ஜூன் 05, 2012


அமெரிக்காவின் அடுத்த இலக்கு சிரியா?

2010ம் ஆண்டின் இறுதியில் உலக அளவில் பல நாடுகளில் துவங்கிய மக்களின் எழுச்சிமிகு போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கி ன்றன. குறிப்பாக மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளில்ஏற்பட்ட மக்களின் எழுச்சி அந்த நாடுகளில் ஆட்சிமாற்றத்தையே ஏற்படுத்தியது. துனீசியாவில்துவங்கி எகிப்துலிபியாயேமன் ஆகிய நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதனை மேற்குலகமேலை நாடுகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயன்று வருகின்றன. குறிப்பாகஅமெரிக்கா அரபு நாடுகளில் தங்களுக்கு
 சாதகமான நிலையை உருவாக்கிக் கொள்ள தொடர்ந்துமுயன்று வருகிறதுஅதாவது தனது கைப்பாவையாக இருக்கக் கூடிய ஓர் அரசுதான்அங்கு அமையவேண்டும். அதன்மூலமே தனது மேலாதிக்க தேவைக்கேற்ப அந்த நாட்டை பயன்படுத்த முடியும்என்று நினைக்கிறது.
அதன் அடிப்படையிலேயே அரபு நாடுகளில் பல்வேறு தலையீடுகளை செய்து வருகிறது. குறிப்பாகசிரியாவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் அங்கு அமெரிக்காவிற்கு வேண்டிய நபர்அதிபராக தேர்வு செய்யப்பட வில்லை. மாறாக பஷார்அல்அஸாத் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்நிலையில் மேற்குலக மேலை நாடுகள் தொடர்ந்து அந்நாட்டில் ஆயுதங்களை வினியோகம் செய்துஅந்த அரசிற்கு எதிராக பல்வேறு உள்நாட்டு குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் அங்குஅமைதியற்ற நிலை உருவாகியிருந்தது. இந்நிலையில் அந்நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்கசிறப்பு தூதராக கோஃபி அன்னான் மே 28 அன்று சிரியாவிற்கு செல்வதாக இருந்தது.

இந்நிலையில் மே 25 ம்தேதி சிரியாவின் ஹோம்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஹெளலா நகரில்மிகக்கொடூரமான முறையில் வன்முறை அரங்கேற்றப்பட்டு படுகொலைகள் நிகழ்ந்தன. இதில் 34பெண்கள், 49 குழந்தைகள் உள்ளிட்ட 108 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உலகம் முழுவதும்இந்நிகழ்வுக்கு கடும் கண்டனம் எழுந்தது. குறிப்பாக மேலைநாடுகள்அந்நாட்டின் அரசே இந்தபடுகொலைகளை அரங்கேற்றியதாக குற்றம்சாட்டினஇங்கிலாந்தின் பிபிசி தொலைக்காட்சிநிறுவனம் ஒரு படி மேலே சென்றுமுன்புஇராக்கில் அமெரிக்க படையினர் கொ ன்று குவித்தகாட்சிகளை வெளி யிட்டு அதனை சிரியாவில் நடைபெ ற்ற படுகொலைகள் என தொடர்ந்துசித்தரித்ததுசெய்திகளை வெளியிட்டது.

அது அடுத்த சில தினங்களிலேயே அந்தக்காட்சி இராக்கில்அமெரிக்கப் படைகள் நடத்தியபடுகொலை காட்சிகள் என உறுதி செய்யப்பட்டது. பின்னர் பிபிசி தொலைக்காட்சி அந்தக்காட்சியை திரும்பப் பெற்றது.

இந்தத் தாக்குதலை சிரியா அரசு கண்டித்ததோடு கலவர பின்னணி குறித்து புலனாய்வு செய்யவும்உத்தரவிட்டது. மேலும் கோஃபி அன்னானின் அமைதிப் பயணத் திட்டத்தை சீர்குலைப்பதற்கேமேலை நாடுகள் இந்த கலவரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அதிபர் பஷார் அல் அஸாத்தின்ஆட்சியை தூக்கியெறியவே நடைபெற்ற சதி என அந்நாடு குற்றம் சாட்டியது. மேலும் மேலைநாடுகள் சிரியாவில் உள்நாட்டு குழப்பத்தை நீடிக்க செய்ய ஆயுதஉதவிகளைசெய்துவருகின்றன.அதனை அடியோடு நிறுத்த வேண்டும். குழப்பக்காரர்களுக்கு நிதியுதவியை செய்வதையும் முதலில்நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பல்வேறு உலக அரசியல் நோக்கர்கள்இந்த தாக்குதலை சிரியஅரசு நடத்த வேண்டிய அவசியமில்லை. கோஃபி அன்னானின் பயணம் அந்நாட்டு அரசுக்கு நன்மைபயக்கும் விதத்திலேயே இருந்தது. இதில் அந்த நாட்டு அரசுதான் இந்த படுகொலை சம்பவத்தைநிறைவேற்றியது என்று கூறுவதில் அர்த்தமில்லை என்று கூறுகின்றனர். மேலும் இந்நாட்டில்அமைதியின்மை நிலவுகிறது என்று உள்நாட்டு குழப்பத்தை அதிகப்படுத்தி அதன் மூலம் அமெரிக்காஉள்ளிட்ட மேற்குலக நாடுகள் சிரியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடவே வழிவகுக்கும்வகையில் இந்த நிகழ்வு அரங்கேற்றப்பட்டிருக்கிறதுஏற்கனவே இந்தாண்டு பிப்ரவரி மாதம்அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு சபையில் சிரியாவில் ராணுவ தலையீடுசெய்வதற்கும்ஆட்சிமாற்றங்கள் ஏற்படுத்தும் வகையிலும் கொண்டு வரப்பட்ட வரைவுதீர்மானத்திற்கு சீனா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானத்திற்கு எதிராகவாக்களித்தனஇதன் மூலம் அந்த வரைவு தீர்மானம்நிறைவேறாமல்தடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக