ஏப்ரல் 24, 2012


இலங்கை தம்புள்ள பள்ளிவாசல் இடிப்பு: அரபு நாடுகள் கடும் விசனம் தெரிவிப்பு


458647704330தம்புள்ள பள்ளிவாசல் மீதான தாக்குதலுக்கு அரபுநாடுகள் பலத்த கண்டனத்தையும்கடும்விசனத்தையும் வெளிப்படுத்தியுள்ளனஅத்துடன்,குறித்த அரபு நாடுகள் இலங்கையிலுள்ள தமது நாட்டுத்தூதுவர்களிடம் பள்ளி வாசல் தாக்குதல் தொடர்பிலானமுழு விவரங்களையும் திரட்டி அறிக்கைசமர்ப்பிக்குமாறு பணித்துள்ளன.
இதன்படி இலங்கையிலுள்ள அரபு நாடுகளின்தூதுவர்கள்முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் முக்கியமுஸ்லிம் அரசியல் பிரமுகர்களிடம் தொடர்பு கொண்டுவிவரங்களைச் சேகரிக்கத் தொடங்கியுள்ளன.

முஸ்லிம் அமைச்சர்களுடனும்முஸ்லிம் அரசியல் பிரமுகர்களுடனும் இது தொடர்பில் அரபு நாடுகளின்தூதுவர்கள் தனித்தனி சந்திப்புகளை மேற் கொண்டு விவரங்களைப் பெற்றுவருகின்றனர் எனவும்தெரியவருகின்றது.
இதேவேளைதம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் தாக்கப்பட்டமைக்கு இலங்கையிலுள்ளஇஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் கடும் கண்டனமும் விசனமும் தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் முஸ்லிம் அரசியல் பிரமுகர்களைத் தொலைபேசி ஊடாகத்தொடர்புகொண்டே தமது கண்டனத்தை இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
முஸ்லிம்களின் புனித இடமான பள்ளிவாசல் தாக்கப்படுவது அபூர்வமான நிகழ்வெனசுட்டிக்காட்டியிருக்கும் தூதுவர்கள்இலங்கையில் இவ்வாறான இதையொத்த சம்பவங்கள் அடிக்கடிஇடம்பெறுவது தம்மைக் கவலையில் ஆழ்த்தியுள்ளன என்று தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம்களின் கலாசார விழுமியங்கள்இஸ்லாமியக் கடமைகளைச் சரிவர மேற்கொள்வதில் இலங்கைமுஸ்லிம்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர் என்றும்இது ஒரு ஆரோக்கியமானசெயற்பாடல்ல என்றும் அத்தூதுவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தம்புள்ளை ஜும்  பள்ளிவாசல் மீதான அச்சுறுத்தல் தொடர்பில் முற்கூட்டியே அறிவிக்கப்பட்டும் உரியபாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படாமையானது பெரும் சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளன என்றும்தூதுவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளைஈரானியத் தூதுவர் அவசர கடிதமொன்றை பிரதமர் தி.முஜயரத்னவுக்குஅனுப்பிவைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில்இலங்கை முஸ்லிம்களின் கலாசாரம் மற்றும் வழிபாட்டு விழுமியங்களுக்குத்தனித்துவமும் பாதுகாப்பும் வழங்கப்படவேண்டுமென ஈரான் தூதர் கேட்டுக்கொண்டுள்ளார்.
முஸ்லிம்களின் கலாசாரவணக்க வழிபாடுகள் தனித்துவம் மிக்கவைஇதனை உறுதிசெய்து பாதுகாப்புஒழுங்குகளை மேற்கொள்வது அரசின் பொறுப்பும் கடமையுமாகும் என்றும் அக்கடிதத்தில் தூதர்சுட்டிக்காட்டியுள்ளார்.
தகவல் : மீள்பார்வை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக