மே 15, 2012


உலகில் முதன் முதலில் "ரோபோ இயந்திரத்தை" அறிமுகம் செய்தவர் முஸ்லிம்களே.!!!


சவூதிஅரேபியா, ஏப்ரல் 30 : உலகின் முதலவாது ரோபோ இயந்திரம் முஸ்லிம்களால் கண்பிடிக்கப்பட்டது என உம் அல்குரா பல்கலைக்கழகத்தின் தலைவர் பக்ரி அஸாஸால் தெரிவித்துள்ளார். புனித மக்கா நகரின் உம் அல்குரா பல்கலைக்கழகத்தில் புத்துருவாக்க மற்றும்விஞ்ஞான மன்றம், பல்கலைக்கழகத் தலைவர் பக்ரி அஸாஸால் புதன்கிழமையன்று திறந்துவைக்கப்பட்டது. மூன்று நாட்கள் நடைபெறவுள்ள புத்துருவாக்க மற்றும் விஞ்ஞான மன்ற நிகழ்வுகளில் சவூதிஅரேபியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள், ஆய்வாளர்கள் மற்றும் புத்தருவாக்க சிறப்புத்தேர்ச்சியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஆரம்ப வைபவத்தில் உரையாற்றிய உம் அல்குரா பல்கலைக்கழகத்தின் தலைவர், விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு பற்றி உரை நிகழ்த்தினார்.

"ஹிஜ்ரி 6ஆம் நூற்றாண்டில் வாழந்த அபுல்இஸ் பின் இஸ்மாயில் பின் அல்ராஸ்அல்ஜஸாரி எனப்படும் முஸ்லிம் விஞ்ஞானியால் முதலாவது நடமாடும்ரோபோ கண்பிடிக்கப்பட்டதுடன் வீட்டு வேலைகள் செய்வதற்காக இது பயன்படுத்தப்பட்டது.

துருக்கியின் நாஸிர் அல்தீன் மஹ்மூத் எனும் கலீபாவின் வேண்டுகோளுக்கு இணங்க 'நடைமுறை இயந்திரக்கலை கோட்பாட்டுச் சுருக்கம்' என்ற புத்தகத்தை அல்ஜஸாரி எழுதினார். மத்தியகாலத்தின் சிறந்தவிஞ்ஞானியாகவும் தலைசிறந்த இயந்திரப்பொறியிலாளராகவும் அல்ஜஸாரி விளங்கினார்.

அல்ஜஸாரியால் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது ரோபோ இயந்திரமானது கி.பி.1174இல் பாவனைக்கு கொண்டுவரப்பட்டது.
தொழுகை நேரம் வரும்போது ரோபோ இயந்திரத்தின் தலைப்பகுதியில் உள்ள குருவி கீச்சிடும். பின்னர் ரோபோ இயந்திரம் கலீபாவை நோக்கி வருவதுடன் கலீபாவுக் வுழூ செய்வதற்குத் போதுமான நீரைவழங்கும். கலீபா வுழூ செய்துமுடிந்ததுடன்,ரோபோ இயந்திரத்தில் உள்ள குருவி மீண்டும் கீச்சிடும் பின்னர் ரோபோ இயந்திரம் முன்னர் இருந்த இடத்திற்கு செல்லும்.

அல்ஜஸாரியால் கண்டுபிடிக்கப்பட்ட ரோபோ இயந்திரத்தின் செயற்பாடு இவ்வாறாக காணப்பட்டது." மேலும் முஸ்லிம்களால் விஞ்ஞானத்துக்கு செய்யப்பட்ட பல்வேறு பங்களிப்புக்கள் பற்றி உம் அல்குரா பல்கலைக்கழகத்தின் தலைவர் தமது உரையின் போது தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக