டிசம்பர் 11, 2011

அமெரிக்கா 

தரகர்கள் முகாமைக் கைப்பற்றினர் மக்கள்

நிறுவனங்களுக்கிடை யிலான பேரங்களை முடித்து தரும் தரகர்களாகப் பணிபுரிபவர்களின் அலுவலகங்கள் உள்ள தெருவை அமெரிக்க முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டக்கா ரர்கள்கைப்பற்றினர். கே ஸ்டிரீட் என்ற ழைக்கப்படும் இந்தத் தெரு அமெரிக்கத் தலைநகர்வாஷிங்டனில் அமைந்துள் ளது. இந்தத் தரகர்கள், முத லாளித்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பது போராட்டக்காரர் களின் கருத்தாகும். தங்கள் கோரிக்கைகளைவலியு றுத்தி இவர்களின் அலுவல கங்கள் உள்ள தெருவைக் கைப்பற்றப் போகிறோம் என்றுபோராட்டக்காரர் கள் அறிவித்தனர். இந்த அறி விப்பைக் கேட்டு ஏராள மான மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் குவிந்தனர்.

போராட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மக் கள் அத்தெருவில் வலம்வரத்துவங்கினர். போராட் டத்தை நிறைவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று கருதியகாவல்துறை பலரைக் கைது செய்தது. அத்தெருவிற்குள் இருந்த போராட்டக்காரர் களைஅப்புறப்படுத்தும் வேலையையும் செய்தனர். ஆனால் சிறிது நேரத்தில் மற்றொரு குழு அத்தெருவை முழுமையாகக் கைப்பற்றிக் கொண்டது. 

மனிதச்சங்கிலி போன்று ஒருவரோடொருவர் கை களைக் கோர்த்துக் கொண்டுமுழக்கமிட்டவண்ணம் இருந்தனர். தொழிற்சங்கத்தி னர், முற்போக்காளர்கள், சில சிறிய அரசியல்கட்சி களைச் சேர்ந்தவர்கள் என்று பலரும் போராட்டத் திற்கு முன்னணியில் இருந் தனர். 

கூடாரங்களை அகற்றும் காவல்துறை

சான் பிரான்சிஸ்கோ வில் போராட்டக்காரர்கள் அமைத்திருந்த 100 கூடாரங் களைகாவல்துறையினர் கலைத்துள்ளனர்.
 அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த இடத்தை விட்டு அகலமாட்டோம் என்று நூற்றுக் கணக்கான மக்கள் ஆர்ப் பாட்டம் நடத்தினர். அதில் 50 பேரைக் கைதுசெய்து காவல்துறையினர் அழைத் துச் சென்றார்கள். கலவரத் தை அடக்கும் காவல்துறைப்பிரிவை, அமைதியா கப் போராடும் மக்கள் மீது அமெரிக்க நிர்வாகம் ஏவி வருகிறது. சான்
பிரான்சிஸ் கோவிலும் இப்பிரிவினர் தான் ஆயுதங்களோடு மக்க ளை மிரட்டி வருகிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக