்துக்கொள்ள. ஆக ஈரான் மீதான யுத்தம் 
         அவசரமாக ஆரம்பிக்கப்படல் வேண்டும்.
  • பராக் ஒபாமாக ஒன்றும் கோழிக் குஞ்சல்ல வெறுமனே 
         பார்த்துக்கொண்டிருக்க, ஈரானானது ஈராக்கையும் சவுதி 
        அரேபியாவையும் ஆக்கிரமிக்க மற்றும் அமெரிக்க நட்பு நாடுகளை
         தாக்க,  அதன் தலைவர்களை படுகொலை செய்ய.
  • ஈரானிய அணுஆயுத வளம் நாளை உலகை நாசம் செய்ய வல்லது.
 Abu Sayyaf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக