டிசம்பர் 01, 2011

மிக அபாயகரமான வைரஸ் பற்றிய தகவல்கள்

னிதர்களையே அழித்துவிடக் கூடிய மனிதனால் உருவாக்கப்பட்ட Flu  ைரசினைக்கண்டுபிடித்தமை பற்றிய விபரங்களை நெதர்லாந்தின் விஞ்ஞானிகள் வெளியிடவுள்ளனர். இந்தஅபாயகரமான வைரஸ் சி5னி1 பறவைக் காய்ச்சல் வைரசினை ஒத்ததாகும். ஆனால் இது அதனைவிடவும் கிருமித்தொற்று மிக்கதென்றும் ஒரு தடவையிலேயே மில்லியன் கணக்கானோரில்கடத்தப்பட்டுவிடும் என்றும் கூறுப்படுகின்றது. இதனால் இந்த ஆய்வு சர்ச்சைக்குரிய நிலையைஏற்படுத்தியுள்ளதுடன் விஞ்ஞானிகளையும் இரு பிரிவாகப் பிரித்துள்ளது. ஒரு பகுதியினர் இதன்விபரங்களை வெளியிடக்கூடாது என்றும் சிலர் இதனைச் செய்யவேண்டும் என்றும் தெரிவித்தனர்.
பறவைக் காய்ச்சலின் வைரஸ் 500 பேரை மட்டுமே கொன்றது. அத்துடன் உலகளாவிய ரீதியில்பரம்பலடையாது. ஆனால் தற்போது உருவாக்கப்பட்ட வைரஸ் பிழையான கைகளில்கிடைத்துவிட்டால் மிகவும் ஆபத்தானதாக உள்ளதால் உயிரியல் போரிற்குப் பயன்படுத்தக்கூடியஅபாயத்தை ஏற்படுத்திவிடலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த ஆய்வுசர்வதேசத்தினை H5N1  இண முழுவதும் விளங்கிக்கொள்வதன் பாகமாகவேமேற்கொள்ளப்பட்டதென இவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கண்டுபிடிப்பினால் இக்குழு ஊடகத்தின் பாய்ச்சலினை எதிர்கொள்ள வேண்டியநிலையிலும் உள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு மருத்துவ ரீதியில் நல்லதொரு முன்னேற்றம் எனினும்துணைபோகக்கூடும் என்றும் கருதப்படுகின்றது. இதனால் இதுபற்றிய விடயங்களைவெளியிடுவது தடுக்கப்பட வேண்டுமென்றும் வெளியிடப்பட்டால் உயரியல் தீவிரவாதத்திற்குத்துணைபோகும் காரியங்களைச் செய்பவர்களுக்கு இது உதவக்கூடுமென்றும் ஆய்வாளர்கள்கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக