ஏப்ரல் 02, 2012

காஷ்மீரில் ஆயுதப் படை சிறப்பு சட்டத்தை ரத்து செய்ய ஐ.நா. கோரல்

காஷ்மீரில் அமுலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனஇந்திய அரசைஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பாக,எந்த நாடுகளில் இருந்தெல்லாம் புகார்கள் வருகிறதோஅந்த நாடுகளுக்குச் சென்றுஉண்மைநிலவரங்களை ஆராய்ந்து அறிக்கை தருவதற்காகஐக்கிய நாடுகள் சபை சார்பில்ஒரு 
பிரதிநிதிநியமிக்கப்படுவார்ஐ.நா. பொதுச் செயலரால் இந்தப் பிரதிநிதி நியமிக்கப்படுவார். அப்படிநியமிக்கப்பட்டவர் குறிப்பிட்ட ஒரு நாட்டிற்கு சென்றுஅங்கு மனித உரிமை மீறல்கள்நிகழ்ந்துள்ளனவா எனவிசாரணை நடத்திஅது உண்மை என தெரியவந்து அறிக்கை சமர்ப்பித்தால்,உடனடியாக சம்பந்தப்பட்ட நாட்டிற்குஐ.நாசார்பில் கடிதம் அனுப்பப்படும். அதில்தக்கநடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படும்.
அதேபோல்காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளனவா எனவிசாரணை நடத்திய ஐ.நா.பிரதிநிதி ஹெய்னஸ் கூறியுள்ளதாவதுகாஷ்மீரில் வன்முறையில் ஈடுபடுவோரை சுட,இராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம் தரப்பட்டுள்ளது. இதற்காக ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்என்ற சட்டம் அமுலில் உள்ளது. இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில்இதுபோன்ற சட்டங்களுக்குஇடமில்லை. எனவேஅந்தச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும். என்னுடைய காஷ்மீர்பயணத்தின்போதுஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் கொடுமையானதுவெறுக்கத்தக்கது எனபலரும் வர்ணித்தனர். இப்படிப்பட்ட ஒரு கடுமையான சட்டம் அமுலில் இருப்பது சர்வதேசசட்டவிதிகளுக்கு முரணானது.
அரசியல் சட்ட ரீதியான உத்தரவாதங்கள் இருந்தபோதும்வலுவான மனித உரிமைச் சட்டங்கள்அமுலில் இருக்கும்போதுஇந்தியாவில் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றனஇது கவலை தரும் விஷயம். இவ்வாறு ஹெய்னஸ் கூறியுள்ளார். ஆயுதப் படைசிறப்பு அதிகாரத்தைரத்து செய்ய வேண்டும் எனகாஷ்மீரில் ஏற்கனவே கோரிக்கைகள் எழுந்துள்ளநிலையில் ஐ.நா. அமைப்பு இவ்வாறு கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக