ஆகஸ்ட் 15, 2011


சோமாலியாவில் இராணுவ தலையீட்டிற்கு அமெரிக்கா தயாராகிறது


சோமாலியாவில் பசி
 பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருப்
போருக்கு மனிதாபிமான அக்கறை
 என்ற போலிச்சாக்கில் ஒரு புதிய
 இராணுவ தலையீட்டிற்கு ஒபாமா
 நிர்வாகம் தயாரிப்பு செய்கிறது.
 முதலைகண்ணீர் கலந்த ஒரு
 பிரச்சாரத்தோடுஅந்த போக்கிற்கு
 உடந்தையாய் இருக்கும்
 ஊடகங்கள்அங்கே ஆழமடைந்துவரும் 
நெருக்கடிக்கு
 குற்றஞ்சாட்டப்படும் இஸ்லாமிய அல்-ஷாபாப் இயக்கத்தைத்
 கண்டித்துக்கொண்டு அமைதியின்மையுடன்கையைப் பிசைந்து
 கொண்டிருக்கின்றன.
பெங்காசி மக்களைப் படு
கொலைகளிலிருந்து காப்பாற்றும் அழைப்புகளோடுலிபியாவில்
 நடத்தப்பட்ட குண்டுவீச்சு
 நடவடிக்கையைப் போன்றேஇப்போது,சோமாலியாவில் பசியில்
 தவிக்கும் குழந்தைகளைக் 
காப்பாற்றுவதற்காக என்ற 
பெயரில் ஆப்ரிக்காவில் ஒரு 
புதிய தலையீட்டிற்குத் தயாரிப்பு
 செய்யப்பட்டு வருகிறதுஇது 
மக்களை ஏமாற்றும் ஓர் எரிச்சலூட்டும்செய்கையாகும்.
வெளியுறவு விவகாரங்கள் குறித்த அமெரிக்க கவுன்சிலால்
 தயாரிக்கப்பட்ட ஓர் அறிக்கையின்படிஅல்-ஷபாப் ஏறக்குறைய 
10,000 போராளிகளைக் கொண்டுள்ளதுஅதன் மிக விசுவாசமான
 துருப்புகளில்ஒருசில நூறு போராளிகள் மட்டுமே 
இருக்கக்கூடும்தேசிய பயங்கரவாத-எதிர்ப்பு மையத்தின் 
தகவல்படிஅதற்கு அல்கொய்தாவுடன் எந்த தொடர்பும்
 கிடையாது.

இருந்தபோதினும் அமெரிக்க அதிகாரிகள் 
தற்போதைய பஞ்சத்திற்கு இந்த அமைப்பைக் 
குறை கூறுகின்றனர். “அல்-ஷபாப்பால் அதன்
 மக்களுக்கு எதிராகநடத்திவரும் இரக்கமற்ற 
பயங்கரவாதம் ஏற்கனவே மிகவும் ஒரு
 கொடூரமான நிலைமைக்குள் திரும்பியுள்ளது
அது இன்னும் மோசமடையும் என்று தான்
எதிர்பார்க்க முடியும்.” இது கடந்தவாரம் 
அமெரிக்க வெளியுறவுத்துறைசெயலாளர் 
ஹிலாரி கிளிண்டன் அறிவித்ததாகும்.
உண்மையில்அமெரிக்க ஆதரவுடனான இடைக்கால மத்திய
 அரசாங்கத்தின்(Transitional Federal Government – TSG) கட்டுப்பாட்டில் 
இல்லாத சோமாலியாவின் ஏனைய பகுதிகளுக்கு வாஷிங்டன்
 உதவிகளை மறுத்ததுஅதாவதுஉதவி ஒருசில சதுர மைல்
 பகுதிகளுக்குள் மட்டுமே அளிக்கப்படுகிறது என்பதையேஇது
 குறிக்கிறது. “சோமாலியாவில் உயிர்களைக் காப்பாற்ற நாங்கள்கடமைப்பட்டுள்ளோம்ஏற்கனவே அல்-ஷபாப் 
கட்டுப்பாட்டில் இல்லாத எல்லா பகுதிகளிலும் நாங்கள் 
பணியாற்றி வருகிறோம்ஆனால் துரதிருஷ்டவசமாக,
சுமார் 60 சதவீத மக்கள் அல்-ஷபாப் கட்டுப்பாட்டில் உள்ள
 பிராந்தியங்களில் உள்ளார்கள்.” இது இலண்டனின் ஒரு 
பத்திரிக்கையாளர் கூட்டத்தில் அமெரிக்க உதவிகளுக்கான
 துணை நிர்வாகி டோனால்ட் ஸ்ரைன்பேர்க் குறிப்பிட்டதாகும்.

பசியையும்பஞ்சத்தையும்
 பொதுமக்களுக்கு எதிரான
 யுத்த ஆயுதங்களாக
 பயன்படுத்தும் வாஷிங்டன் 
நோக்கத்தின் ஒரு தெளிவான
 அறிக்கை இதைவிட
 ஒருவருக்கு கிடைக்காது.
 சுமார் 3.7 மில்லியன் மக்கள் 
சோமாலியாவில் பஞ்சத்தால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்
அவர்களின் 2.8 மில்லியன்
 மக்கள்,இடைக்கால மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் 
அல்லாத அந்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ளனர்
சோமாலியாவின் பெரும் பகுதிகளில் உணவுப்பொருட்கள்
 அளிக்க முயலும் எந்தவொரு அமைப்பும்ஒருபயங்கரவாத
 இயக்கத்திற்கு பொருட்களை வழங்கிவரும் குற்றச்சாட்டு
 அபாயத்திற்குள்ளாகக்கூடும்.


ஒரு பயங்கரவாத அமைப்பிற்கு உதவுவதால் அவ்விடங்களில் வாழும்தாய்மார்களுக்கும்ஊட்டச்சத்தற்ற குழந்தைகளுக்கும்
 வழங்கிவரும் அதன் உணவு வினியோக திட்டங்களைஉலக
 உணவு திட்டம் (World Food Programme)நிறுத்த 2009இல் அமெரிக்கா
 அழுத்தம் கொடுத்ததுபஞ்சம் நிலவும் பகுதிகளாக அமெரிக்கா
 உத்தியோகப்பூர்வமாக எந்த பகுதிகளை அறிவித்துள்ளதோ
அங்கே கடந்த இரண்டு ஆண்டுகளாக உணவுப்பொருள் உதவி
 மறுக்கப்பட்டுள்ளது.

தெற்கு சோமாலியாவில் விமானங்கள் பறக்க தடைவிதிக்
கப்பட்ட வலயம் அறிவிக்கப்பட வேண்டுமென அமெரிக்க
 கூட்டாளியான அண்டைநாடானஉகாண்டாவின் ஜனாதிபதி
 யூவேரி முசெவெனி அழைப்புவிடுத்துள்ளார்.

ஆனால்எப்படியிருந்தபோதினும்அல்-ஷபாப்பிடம் எவ்வித 
ஆகாயபலமோ அல்லது தரையிலிருந்து வானில் தாக்கும் 
ஏவுகணைகளோ கூட இல்லை.இளம்பருவ சிறுவர்களாக
 இருக்கும் அதன் போராளிகளில் பெரும்பாலானவர்களால் 
சுமையேற்றும் வண்டிகளை மட்டும் தான் ஓட்டமுடியும்.

ஒரு விமானங்கள் பறக்க
 தடைவிதிக்கப்பட்ட வலயத்தின்
 நோக்கம்தலையீடு செய்வதற்கு
 ஒரு வழியைத் தயாரிப்பதன்றி 
வேறொன்றுமில்லை
விமானங்கள் பறக்க தடை
விதிக்கப்பட்ட வலயம் உருவாக்க
 வேண்டுமென்ற முறையீடு
வாஷிங்டனிடமிருந்து 
வருவதைவிட பிராந்திய
 சக்திகளிடமிருந்து வந்தால்
 அதை பெண்டகன் வரவேற்கும் என்று ஆபிரிக்காவிற்கான 
அமெரிக்க படைக்கு, AFRICOM, தலைமையேற்றிருக்கும் ஜெனரல்
 கார்டர் F. ஹம் தெளிவுபடுத்தினார்லிபியா மீது விமானங்கள்
 பறக்க தடைவிதிக்கப்பட்டவலயத்தைக் கொண்டு வர
 வேண்டுமென அரேபிய லீக் வலியுறுத்தியதைப்போல,
 ஆபிரிக்க ஒன்றியம் இந்த திட்டத்திற்கு அழைப்புவிடுக்க
 வேண்டுமெனஅவர் விரும்புகிறார்அது ஒரு போலியான
 கொடியின் கீழ் நடக்கும் ஓர் அமெரிக்க இராணுவ
 நடவடிக்கையாக இருக்கும்.

AMISOM என்றழைக்கப்படும் அமெரிக்க ஆதரவுடனான 
ஆபிரிக்க ஒன்றிய துருப்புகள்சமீபத்தில் தான் அல்-ஷபாப் 
போராளிகளுக்கு எதிராக ஒரு பெரும் தரைவழி தாக்குதலைத்
 தொடுத்திருந்ததுதெற்கு சோமாலியாவின் ஜெடோ
 பிராந்தியத்தில் உள்ள எல்வாக் நகரத்திற்கு அருகிலுள்ள 
மொகடிஷுவில் அந்த கொடூரமான சண்டை நடந்ததாக
 செய்திகள் குறிப்பிடுகின்றன.

சோமாலியாவிற்குள் ஊடுருவி தாக்குதலை நடத்த ஏற்கனவே
 அமெரிக்காவிடமே திறன் உள்ளதுஇந்த ஆண்டின் ஜூனில்
 அது ஆளில்லாவிமானத்தைக் கொண்டு ஒரு படுகொலை
 தாக்குதல் நடத்தியதுமுன்னதாக அது சந்தேகத்திற்குரிய
வர்களை கொல்ல அல்லது சிறைபிடிக்கஹெலிகாப்டர்களில்
 சிறப்பு படை துருப்புகளை தரையிறக்கியது.மொகடிஷிவில்
 உள்ள ஒரு புதிய CIA தளத்திலிருந்துசோமாலியா கடல்
பகுதியில் ரோந்துவரும் கடற்படை கப்பல்களைக் கொண்டு
 அல்லது டிஜிபுட்டிக்கு அருகில் அது கொண்டிருக்கும் 
இராணுவ தளத்திலிருந்து அதனால்தாக்குதல்களை நடத்த
 முடியும்.
அல்கொய்தாவுடன் தொடர்பு கொண்டிருக்கிறது என்று 
அமெரிக்கா முறையிடும்அல்-ஷபாப் தான் அமெரிக்காவிற்கு
 ஒரு பிரதான இராணுவ அச்சுறுத்தலாகமுன்வைக்கப்ப
டுகின்றதுஉள்நாட்டு பாதுகாப்பு குழுவின் அவைத்தலைவர்
 பீட்டர் கிங்அல்-ஷபாப் "நம்முடைய உள்நாட்டிற்கு ஒரு
பெரும்அச்சுறுத்தலாகும்என்று குறிப்பிட்டிருந்தார்அது சோமாலி-அமெரிக்கர்களைபயங்கரவாதத்திற்கு
 அணிதிரட்டுவதாக அவர் முறையிடுகிறார்.

நியூயோர்க் பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் சட்டம் மற்றும்
 பாதுகாப்புமையத்தின் செயல் இயக்குனர் கெரென் கிரீன்பெர்க்.
 Guardian இதழில்எழுதுகையில் கிங்கின் கூற்றுக்களுக்கு சவால் 
விடுத்தார்இதுவரை ஒரேயொரு சோமாலி-அமெரிக்கர் மட்டும்
 தான் பயங்கரவாதம் சம்பந்தமான குற்றங்களுக்காக குற்றஞ்
சாட்டப்பட்டுள்ளார்.  அதுவும் அவருக்கு அல்-ஷபாப்புடன் 
எவ்வித தொடர்பும் இல்லை என்று அப்பெண்மணி
 குறிப்பிட்டுக் காட்டினார்.

தற்போதைய பஞ்சத்திற்கு வாஷிங்டன் காட்டும் விடையிறுப்பு,
 Operation Restore Hope நினைவூட்டுகிறதுஜோர்ஜ் புஷ் 
ஜனாதிபதியாக இருந்த போதுஅவரது ஆட்சிகாலத்தின் கடைசி
 தருணத்தில்டிசம்பர் 5, 1992இல்பசியால் வாடும்குழந்
தைகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்குவதற்காக என்ற
 பெயரில் 30,000அமெரிக்க துருப்புகள் சோமாலியாவிற்குள்
 அனுப்பப்பட்டன.
அப்போது அல்-ஷபாப் அங்கே கிடையாதுஅந்த உணவுப்

பொருள்விநியோகத்திற்கு சயித் பேய்ர் ஆட்சியின் பொறிவி
லிருந்து உருவான "யுத்தபிரபுக்களிடமிருந்து" (war lords) 
அச்சுறுத்தல்கள் எனப்பட்டவை வந்ததாக கூறப்பட்டது.
 சோவியத் ஆதரவுடனான எத்தியோப்பிய ஆட்சிக்கு எதிராக
இராணுவ சர்வாதிகாரி பேய்ரை 1977இல் இருந்து அமெரிக்கா
 ஆதரித்து வந்தது. 1991இல்வாஷிங்டன் பேய்ரை கைவிட்டதுடன் 
அவருடைய ஆட்சி பொறிந்தது.அப்போதிருந்து சோமாலியாவில்
 எந்த நிலையான அரசாங்கமும்அமையவில்லை.

ஜனாதிபதி பில் கிளிண்டன்
 தொடர்ந்த நடவடிக்கைகள்
 இன்னும் அதிகப்படியாக
 பகிரங்கமாகவே ஓர்
 ஆக்கிரமிப்பாக தொடர்ந்தது. 1994இல்,மொகடிஷுவில் ஓர் 
அமெரிக்க கருப்பு ஹாவ்க்-ரக 
ஹெலிகாப்டர் சுட்டு 
வீழ்த்தப்பட்டுஅதிலிருந்த 
உறுப்பினர்களின் உடல்கள் 
தொலைக்காட்சி காமிராக்கள் 
முன்னர் காட்டப்பட்ட பின்னர்சோமாலியாவிலிருந்து அமெரிக்க 
துருப்புகளைத் திரும்பப்பெற அவர் நிர்பந்திக்கப்பட்டார்.
Operation Restore Hope காலனித்துவப்படையெடுப்பின் ஒரு புதிய 
கட்டத்தை எடுத்துக்காட்டியதுஅப்போது சோசலிச சமத்துவ
 கட்சியின் முன்னோடியான அமெரிக்க தொழிலாளர் கழகம்
 "மனிதாபிமான தலையீடுஎன்றுகூறப்பட்டதற்கு கண்டனம் 
தெரிவித்ததுஅது எழுதியதாவது: “யுத்த கப்பல்கள்,ஜெட்
 யுத்தவிமானங்கள் மற்றும் தாக்கும் ஹெலிகாப்டர்கள் 
ஆகியவற்றின் உதவியோடுபத்து ஆயிரக்கணக்கான 
துருப்புகளைஇறக்கிவிடுவதென்பதுசோமாலிய மக்களின்
 இறையாண்மையை மூர்க்கத்தனமாக மீறுவதாகும்அது 
ஆப்ரிக்காவில் மட்டுமல்லமாறாக உலகம் முழுவதும்,
 ஒடுக்கப்பட்ட மக்களின் மீது வெளிப்படையாக காலனிய 
சிறைப்பிடித்தலுக்கு திரும்புவதைக் குறிக்கிறது.”

அப்போதிருந்துஎண்ணெய் மற்றும் ஏனைய மதிப்புமிக்க 
மூலப்பொருட்கள்நிறைந்த ஒரு கண்டமான ஆபிரிக்காவிற்கான
 ஒரு புதிய போட்டியின் மத்தியில் விளங்கும் அந்த நாட்டில்
 (சோமாலியாவில்வாஷிங்டன் அதன்கட்டுப்பாட்டை 
மீட்டெடுக்கவும்அதன் தோல்வியை மாற்றியமைக்கவும்
 தீர்மானமாக உள்ளதுசோமாலியாஉலக வர்த்தகத்திற்கான
 கடல் மற்றும் விமான போக்குவரத்தின் சந்தியில் அமர்ந்துள்ளது
நாளொன்றுக்கு சுமார் 90வர்த்தக விமானங்கள் அதன் விமான
 எல்லையைக் கடந்து செல்கின்றன.வளைகுடாவில் இருந்து 
எண்ணெய் எடுத்துச்செல்வதற்கான கடல்வழியும் அமைந்துள்ளது
வட ஆபிரிக்காவும் அதன் கடற்கரையோரத்தில்அமைந்துள்ளது
சீனா போன்ற அதன் எதிரிகளுக்கு எதிராக அமெரிக்கா அதன்
 உலகளாவிய மேலாதிக்கத்தைத் தக்க வைக்க வேண்டுமானால்,
சோமாலியாவின் கட்டுப்பாடு அதன் முக்கிய நோக்கமாக உள்ளது.

1994 அதன் தோல்வியிலிருந்து
வாஷிங்டன் வெவ்வேறு தந்தி
ரோபாயங்களை கையாள
 கற்றுக்கொண்டுள்ளதுஆபிரிக்காவில் 
அதிகளவில் அது மறைமுக
 துருப்புகளைப் பயன்படுத்தி வருகிறது.
 டிசம்பர் 2006இல்சோமாலியா 
மீதுஎத்தியோப்பியா தாக்குதல் நடத்த 
அமெரிக்கா உதவியதுஅது இடைக்கால மத்திய அரசாங்கத்தை
ஒரு கைப்பாவை ஆட்சியாக நிறுவியது.எத்தியோப்பியா 
துருப்புகள் திரும்பப்பெறப்பட்ட போதுஅதன் இடத்தில்
 AMISONவந்தது. AMISONஇல் பெரும்பான்மையாக இருக்கும்
 உகாண்டா மற்றும்புரூண்டி துருப்புகள்அமெரிக்க 
இராணுவத்தால் பயிற்றுவிக்கப்பட்டுநவீன ஆயுதங்களும் 
அளிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறிருந்த போதினும்இத்தகைய ஏகாதிபத்திய சதிகளின் 
திருப்பங்கள் இருந்தபோதினும், 1992-1994 சோமாலியா தாக்குதல்
 பற்றிய Workers Leagueஇன் குணாம்சப்படுத்தல்தொடர்ச்சியாக 
நிரூபிக்கப்பட்டு வருகிறதுபால்கன் பிரதேசங்களிலும்மத்திய
 ஆசியாவிலும்பாரசீக வளைகுடா மற்றும் ஆபிரிக்காவிலும்
 மனிதாபிமான நோக்கங்கள் என்ற வேஷம் என்பதனைவிட
 அதிகமாகஏகாதிபத்திய சாகசங்கள்தாக்குதல்கள் மற்றும்
 யுத்தங்கள் தொடர்ந்துள்ளனமற்றொரு கொடூரமான 
தலையீட்டிற்கு வழிவகுக்கும்விதத்தில் சோமாலியாவில்
 நிலவும் பரிதாபகரமான பஞ்சத்தைக் குறித்த மக்களின்
 அக்கறையைத் திரிக்க முயலும் அனைத்து முயற்சிகளையும் 
தொழிலாளர்களும்இளைஞர்களும் நிராகரிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக