ஆகஸ்ட் 25, 2011


இலங்கையின் இன்னொரு காஸா - விதைத்ததை அறுவடை செய்யும் காலமிது

புத்தளம்இலங்கையின் மேற்குக்கரை படுக்கை முஸ்லிம்களின் 
தலைமை பிரதேசம். நிறைந்த மஸ்ஜித்கள், தாடி வைத்த மனிதர்கள், 
பர்தாவுடனான பெண்கள், எல்லாவிதமான இஸ்லாமிய
 அமைப்புக்களினதும் செயற்தளம் அது. ரமழானின் ஒரு 
நோன்பையாவது புத்ளத்தில் பிடித்து அங்கேயே திறக்க வேண்டும் 
என எண்ண வைக்கும் பிரதேசம் என்றால் மிகையல்ல.

ஆனால் சில தினங்களிலேயே அது 
உருமாறி நிற்கிறது. ஒரு எதிரி நாட்டு
 இராணுவத்தால் 
சுற்றிவளைக்கப்பட்ட நகரம் போல் 
காட்சி தருகிறது இன்று. பூரண ஆயுத
 சன்னத்த நிலையில் இலங்கையின்
 இராணுவம் நகரை காவல் காக்கிறது.
 நீரிலும் நிலத்திலும் செல்லும்
 ஹோவர் கவசவாகனம், பவல் 
துருப்புக்காவி கவச வாகனம், கலிபர் 
துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட ஜீப்கள் என போர்கோலம்
 பூண்டுள்ளது புத்தளம். மாலையானவுடன்
 மக்கள் நடமாட்டம்மற்ற சூனிய வலையமாக மாறி விடுகிறது
 நகர்புரம். பொலிஸாரின் வரம்பு மீறிய கெடுபிடிகள், சில வேளைகளில்
 தாக்குதல்கள் என மக்கள் திகைத்து நிற்கிறார்கள்.


பொலிஸ் கான்ஸ்டபிளை கொலை செய்ததன் விளைவு இது. கிறிஸ்
 மனிதனின் அட்டகாசத்திற்கு பகரமாக சம்மந்தமில்லாத
 போக்குவரத்து உத்தியோகத்தர் கொல்லப்பட்டுள்ளார். இது முஸ்லிம் 
இனம் சிங்கள இனத்தின் மீது செய்த வரலாற்று அநியாயமாகவே
 பதியப்பட்டுள்ளது. இதை நாம் எந்த கரங்களால்
 துடைக்கப்போகிறோம்?. இந்த நிகழ்வுகளை சம்பவ நிலையை
 மட்டும் வைத்து கிறிஸ் கதையை காரணமாக காட்டி தெளிவு காண
 முடியாது. இங்கே தொடரான சில சமூகவியல் காரணங்களும் 
பின்னிற்கின்றன என்பதே உண்மை.


காலத்திலேயே புத்தள மக்களிடம் சட்டம் 
ஒழுங்கை மதிக்காத தன்மை இரத்தத்தில்
 ஊறிய விடயமாகும். ஒரு சிறு தகராறிற்கும் 
குழுவாக வந்து வெட்டுவது (திலிப்பியால்)
 என்பது அவர்களிற்கு சாதாரணம். வடக்கு
 புலம்பெயர் அகதிகள் இதை நிறையவே 
அனுபவித்துள்ளனர். ஊரின் உள்பகுதிக்குள்
 பொலிஸார் வருவதை இவர்கள் என்றுமே 
விரும்புவதில்லை. இதற்கு முன்னரும் 
பல தடவைகள் பொலிஸாரையும், 
இராணுவத்தினரையும் தாக்கி வாகனங்களை 
சேதப்படுத்திய வரலாற்றிற்கு சொந்தக்காரர்கள் 
இந்த புத்தள மக்கள்.  கடந்த பொதுத்தேர்தலில் 
இருந்த பாராளுமன்ற உறுப்பினரையும்
 இழந்த பின் நகரில் பொலிஸாரினால் நிலை
 நாட்டப்பட்ட சட்டம் ஓழுங்கு தொடர்பில் இவர்களிடையே ஒரு 
நெருப்பு இருக்கவே செய்தது. கிறிஸ் மனிதன் விவகாரத்துடன் சேர்த்து 
பொலிஸாரை அச்சப்படுத்து உடனடியாக மடையர்கள் போல் 
செயற்பட்டுள்ளார்கள். அவ்வளவுதான்.

இந்த இராணுவ சுற்றிவளைப்பிற்கு காரணம் அரசினதும், 
பொலிஸாரினதும் அச்சம் என்பது இன்னொரு விடயம். பொலிஸார்
 பொது மக்கள் மீதான தாக்குதலை ஆரம்பித்த போது புத்தளம்
 பெரிய பள்ளிவாசலின் மினராக்கள் “அல்லாஹு அக்பர்” 
என விடாது முழங்கின். “மரணம் ஒரு முறையே”.“இஸ்லாமிய
 மரணத்திற்கு தயாராகுங்கள்” போன்ற வார்த்தைகள் ஓயாது
 ஒலித்தன. “ஹய்யாலல் ஜிஹாத்” என்று மட்டும் அழைக்கவில்லை. 
மக்கள் சாரி சாரியாக பெரிய பள்ளிவாயலில் திரண்ட காட்சி
 முஸ்மிம்களையே மயிர்கூச்செரிய செய்ததென்றால் காபிர்களின்
 உள்ளங்களின் பீதி எவ்வாறு இருக்கும் என்பதை உணர முடிகிறது.
 இதுவே உண்மை. கூடவே தங்கள் அச்சத்தை களைய முஸ்லிம்கள் 
கவச டாங்கிகள் கொண்டு பயமுறுத்தப்படுகிறார்கள்.


மர்ம மனிதன் தொடர்பாக உண்மையின் விகிதமும் பொய்களின்
 விகிதமும்  எவ்வளவு என்பதை கணிப்பிட முடியாமல் இருக்கலாம்.
 ஆனால் சட்டத்தை கையிலெடுப்தும், இலக்கற்ற ஆயுத வன்
முறையை சம்மந்தமற்றவர்கள் மீது பிரயோகிப்பதும், அரச 
உடைமைகள் பொது சொத்துக்கள் போன்றவற்றிற்கு
 சேதமிழைப்பதும் மிகவும் பாரதூரமான குற்றங்கள். எங்கள்
 அனைத்து விதமான நியாயங்களையும் இவை அடித்து சென்று விடும்.

இந்த விவகாரங்களை இன்னொரு 
கோணத்திலும் பார்க்கலாம்.
 இவ்வாறான பதற்ற மற்றும் அச்ச 
நிலையை முஸ்லிம்கள் மீது 
ஏற்படுத்துவதன் மூலம் அவர்களது 
எதிர்வினை செயற்பாடுகள் என்ன? 
அவர்களின் தாக்குதலின் 
வீச்செல்லை என்ன?, இவர்களிற்கு 
தலைமைத்துவம் கொடுப்பவர்கள்
 யார்?, ஒருங்கிணைப்பவர்கள்
 யார்? மீடியாக்களின் பாத்திரம் என்ன, முஸ்லிம்
 நாடுகளின்  உயர்  ஸ்தானிகராலயங்கள் என்ன
 செய்கின்றன? 
குறிப்பாக ஈரானும் பாகிஸ்தானும் இது விடயத்தில் 
எவ்வாறு காணப்படுகின்றன?,
 முஸ்லிம் இளைஞர்கள் துப்பாக்கிகளை தமது பாதுகாப்பிற்கு
 எடுக்கிறார்களா? உள்நாட்டு முஸ்லிம் அரசியல்வாதிகள், 
முஸ்லிம் இயக்கங்கள் போன்றவற்றின் வகிபாகம் என்ன
 போன்ற பல விடயங்களிற்கான “பல்ஸ்” பார்கப்படும் களமாகக் 
கூட இதை நாம் கணிக்கலாம்.

ஒரு பெரிய விடயத்தை செய்வதற்கு முன்பான ஒரு சிறிய 
ஒத்திகையைாக கூட இது இருக்கலாம். இதன் பின்னால் சில
 சமயம் அரசிற்கு கூட பெரிய பங்கு இல்லாமல் இருக்கலாம். 
வேறு சக்திகளின் மறை கரங்கள் கூட இதை இயக்கலாம். நாம்
 ஜனாதிபதியையும் பாதுகாப்பு செயளரையும் குறை கூறுவதில்
 எந்த அர்த்தமும் இல்லை. நமது எதிர்கால செயற்பாடுகள் பற்றி
 சிந்திப்பதே ஆரோக்கியமானது.

இந்த விவகாரத்தில் எமக்கு ஒரு சில பாடங்கள் உள்ளன. அவற்றை 
எவ்வாறு நாம் முன் நகர்த்த முடியும் என்பது பற்றி யோசிப்பது 
பிரயோசனமாக இருக்கும்.

  • இஸ்லாத்தின் பக்கம் முழுமையாக நாம் மீண்டு கொள்வது
  • குப்ரிய அரசியலிற்காக நாம் பிரிவு படாமல் சமுதாய நலனை 
         மட்டுமே சிந்திப்பது
  • அந்நிய மக்களிற்கான இஸ்லாத்தின் அழைப்பை வேகமாகவும் 
         விவேகமாகவும் விரிவு படுத்துவது.
  • சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் தொடர்பான தவறான 
         கருத்துக்களை களையும் செயற்திட்டங்களை முன்னெடுப்பது
  • இனவாத சிங்கள ஊடகங்களில் முஸ்லிம்கள் பற்றி தவறாக வரும்
           செய்திகளின் உண்மை தன்மையை வெளிகொணர்வது
  • சர்வதேச மனித உரிமை அமைப்புகளுடனான உறவுகளை
         ஏற்படுத்துவது
  • முஸ்லிம்களிற்கான ஊடகங்களை தரமுயர்த்துவதுடன் சர்வதேச
          ஊடகங்களுடனான தொடர்புகளை வலைப்படுத்துவது
  • முஸ்லிம்களிற்கு எதிராக நடக்கும் பிரச்சார மற்றும் செயல்
           ரீதியான அடக்குமுறைகளையும் அநீதிகளையும் ஆவண
          அமைப்பில் ஒழுங்குபடுத்துவதுடன் அவற்றை தக்கவாறு
           பயன் படுத்துவது
  • இலங்கை முஸ்லிம்களின் அனைத்து விடயங்களையும் 
         நெறிப்படுத்தும் மத்திய நிலையத்தை தெரிவு செய்வது 
         அல்லது உருவாக்குவது
  • சிங்கள தமிழ் சமூகத்தில் காணப்படும் நடு நிலையான 
         மனிதர்களையும் அமைப்புக்களையும் இனம் கண்டு அவற்றுடன் 
         பலமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வது
  • அநியாயமாக கைது செய்யப்படும் முஸ்லிம்களை பிணையில்
          எடுப்பதற்கான சட்டத்துறை அமைப்பை உருவாக்குவது
  • இலங்கையின் முக்கிய சட்டங்கள் தொடர்பான தெளிவுகளை 
          மக்களிடம் வழங்குவது
  • இலங்கையின் கல்வியிலும் தொழில் நுட்பத்திலும் சக்தி மிக்க
          சமுதாய கட்டமைப்பிற்கான திட்டமிடல்களை ஏற்படுத்துவது
இவையனைத்தையும் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின்
 சட்டவாக்க எல்லைகளில் நின்று செயற்படுத்த முடியும். நமக்கு
 இதற்கு சிறந்த உதாரணமாக இஸ்ரேலில் வாழும் அராபிய
 முஸ்லிம்களை குறிப்பிடலாம். அவர்களது சமூக, பொருளாதார, 
அரசியல் ஒழுங்கை பின்பற்றக்கூடிய முறையிலான சமூக 
ஒழுங்கமைப்பை இலங்கையில் ஏற்படுத்துவது
 இன்ஷாஅல்லாஹ் ஓரளிவிற்கு நாளைய சந்ததியை 
நிம்மதியாக வாழ வைக்கும் என நம்புகிறோம்.


ஒரு சுன்னா புறக்கணிக்கப்படும் போது அந்த இடத்தை 
ஒரு பித்ஆவோ அல்லது ஜாஹிலியாவோ நிரப்பிக்கொள்கிறது
 இது அரசியலிற்கும் பொருந்தக் கூடியதே.

அபூ ஸய்யாப்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக