செப்டம்பர் 20, 2011


துருக்கி எதை நோக்கி நகர்கிறது?

துருக்கிய வெளிவிவகார அமைச்சர் 
அஹ்மட் தாவுத் குல் கடந்த 
ஞாயிறன்று நியூயோர்க் டைம்ஸ் 
பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் 
“நாம் எகிப்துடன் சேர்ந்து நட்பு
 நாடுகளின் கூட்டொன்றை 
உருவாக்கவுள்ளோம் என
 கூறியுள்ளார்.

மேற்படி கூட்டமைப்பானது பிராந்திய அரசியல் மற்றும் பொருளாதார 
அபிவிருத்தியை இலக்காக கொண்டு செயற்படும் எனவும் அவர் 
தெரிவித்துள்ளார்.

இதன் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையின் 
எல்லைகளாக தெற்கின் கருங்கடல் முதல் சூடானின் நைல் நதி 
படுக்கை வரை விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஈரான் போன்ற நாடுகளிற்கு எதிரான அணியாக இது 
செயற்பட மாட்டாது என கூறியுள்ள அவர் இதன் போக்கில் அது 
குறுக்கிடாத வரையே எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரு பெரிய தேசங்களான எகிப்தும், துருக்கியும் வருங்காலங்களில்
 முஸ்லிம் நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களிற்கான 
தலைமைத்துவத்தை வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எகிப்தில் துருக்கி ஆரம்ப கட்டமாக 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் 
பெறுமதியான முதலீட்டை மேற்கொள்ளும் என்று கூறிய அவர் பின்னர் 
அது 3.5 பில்லியனாக அதிகரிக்கப்பட்டு 2012ல் சுமார் 5 பில்லியன் 
அமெரிக்க டொலர் வரை அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேற்படி வரைபும் முதலீடுகளும் எகிப்திய அரசின் உருவாக்கத்தின் 
பின்னரான நிகழ்வுகளாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 “அரசியல் ஸ்திரத்தன்மை தேவையென்றால் பொருாளாதார
 ஸ்திரத்தன்மை அத்தியாவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவை நாளைய முஸ்லிம் நாடுகளின் இராணுவ கூட்டிணை 
உருவாக்குவதற்கான முன்னோடி செயற்பாடா என கேட்டதற்கு
 அதனை இப்போது கணிக்க முடியாது என தாவுத் குல் தெரிவித்துள்ளார்.

துருக்கி தேசமானது திடீரென இவ்வாறு பல முகம்களில் அரசியல்
 தலைமைத்துவத்தை வழங்க முற்படுவது பழைய உதுமானிய 
பேரரசை உருவாக்கவா அல்லது இதுவும் கூட அமெரிக்க சீ.ஐ.ஏ.யின்
 அஜன்டாவின் படி நடக்கும் ஒரு வேலைத்திட்டமா? எனும்
 கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.  - Abu Sayyaf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக