செப்டம்பர் 13, 2011



உலக அழிவின் சாத்தியக்கூறுகள்


ன்று உலகம் விஞ்ஞானம்தொழிநுட்பம்,மருத்துவம்கலைஇலக்கியம் எனபல்துறைகளிலும் அபரிமித வேகத்தில்முன்னேறிச் சென்றுகொண்டிருக்கின்றது.ஒவ்வொரு துறையிலும் மனித அறிவுமேற்கொள்ளும் ஆழமான ஆய்வுகளே இதற்குவித்திட்டுள்ளது எனலாம்எனினும் இத்துனைவேகமான முன்னேற்றம் அதன் ஆயுளின்தொடர்ச்சியான குறைவைக் காட்டுகின்றது.இல்லாமையிலிருந்து உருவானவொன்று வளர்ந்து வளர்ந்து இறுதியில் அதுஇல்லாமலேயே போவதுதான் இயற்கையின் நியதிஇல்லாமையிலிருந்துதோன்றிய மனிதன் இறுதியில் மரணித்து எவ்வாறு இவ்வுலகில் பூச்சியமாகிப்போகின்றானோ அதுபோன்றுதான் பிரபஞ்சமும்அது எவ்வாறுஇல்லாமையிலிருந்து தோன்றியதோ அவ்வாறே அது அழிவதும் நிச்சயமானது.
பெரும்பாலானோர் உலகம் அழியக் கூடியதென நம்பினாலும் மற்றும் சிலர்இதனை நம்புவதில்லைஇக்கொள்கை அவர்களது இவ்வுலக வாழ்வின்போக்கையே மாற்றிவிடுகின்றதுஇது முற்றிலும் இஸ்லாமிய அகீதாவுக்குமுரண்பட்டுப்போவதைக் காணலம்முஸ்லிம்கள் கூட உலக அழிவைநம்பினாலும் அவர்களது நடத்தைக் கோலங்கள் அதனைப் பிரதிபலிப்பதாகஇல்லைஇஸ்லாமிய மார்க்கமானது இப் பிரபஞ்சம் ஒரு நாள்அழிக்கப்பட்டுவிடும் என்று ஆணித்தரமாக முழங்கிக்க்கொண்டிருக்கிறன்து.இஸ்லாம் மார்க்கத்தின் இக் கூற்று அல்குர்ஆன் ஒரு இறைவேதம் என்பதைஉறுதிப்படுத்துகிறதுநடைமுறை வாழ்வில் மனிதன் எதிர்கொள்ளும் பலசவால்கள் இவ்வுலக அழிவை நிதர்சனப்படுத்துகின்றனவளி மாசடைதல்,ஓஷோன் படையில் ஓட்டைபுவி வெப்பமடைதல்நச்சு வாயுக்களின் தாக்கம்,மண் சரிவுவெள்ள அபாயம்விண்கற்களால் பாதிப்பு... என இவ்வாறு மனிதன்எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம்சமகால இச்சவால்கள் எவ்வாறுஇறைதேமான அல்குர்ஆனின் கூற்றை உண்மைப்படுத்துகின்றன என்று நாம்பார்ப்போம்.
புவி வெப்பமடைதல்
இன்று விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளபரவலாகப் பேசப்படுகின்ற ஒரு விடயம் தான்புவியின் வெப்பம் அதிகரித்தலாகும்இது ‘புவிவெப்பமடைதல் - Globle Worming என்றுஅழைக்கப்படுகிறதுபுவிவெப்பமடைதலால் எதிர்காலத்தில் புவியின் நிலைபற்றியும்புவியில்உயிர் வாழ்க்கை பற்றியும் விஞ்ஞானிகள் ஆய்வுசெய்கிறார்கள்இதன் முடிவுகளை அவர்கள்பின்வருமாறு வெளியிட்டுள்ளனர்;. “மனிதசெயற்பாடுகளினால் வெளியிடப்படும் சிலவாயுக்கள் காரணமாக ஓசோன் படையில் ஏற்படும் துளை காரணமாக புவியின்வெப்பநிலை அதிகரிக்கிறதுபச்சைவிட்டு வாயுக்களின் (Green house gas)வெளியேற்றம் புவிவெப்பமடைதலில் பங்களிப்புச் செய்கிறதுபச்சை வீட்டுவிளைவை காபனீரொட்சைட்டு (Co2)மெதேன் (CH4)நைதரொட்சைட்டு (NO2)என்ற வாயுக்களே நிர்ணயிக்கின்றன.
இவ்வெப்ப அதிகரிப்பானது 2020ஆம் ஆண்டில் 1.50C ஆக உயரும். “மேலும்காலநிலை பற்றிய ஆய்வொன்றை மெற்கொண்ட ‘அட்லெடிக் கவுன்சில்’ என்றஅமைப்பின் 250 விஞ்ஞானிகள் சுமார் 4வருடங்கள் தீவிரமாக ஆராய்ந்ததன்பின்னர் வெளியிட்ட ஒரு அறிக்கையை நாம் இங்கு அவதானிப்பதுபொருத்தமானதாகும்இவ் அறிக்கையினது சுருக்கம் வருமாறு. “புவியின்ஏனைய பகுதிகளை விட வடதுருவம் இரு மடங்கு அதிகமாக வெப்பமடைகிறது.இதனால் 20% ஆன பனிக்கட்டிகள் உருகிவிட்டன. 2100ஆம் ஆண்டளவில் அங்குவாழும் துருவக்கரடிகள்கடல்சீல்கள்பென்குயின் பறவைகள் போன்றஉயிரினங்கள் முற்றாக அழிந்து விடும்அது மட்டுமின்றி துருவப்பகுதியின்பனிக்கட்டிகள் உருகி மத்திய பகுதிகளை நோக்கி வடிவதனால் இப்பகுதியிலுள்ளகடல் நீரின் மட்டம் அதிகரித்து புவியின் பெரும் பகுதி கடலினால் காவுகொள்ளப்படும்.” என்கின்றனர்இதனைத்தான் அல்குர்ஆன் சூசகமாக இவ்வாறுகுறிப்பிடுகின்றது.
நிச்சயமாக பூமியை அதன் ஓரங்களிலிருந்து (படிப்படியாகநாம் குறைந்துவருவதை அவர்கள் காணவில்லையா?” (அல்குர்ஆன்)
சூரியக் கதிர்வீச்சின் தாக்கத்தின் காரணமாக புவி வெப்பமடைந்து எதிர்வரும் 2012ஆம் ஆண்டில் புவி அழியப்போகின்றது என்ற பீதி அண்மையில் உலகெங்கும்ஒலித்ததையும் அவதானிக்க முடிந்ததுபுவி சிதைந்து அழிவதனை அண்மையில்வெளியான 2012, 2020, Tsunami, The Day After Tommorow  என்ற திரைப்படங்கள் மிகத்தத்ரூபமாகச் சித்தரிக்கின்றனஇந்நிகழ்வுகள் யாவும் புவியின் அழிவு நிச்சயம்என்பதனையே உணர்த்தி நிற்கின்றன.
ஓஷோன் படை தேய்வடைதல்.
புவியின் அழிவிற்கான மற்றுமோர் சாத்தியக் கூறுதான் ஓஷோன் படையின்தேய்வுமனிதன் புரியும் பல்வேறு காரணிகளால் இன்று ஓஷோன் படைதேய்வடைந்து வருகின்றதுஇதன் காரணமாக சூரியனிலிருந்து வெளியேறும்நச்சுக்கதிர்களான கலியூதாக் கதிர்களின் தாக்கத்தினால் தாவரங்கள் அழிந்துஅதனால் புவியில் உயிர் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும்மேலும் தோல்புற்றுநோய்தோலில் கரும்புள்ளிகள் தோன்றுதல்தோல் இறந்து சுருங்குதல்,கண்ணில் வெண்மை படருதல்பார்வை பாதிப்படைதல்சுவாசநோய்கள்ஏற்படல் என இதுபோன்று பல்வேறு நோய்களினால் உயிர் ஜீவிகள் பாதிக்கப்பட்டுஅவை மறிக்கநேரிடும்.
சூழல் மாசடைதல்
சூழல் மாசடைதலும் பூமியின் அழிவுக்குப்பங்களிப்புச் செய்யும் மற்றுமொரு காரணி எனஇன்றைய விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள்.இதில் அதிகளவு தாக்கம் செலுத்துவது நவீனஇலத்திரனியல் சாதனங்கள் என்றால் ஆச்சரியப்படுவீர்கள்இன்று அதிகளவு பயன்பாட்டில் உள்ளகணிணிகையடக்கத் தொலைபேசி,தொலைக்காட்சிவானொலி என்பன அதிகமதிகம்உற்பத்திசெய்யப்பட்டு நுகரப்படும்பொருட்களாகும்இச் சாதனங்களில் பல இரசாயன மூலங்கள்சேர்க்கப்பட்டுள்ளனஇவற்றைப் பயன்படுத்த முடியாதுபோகும் சந்தர்ப்பத்தில்நாம் எமது சுற்றுப்புறச் சூழலுக்கு இவற்றை விட்டு விடுகின்றோம்.காலப்போக்கில் இச்சாதனங்களிலுள்ள இரசாயன மூலங்கள் சூழலுக்கும்மனிதனுக்கும் பலத்த பாதிப்பை ஏற்படுத்திவிடுகின்றனஇவ்வாறுகுப்பையாக்கப்படும் இலத்திரனியல் கழிவுகள்  e-waste இன அழைக்கப்படுகின்றன.இச்சாதனங்களில் உள்ள இரசாயனக் கலவைகள்பார உலோகங்கள் சூழலுடன்சேர்ந்து மண்நீர் என்பவற்றை பாதிப்படையச் செய்து தாவர வளர்ச்சியில்பாதிப்பை ஏற்படுத்தும்இதனால் அவற்றை உணவாகக் கொள்ளும் உயிரினங்கள்பல நோய்களுக்கு ஆளாகி இறக்க நேரிடும்.
உலகளவில் வருடாந்தம் 20 – 50 மெட்ரிக்தொன் இலத்திரணியல் கழிவுகள் e-wasteசூழலுக்கு விடப்படுகின்றனஅமெரிக்காவில் மாத்திரம் வருடாந்தம் 12 - 20மில்லியன் கணிணிகளும்  ஜெர்மனியில் 35 இலட்சம் தொலைக்காட்சிகளும்வருடாந்தம் பழுதடைந்து கழிவாக்கப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.எனினும் தற்போது அதிகமாக கையடக்கத் தொலைபேசிகளே இலத்திரணியல்கழிவுகளாக சூழலில் சேர்க்கப்படுகின்றன எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இன்று ஒரு கணிணியை உற்பத்தி செய்கையில்  90Kg கழிவுப்பொருட்கள்உண்டாவதாகவும் 33,000 லீற்றர் நீர் மாசடைவதாகவும் அதிகமானளவு வளிமாசடைவதாகவும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றனஓர் கணிணியே இந்த அளவுசூழலை மாசடையச் செய்யுமெனில் வருடாந்தம் கழிவாக்கப்படும்தொன்கணக்கான கணிணிகளால் ஏற்படும் பாதிப்பைச் சற்று சிந்தித்துப்பாருங்கள்இவற்றில் உள்ள  Cadmium Arsenic   Astronium> ஈயம்தகரம் என்பனவேகழிவுகளாக மாறுகின்றனஇக்கழிவுகள் பூமியை துரிதகதியில்அழிவுக்குள்ளாக்குவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
நீர் மாசடைதல்
உயிர் வாழ்க்கைக்கு நீர் மிக மிகஅத்தியவசியமானதொன்றாகும்உலகில் 79%நீரால் அமைந்திருப்பது இதன் முக்கியத்துவத்தைஎடுத்துக்காட்டுகின்றதுஅந்த நீர் இன்றுமனிதனால் மாசுபடுத்தப்பட்டு வருகின்றது.ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான தொன்கழிவுகள் கடலிலும் இதர நீர்ப் பரப்புகளிலும்கொட்டப்பட்டு வருகின்றனகழிவு நீர்களும்குப்பை கூழங்களும் தொழிட்சாலைகளின்உற்பத்தியில் கழிவான பொருட்களும்பலவிதமான அமிலங்கள் சேர்ந்த இரசாயனக்கழிவு நீர்களும் நீர் நிலைகளில் விடப்பட்டுமாசடையச் செய்யப்படுகின்றனமேலும் கடலில் செல்கின்ற ஆயிரக்கணக்கானகப்பல்களிலிருந்து விடப்படுகின்ற அழுக்கு எண்ணைகள்ஏவுகனைப்பரிசோதனைகள் என்பவற்றாலும் நீர் மாசடைகின்றதுஇவ்வாறு கடலிலும்கரையிலும் நீர் நிலைகளிலும் சேர்க்கப்படுகின்ற கழிவுகளின் விசத்தன்மையால்அவற்றில் வாழும் உயிரினங்களும் தாவரங்களும் அழிந்து விடுகின்றன.இந்நீரைப் பயன்படுத்தும் மனிதனும் இதனால் பல்வேறு சவால்களைஎதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு உள்ளாகின்றான்.
விண் கழிவுகள்
புவியில் தான் மனிதன் குப்பைகளை நிரப்பியுள்ளான் என்றால் இல்லை,விண்ணிலும் மனிதன் குப்பைகளைப் பெருக்கி வருகிறான்இது புவியின்இருப்புக்கு இன்னுமொரு பாரிய சவாலாகும்புவியைச் சூழ விண்ணில்கொட்டப்பட்டிருக்கும் இக் கழிவுகள்  space debris என அழைக்கப்படுகின்றன.விண்வெளி ஆராய்ச்சிக்காக ரொக்கெட்களையும்செய்மதிகளையும்விண்ணுக்கு ஏவவதில் இன்று நாடுகளுக்கிடையே பலத்த போட்டி நிகழ்ந்துவருகின்றதுஇச்சாதனங்கள் விண்ணில் சேதமடையும் போது அங்கேயே அவைகைவிடப்பட்டு கழிவாக்கப்படுகின்றன.  சுமார் 4000 இற்கும் அதிகமானவிண்வெளி வாகனங்கள் இதுவரை விண்ணில் செலுத்தப்பட்டுள்ளனநாஸாநிறுவனத்தின் புள்ளிவிபரப்படி இதுவரை விண்ணில் புவியைச் சூழ 7 - 10சென்றிமீற்றர் அகலமான 1300 குப்பைகள் space debris உள்ளதாகக்கணிப்பிடப்பட்டுள்ளதுஇவை அனைத்தும் புவியின் இருப்புக்கு பாரியஅச்சுருத்தலாகும்.
விண்கற்கள்
வியின் இருப்புக்கு அச்சுருத்தலாக உள்ளஇன்னுமொரு காரணிதான் விண்கற்களாகும்.பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர்பாரியதொரு விண்கல் பூமியில்வீழ்ந்ததனாலேயே உலகில் வாழ்ந்தடைனோஸர்கள் அழிந்ததாகக் கருதப்படுகின்றது.விண்கற்கள் பூமியுடன் மோதுவதுதற்குஅதிகமான சாத்தியக் கூறுகள் உள்ளதாகவிண்ணியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 2019ஆம் ஆண்டில் ஒரு விண்கல் புவியுடன் மோதும் அபாயம் உள்ளதென நாஸாவிஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 1.24 மைல் நீளமான பாரிய விண்கல் ஒன்றுபுவியின் சுற்றுப் பாதையை நோக்கி வந்துகொண்டிருப்பதாக இவர்கள்கூறுகின்றார்கள்இக்கல் 2002NT7  எனப் பெயர்டப்பட்டுள்ளதுஇது கடலில்வீழ்ந்தால் பல கிலோமீற்றர்களுக்கப்பால் அலைகள் உயர்ந்து பல நாடுகள்முற்றாக மூழ்கும் அபாயம் உள்ளதாகவும்நிலத்தில் வீழ்ந்தால் பலவருடங்களுக்கு பூமியானது தூசு துகள்களால் மூடப்பட்டு சூரிய ஒளிமறைக்கப்பட்டு பூமி இருளுக்குள் மூழ்கி தாவர வளர்ச்சி பாதிப்படைந்து அதனால்உயிர் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்புவியோடுகளும் சிதைந்து புவியும்அழியும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
சூரிய எரிசக்தி தீர்ந்துபோதல் 
புவியின் அழிவை உறுதிப்படுத்தும் மற்றுமொரு சாத்தியப்பாட்டைஅவதானிப்போம்.  சூரிய மண்டலத்தின் சீரான இயக்கத்திற்குப் பிரதான காரணம்சூரியனின் சீரான இயக்கமாகும்சூரியனின் இயக்கச் சக்திக்குக் காரணம்அதிலுள்ள ஐதரசன் (Hydrgenவாயுவும் இன்னும் சில துணைக் காரணிகளுமாகும்.சூரியன் தனது சக்தியை இழந்தால்புவியும் ஏனைய கோள்களும் சூரியனின்ஈர்ப்புச் சக்தியிலிருந்து விடுபட்டு தமது பாதைகளிலிருந்து விலகி ஒன்றோடுஒன்று மோதி சின்னாபின்னமாகி விடும்சூரியன் அழிந்துவிடும் என்பது யூகமானகூற்றல்லஅதனை ஆராய்ச்சி செய்துள்ள தற்போதைய விஞ்ஞானிகள்,சூரியனில் கருப்புப் புள்ளிகள் காணப்படுவதாகக் கண்டுபிடித்துள்ளார்கள்இதுசூரியன் தனது சக்தியை இழந்து வருவதனைக் காட்டுகிறது.
சூரியனின் எரிபொருளான ஹைட்ரஜன் தீர்ந்து வருவதனாலே இந்தக் கரும்புள்ளிகள் தோன்றியுள்ளனஇன்னும் பல வருடங்களில் சூரியன் முழுவதும்கரும்புள்ளிகள் தோன்றி இருண்டு அது ஒரு கருந்துளையாக (Black holeசெயற்படஆரம்பிக்கும்கருந்துளைகளுக்கு தமக்கு அண்மையிலுள்ள பிற பொருட்களைஉளளீர்த்துக்கொள்ளும் சக்தி காணப்படுகின்றதுஎனவே சூரியன் ஒளி இழந்துகருந்துளையாக மாறினால் அதன் அருகிலுள்ள இதர கோள்கள்சந்திரன்ஒளி,ஒலி போன்ற அனைத்து விண்பொருட்களையும் தன்னுள் ஈர்த்து ஒன்றோடுஒன்றாகி விடும்இச்செயற்பாட்டினையே பின்வரும் குர்ஆனிய வசனம் 1400ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டுள்ளது. “சூரியன் (ஒளியிழந்துசுருட்டப்படும்போது” (அல்குர்ஆன் 81:1) “சூரியனும் சந்திரனும் ஒன்றாக்கப்படும் (அல்குர்ஆன்75:9) இவ்வாறு விண்ணில் காணப்படும் அனைத்து நட்சத்திரங்களும் ஒளியழந்துகருந்துளையாகிவிடும்அல்லாஹ் கூறுகின்றான். “நட்சத்திரங்களும்(ஒளியிழந்துஉதிர்ந்துவிடும்போது” (81:2)
இவ்வாறு புவியின் இறுப்பு அபாயகரமானபல்வேறு சவால்களை எதிர்கொண்டிருக்கின்றது.நாம் இதுவரை ஆராய்ந்தவையல்லாத இன்னும்எத்தனையோ ஆபத்துக்கள் இந்த பூவுலகின்அழிவிற்குக் காரணமாயுள்ளனஇதுபோன்ற  பலகாரணிகளை முன்வைத்து இப்புவி நிச்சயமாகஅழிந்துவிடும் என்பதை விஞ்ஞானிகள்சந்தேகமின்றி எடுத்துக்கூறுகின்றனர்அதுமட்டுமன்றி மனித வாழ்வுக்கு ஏனைய கோள்கள்,சந்திரன் என்பன பொருந்துமா என ஆராய்ந்துஅங்கு மக்களை குடியமர்த்தும் முயற்சிகளிலும்விஞ்ஞானிகள் களமிறங்கியுள்ளனர்எனவேஉலகம் ஏன் பிரபஞ்சமே அழியும் என்றஅல்குர்ஆனின் கூற்று மிகமிக நிதர்சனம் என்பதுயாவரும் அறிந்த உண்மைஇதுவே அல்குர்ஆன் ஓர் இறை வேதம் என்று கூறசிறந்த சான்றுமாகும்.
 அப்படியெனில் புவியும் அதிலுள்ள உயிரினங்களும் அழிந்ததன் பின்னர்இப்பிரபஞ்சமே சூனியமாகி இல்லாமல் சென்று விடுமாஅதேபோன்றுபடைப்புக்களிலேயே மிக உயர்ந்த படைப்பாகிய மனிதனுடைய வாழ்வுமுகவரியற்று அர்த்தமற்றதாகி விடுமாசாதாரண புழு பூச்சிகள் போன்று அறிவுஜீவியான மனிதனும் மரித்ததன் பின்னர் மண்ணோடு மண்ணாகிச்சென்றுவிடுவானாஉண்மையிலே இது நியாயம்தானா?” என்று இதுபோன்ற பலகேள்விகள் எம்முள்ளத்தில் எழுவது இயல்பானதேஎனவே மனிதனது வாழ்க்கைகுறித்து ஆழமாகச் சிந்திக்கும் ஒருவர் நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கைபோலியானது அழிந்துபோகக் கூடியது என்று சிந்திக்கும் அதேவேளைஅர்த்தமுள்ள வாழ்க்கையொன்று இதற்குப் பின்னால் இருக்கவேண்டும் என்றதிடமான முடிவுக்கு வருவார்அதுவே இஸ்லாம் கூறும் மறுமையின்நிரந்தரமான வாழ்வாகும்இவ்வுலகம் அழிவதும் மறுமை நிதர்சனம் என்றும் 14நூற்றாண்டுகளாகக் கூறி வரும் அல்குர்ஆன் இறைவேதம் என்பதுஉண்மையிலும் உண்மை என்பதுதான் நிதர்சனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக