ஆகஸ்ட் 15, 2011


ஏகாதிபத்திய சக்திகள் லிபியப் போரில் இருந்து வெளியேற முயல்கின்றன



நாட்டின் நீண்ட நாளைய சர்வாதிகாரி முஹம்மர் கடாபியை அகற்றி
 பெங்காசியைத் தளமாகக் கொண்ட இடைக்கால தேசியக் குழுவை (TNC)
  ஒரு கைப்பாவை அரசாங்கமாக நிறுவும் முயற்சியில் தோல்வியுற்ற
 நிலையில்,பிரிட்டன் மற்றும் அமெரிக்கா லிபியாவிற்கு எதிரான
 ஏகாதிபத்தியப் போரைமுக்கியமாகத் தூண்டிவிட்ட பிரான்ஸுடன்
 சேர்ந்து போரில் இருந்து வெளியேறுவதற்கு ஒரு மூலோபாயத்தை
 நாடுகின்றன
ஐந்து மாத காலம்லிபிய மக்கள் மீது இறப்பையும் அழிப்பையும் கொண்ட தாக்குதல்களை செய்தபின்பல லிபியத் தலைவரை படுகொலை செய்ய பல முயற்சிகளைமேற்கொண்ட பின்முக்கிய சக்திகள் இப்பொழுது கடாபியுடனும் மற்றும்அவருடைய அரசுடனும் ஒரு உடன்பாட்டைக் காண முற்பட்டுள்ளன.
திங்களன்று பிரிட்டனின் வெளியுறவு மந்திரி வில்லியம்
 ஹேக் ஒருஉடன்பாட்டை அவருடைய அரசாங்கம் 
ஏற்றுள்ளது பற்றிய அடையாளத்தைக்காட்டினார்கடாபி 
அதிகாரத்தில் இருந்து அகற்றப்படும் வரைலிபியா
வைவிட்டு அவர் நீங்கும் வரை போர் முடிவிற்கு வராது 
என்று கூறிய முந்தையஅறிக்கைகளில் இருந்து அவர் 
பின் வாங்கினார்அதற்கு மாறாக ஹேக்இப்பொழுது 
லிபியர்கள்தான் தீர்மானிக்கவேண்டும்” என்று 
கூறியுள்ளார்.வெள்ளை மாளிகைச் செய்தித்தொடர்பாளர் 
ஜே கார்னி சில மணி நேரத்திற்குப்பின் பிரிட்டனின்
 நிலைப்பாட்டிற்கு ஒப்புதல் கொடுத்த வகையில்,
செய்தியாளர்களிடம் கடாபி நாட்டில் இருப்பதா வேண்டாமா
 என்பது லிபியமக்கள் முடிவெடுக்க வேண்டிய விடயம்” 
என்றார்.
ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் பிரெஞ்சு 
அரசாங்கம் ஏற்கனவேகடாபியுடன் உடன்பாட்டைக் 
காண்பதற்கு தன் விருப்பத்தைக் காட்டியுள்ளது.ஜூலை 
10ம் திகதி பிரெஞ்சு பாதுகாப்பு மந்திரி Gerard Longuet அது இடைக்காலத்தேசியக் குழுவின் எழுச்சியாளர்களுக்கு” 
கடாபியின் விசுவாசிகளுடன்பேச்சுக்களை நடத்த அழுத்தம் 
கொடுப்பதாக அறிவித்தார். சர்வாதிகாரியேஅவருடைய 
அரண்மனையில் வேறு ஒரு அறையில் வேறு ஒரு 
பதவியுடன்இருக்கலாம்” என்பதையும் ஏற்க சொல்லியுள்ளார்.
லிபிய மக்களுடைய ஜனநாயக” விருப்பத்தின்பால் எனக் 
கூறப்படும் இத்தகைய இழிந்த செயற்பாடுகள் ஒரு 
கண்துடைப்பாகும். நாட்டில் கடாபி இருக்கலாம்என்பது
 ஏற்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாகஇது அவருடையநெருங்கியவர்கள் மற்றும் அதிகாரம் செலுத்
துபவர்களுக்கு தங்கள் சலுகைகள்,நிலைப்பாடுகள்செல்வம் 
ஆகியவற்றைத் தக்க வைக்க அனுமதிக்கும் ஓர்உடன்
பாட்டை மேற்கொள்ளத் தயார் என்பதற்கான ஏகாதிபத்திய 
சக்திகளின் தெளிவான அடையாளம் ஆகும்.
இந்த அறிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையின் தூதர் 
அப்துல் எல அல்-கதிப்மற்றும் கடாபி அரசாங்கத்தின் 
பிரதிநிதிகள் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளும்
திட்டங்களை இயற்றும் இராஜதந்திர நடவடிக்கையுடன் 
ஒரே காலத்தில் வெளிவந்துள்ளது. ரஷ்ய அரசாங்கம்
 ஓர் ஐந்து நபர் இடைக்கால ஆட்சி என்னும்திட்டத்தை
 முன்வைத்துள்ளது. இதில் இரு கடாபி விசுவாசிகள்
இருஇடைக்கால தேசியக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் 
இருதரப்பினரும் ஒப்புக்கொள்ளும் ஐந்தாவது நபர் 
ஆகியோர் இருப்பர்.
ஏகாதிபத்திய இராஜதந்திரத்தில் இத்தகைய மாற்றம் என்பதுஆரம்பத்திலிருந்தே போரை தொடக்கும் 
பின்னணியில் கொள்ளைமுறை மற்றும் புதிய காலனித்துவ
 செயற்திட்டம் ஆகியவை இருந்தன என்பதற்கான 
அழிவுகரமான உறுதிபடுத்தலாகும்.
பிரெஞ்சுபிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் 
துனிசியா மற்றும்எகிப்தில் ஏகாதிபத்திய சார்புடைய 
சர்வாதிகாரிகளை அகற்றிய வெகுஜன மக்கள்எழுச்சிகளை 
தமது வட ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கில் உள்ள 
நலன்களுக்குஓர் அச்சுறுத்தல் எனக் கண்டனஇவை 
ஒவ்வொன்றும் நெருக்கமான அரசியல்மற்றும்
 பொருளாதார உறவுகளைக் கொண்டிருந்த கடாபியின் 
லிபியா தங்கள்கட்டுப்பாட்டின்றகீழ் கொண்டுவரப்பட
 வேண்டும் என்பதில் அவை உறுதியாகஇருந்தன.
விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள் நிரூபிப்பது போல்,
 நாட்டின் செழிப்புமிக்க எண்ணெய்எரிவாயு இருப்புக்களை
 சுரண்டுவதில் இன்னும்ஆதாயமான ஒப்பந்த விதிகள் 
வேண்டும் என்னும் கடாபியின் முயற்சிகள்பற்றிக் கவலை
 கொண்டுஅவருடைய சீனரஷ்ய பெருநிறுவன நலன்கள் 
பால்இருந்த அக்கறை குறித்தும் கவலை கொண்டது
அவருடைய ஆட்சியை மக்கள்எழுச்சி மூலம் அகற்றிவிட்டு
 பதவிக்கு வரும் எந்த அரசாங்கமும் நாட்டின்இயற்கை 
செல்வத்தில் கூடுதலான பங்கைத்தான் கேட்கும்.
இதற்கு மாற்றீடாக ஏகாதிபத்திய
 சக்திகள் கிழக்கு லிபியாவில்
 பெங்காசியில்ஒரு புதிய ஆட்சியை
 நிறுவும் திட்டத்தை கொண்டன
திரிப்போலியை தளமாக கொண்ட
 கடாபி அரசாங்கத்திற்கு எதிராக 
குறைகூறுவோர் பெங்காசியில்இருந்தனர்அத்தகைய 
ஆட்சிதான் நாட்டின் ஆதாரங்களை அமெரிக்கா மற்றும்
மேற்கு ஐரோப்பிய நலன்களின் கைகளில் ஒப்படைக்கும் 
என்பது மட்டும்அல்லாமல்ஏகாதிபத்திய துருப்புக்களுடன் 
உடன்பாடு கொண்டுபிராந்தியத்தில்அமைதியின்மை 
மேலும் பரவாமல் ஒரு தடுப்புச் சக்தியாகவும் இருக்கும்.
பெங்காசியில் இன்னும் அதிக ஜனநாயகம் தேவை 
என்பதற்கான எதிர்ப்புக்கள்வெடித்த சில வாரங்களுக்குள்
பின்னர் இடைக்கால தேசிய குழுவை ஆரம்பித்த ஒரு சிறு 
குழுவினர்ஆட்சிக்கு எதிராக ஆயுதமேந்திய எழுச்சியை
 தொடக்கினர்.எழுச்சி என அழைக்கப்பட்ட இந்நிகழ்விற்கு 
பின்னணியில் இருந்த நபர்கள்முன்னாள் கடாபி 
அமைச்சர்கள், CIA செயலர்கள் மற்றும் கடாபி 
சார்புடையஇஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்ற
 ஒரு கூட்டுக்குழுவினர் ஆகும்.இவர்களுடைய சிறு 
அளவிலான எழுச்சியை அடக்குவதற்கு லிபிய 
ஆயுதப்படைகள் எடுத்த நடவடிக்கைகள் பெரிய 
சக்திகளால் மிகைப்படுத்தப்பட்டுஇனக்கொலை போல்
 குடிமக்களுக்கு எதிரான இரத்தக் களறி எனக்கூறப்பட்டு,
வெளிநாட்டு இராணுவத் தலையீட்டின்மூலம்தான்
 தடுக்கப்படும் என்றும்கூறப்பட்டது.
அப்பொழுது முதல் நடந்தவை அனைத்தும் ஏகாதிபத்திய
 சார்பு இந்த எழுச்சிஒரு பரந்த மக்கள் இயக்கத்தை 
பிரதிபலிக்கவில்லைலிபிய மக்கள்நெடுகிலும்வெகுஜன
 ஆதரவைக் கொண்டிருக்கவில்லை என்பதை நிரூபித்தன
.திரிப்போலியும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் கடாபியின் கட்டுப்பாட்டிற்குள்உறுதியாக இருந்தனஎதிர்பார்த்ததற்கு
 மாறாகலிபிய இராணுவம் அதிகமாகஅரசாங்கத்திற்கு 
ஆதரவைக் கொடுத்து நின்றதுஇடைக்கால தேசியக் 
குழுவின்ஆயுதப் படைப் பிரிவுகளில் ஏராளமான மக்கள் 
சேரவில்லைபயிற்சிகள் அற்றகிளர்ச்சி” இராணுவம் 
பலமுறையும் நேட்டோ வான்வழித் தாக்குதல்களால்லிபிய 
சக்திகள் கைவிடும் கட்டாயத்திற்கு உட்பட்ட நிலப்பரப்பு
க்களைக்கூட தக்கவைத்துக் கொள்ளுவதில் பல முறையும் 
தோல்வியுற்றன.
இப்போர் ஒன்றும் குடிமக்களைக் 
காப்பாற்றுவது தொடர்பானதல்ல. 
ஐக்கியநாடுகள்  தீர்மானம் எண் 
1973ன் மூலம் போரை நியாயப்ப
டுத்தியதில் இருந்து,அமெரிக்கா
பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவை நேட்டோ கூட்டு 
என்னும்குடையின்கீழ் செயல்பட்டுஆட்சிமாற்றம்தான் 
தங்கள் உண்மையானசெயற்பட்டியல் என்பதை ஒன்றும்
 இரகசியமாக வைத்திருக்கவில்லை.
இந்த இலக்கை அடைவதற்கான முக்கிய சக்திகளின் 
முயற்சிகளில் குற்றம்சார்ந்த தன்மைதான் இருந்ததுபல
 படுகொலை முயற்சிகளில் இலக்காக கடாபிஇருந்தார். 
அவற்றுள் ஒன்று அவருடைய மகன் மற்றும் மூன்றுபேரக்
குழந்தைகளைக் கொன்றதுநூற்றுக்கணக்கானஏன் 
ஆயிரக்கணக்கானஎன்றும் கூறலாம்லிபியப் படையினர்
 கடாபியின் இராணுவத்தைத் தகர்க்கும்இலக்கு 
கொண்டிருந்த வான்தாக்குதல்களில் படுகொலையுண்டனர்.
நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் கொடுக்கப்பட்டு
சிறப்புப் படைகள்,கூலிப்படைகள் மற்றும் நேட்டோ 
நாடுகளின் உளவுத்துறைச் செயலர்கள்லிபியாவிற்கு
 எழுச்சியாளர்களுக்கு” இராணுவப் பிரிவுகளைக் 
கட்டமைக்கஉதவுவதற்கு அனுப்பப்பட்டிருந்தனர்நாட்டின்
 மேற்குப் பகுதியில் பழங்குடிமக்களுக்கு பிரான்ஸ்
 சட்டவிரோதமாக விமானங்கள் மூலம் ஆயுதங்க
ளைகொடுத்தது.
லிபிய அரசாங்கத்தின் கருத்துப்படிதிரிப்போலி மற்றும்
 பிற கடாபி ஆதரவுப்படைகள் இருந்த அடிப்படை 
உள்கட்டுமானங்கள் குண்டுத்தாக்குதலுக்குஉட்பட்டதில் 
குறைந்தபட்சம் 1,108 குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், 4,500க்கும்மேலானவர்கள் காயமுற்றுள்ளனர்நேட்டோ 
வேண்டுமென்றே குடிமக்களைஇலக்கு கொண்டு தாக்குதல் 
நடத்தியதுஅதை ஒட்டி மக்கள் ஆட்சிக்கு எதிராகத்திரும்ப 
அச்சுறுத்தப்படலாம் என்பதற்கான சான்றுகள் 
பெருகிவருகின்றனஇந்தவாரம் திரிபோலிக்குக் 
கிழக்கே ஜ்லிடான் சிறுநகரத்தில் ஒரு தொற்று
நோய்சிகிச்சை நிலையம் மற்றும் உணவுக் கிடங்கு 
ஆகியவை தாக்கப்பட்டன. CNN ல்இருந்து வந்த 
செய்தியாளர்களுக்கு ஒரு மசூதி மற்றும் பள்ளியின்
 சிதைவுகள்காட்டப்பட்டனஉள்ளூர் அதிகாரி ஒருவர்
 CNN இடம் நேட்டோமக்கள்மீது பரந்தஅளவிலான 
போரை நடத்திவருகிறதுஅவர்கள் அனைத்தையும்
அழிக்கின்றனர்.” என்றார்.
லிபியா மீதான குற்றம் 
சார்ந்த போர் இப்பொழுது 
ஒரு இழிந்த கட்டத்தை
அடைந்துள்ளது
அமெரிக்காவிற்கும் 
அதன் நட்பு நாடுகளு
க்கும்சங்கடமாகிவிட்ட 
ஐந்து மாத காலப் போரை நிறுத்தும் முயற்சிகள்வெளி
வந்துள்ளனஇம்மாதம் முக்கிய சக்திகள் அனைத்தும் 
இடைக்காலதேசியக் குழுவை சட்டபூர்வமான அரசாங்கம்” 
என அங்கீகரித்து $130 பில்லியன்என மதிக்கப்பட்டுள்ள 
மேலை வங்கிகள்நிதிய அமைப்புக்களில் உள்ள லிபியச்
சொத்துக்களை அடிப்படையில் திருடும் திட்டத்தைக் 
கொண்டனஅவற்றின்நோக்கம் மிகத் தெளிவானதுதான்
செல்வத்தை மீண்டும் பெறுவதற்குகடாபியைச் சுற்றி 
உள்ள லிபிய உயரடுக்கு இடைக்கால தேசியக் குழுவுடன்
பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அது பற்றிய விதிகள்
 அமெரிக்காபிரிட்டன்மற்றும் பிரான்சினால் 
ஆணையிடப்படும்இறுதியில் கடாபியின் அரசு
 அல்லது இடைக்கால தேசியக் குழு ஆகியவற்றின்
 பிரிவுகளிடம் இருந்து எத்தகையகூட்டுக்கள் 
வெளிப்பட்டாலும்அவற்றிற்கும் ஜனநாயகத்திற்கும் 
எத்தொடர்பும்இருக்காது.
லிபியா மீதான அமெரிக்க-நேட்டோ போர் பல போலி 
இடது மற்றும்தாராளவாதப் போக்குகள்தனிநபர்கள் 
ஆகியோர் இழிந்த முறையில்அம்பலப்படுத்தப்பட்
டுள்ளதையும் எடுத்துக்காட்டியுள்ளது. இதில் பிரான்சின்
 புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சிநேஷன் ஏடுமனிதாபிமானக்காரணங்களினால்” தலையீட்டிற்கு 
ஒப்புதல் கொடுத்த அமெரிக்க உயர்கல்வியாளர் யுவான் 
கோல் ஆகியோர் அடங்குவர்ஆயிரக்கணக்கான மக்கள்
இறந்ததுஒடுக்கப்பட்ட நாடு பேரழிவிற்கு உட்பட்டமை 
ஆகியவற்றை இவர்கள்நியாயப்படுத்தியுள்ளதன் மூலம்
 லிபியா மற்றும் இன்னும் பரந்த வகையில்அப்பிராந்
தியத்தில் வாழும் மக்களின் நலன்களுக்கு நேரடி எதிரான
 தன்மையில் ஏகாதிபத்திய சக்திகள் அரசாங்கத்தை தம் 
விருப்பம் போல் அமைக்கலாம்என்பதையும் ஏற்றுக்
கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக