நவம்பர் 23, 2011

பாலஸ்தீனம்  பதா-ஹமாஸ் தலைவர்கள் சந்திப்பு
எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஹமாஸ் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவதற்காக பாலஸ்தீனதேசிய நிர்வாகத்தின் ஜனாதிபதி முகமது அப்பாஸ் வந்துள்ளார். எகிப்தில் மக்கள் எழுச்சிகாரணமாக இஸ்ரேலுக்கு நெருக்கமாக இருந்த ஹோஸ்னி முபாரக் பதவியிலிருந்து தூக்கிஎறியப்பட்டார். அதன்பிறகு எகிப்திலி ருந்து பாலஸ்தீனத்திற்கு நுழையும் எல்லைப்பகுதியும்திறக்கப்பட்டது. இது இஸ்ரேலின் முற்றுகையை ஓரளவு தகர்க்க உதவியது. இந்நிலையில் பதாமற்றும் ஹமாஸ் ஆகிய இரு அமைப்புகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் துவங்கின.

ஒன்றுபட்ட அரசு ஒன்றை உருவாக்கி தேர்தல்களை நோக்கி செல்லலாம் என்று இரண்டுதரப்பினரும் கருத்து தெரிவித் தனர். பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொடுக்க எகிப்து முன்வந்தது.இந்நிலை யில் எகிப்து ராணுவக் கவுன்சில் தலைவ ரான அஸ்ஸாம் அல் அகமதை முகமதுஅப்பாஸ் சந்தித்துள்ளார். நவம்பர் 24 ஆம் தேதியன்று ஹமாஸ் அமைப்பின் அரசி யல்தலைமைக்குழுத் தலைவரான காலித் மேஷாலையும் அவர் சந்தித்துப் பேச்சு வார்த்தைநடத்துகிறார்.

இரண்டு தரப்பினரும் சேர்ந்து உருவாக் கும் அரசில் யார் பிரதமராக இருப்பார் என்பதைத்தீர்மானிப்பார்கள். 2007 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் பதா அமைப்பு, ஹமாஸ் அமைப்பிடம்தோல் வியடைந்தது. பின்னர், மேற்குக்கரைப் பகுதியை மட்டும் தனது கட்டுப்பாட்டுக் குள்வைக்கும் முடிவுக்கு பதா சென்றது. காசாப்பகுதி ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்தது. இருதரப்பும்திறந்த மனதுடன் பேச்சுவார்த்தைக்கு வருகிறார்கள் என்கி றார் எகிப்து ராணுவ கவுன்சில் தலைவர்அல் அகமது.

இஸ்ரேல் தாக்குதல்

காசாவின் தெற்குப்பகுதிக்குள் நுழைந்து இஸ்ரேலிய போர் விமானம் ஏவுகணைக ளை வீசியது.
இதுவரையில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டது பற்றி தகவல்கள் வெளியாகவில்லை. இஸ்ரேலியஎப்-16 போர் விமானம் திடீரென்று நுழைந்து அப் பாவி மக்கள் வாழும் பகுதியில் ஏவுகணை களைவீசியுள்ளது. 2008 டிசம்பர் முதல் 2009 ஜனவரி வரையில் 22 நாட்கள் பாலஸ் தீனப்பகுதிகளுக்குள்புகுந்து இஸ்ரேலியப் படை தாக்குதல் நடத்தியது. அதில் பாலஸ் தீனத்தைச் சேர்ந்தவர்கள் 1,400பேர் கொல் லப்பட்டனர். அதன்பிறகும்
 தொடர்ந்து வான்வழித்தாக்குதல்களை இஸ்ரேலியப் போர்விமானங்கள் மேற்கொண்டு வரு கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக