ஜூன் 18, 2012


வெனிசுலா தயாரித்த முதல் ஆளில்லா விமானம்

வெனிசுலா முதன் முதலில் ஆளில்லா விமானத் தை தயாரித்து, அமெரிக் காவை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தென் அமெரிக்கா கண் டத்தில் உள்ள கியூபா, வெனிசுலா ஆகிய நாடுகள் எதை செய்தாலும் அமெ ரிக்காவின் கண்ணை உறுத் தும். சில ஆண்டுகளுக்கு முன்பு வெனிசுலா 3 நவீனரக ஹெலிகாப்டர்களை தயா ரித்தது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித் தது. இப்போது ஈரான் நாட்டு நிபுணர்கள் உதவி யுடன் வெனிசுலா முதன் முதலாக ஆளில்லா விமானத்தை தயாரித்து அமெரிக்காவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. வெனிசுலா முதன் முத லாக ஆளில்லா விமானத் தை தயாரித்திருப்பதை அந் நாட்டு ஜனாதிபதி சாவேஸ் அதிகாரப்பூர்வமாக அறி வித்தார். மேலும் அவர் கூறி யதாவது:- வெனிசுலா சுதந்திர மான நாடு. வெனிசுலா பாது காப்பை பலப்படுத்த ஈரான், சீனா, ரஷ்யா நாடுகள் உதவியுடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். வெனிசுலா பாதுகாப் பை அதிகரிக்கவும், ராணுவத்தை பலப்படுத்தவும் ஆளில்லா விமானத்தை தயாரித்துள்ளோம். இந்த ஆளில்லா விமானம் ராணுவத்துக்காகவும், சாதாரண மக்கள் நலனுக்காகவும் பயன்படுத்தப்படும் என்றார். வெனிசுலா தயாரித் துள்ள ஆளில்லா விமானம் 100 கிலோமீட்டர் வேகத்தில் 9 ஆயிரம் அடி உயரத் தில் 90 நிமிடம் பறக்கும் திறன் கொண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக