செப்டம்பர் 29, 2011


மாயா இனம் - மர்ம நாகரீகத்தின் சொந்தக்காரர்கள்


புராதனவரலாறுகளில் மறக்கடிக்கப்பட்ட அல்லது அதில் புதைந்து
 போன ஒரு நாகரீகம் தான் “மாயா நாகரீகம்” காட்டுவாசிகளும்
 இல்லை. செவ்விந்தியர்களும் இல்லை எனும் ஒரு கலவை நிலை 
மனிதர்கள் இவர்கள். துல்லியமான கணிதமுறை, பிரமிக்கவைக்கும்
 கட்டிடக்கலை, வியக்கவைக்கும் வானிலை கணிப்புக்கள், 
இதையெல்லாம் விட வருங்காலத்தை கணித்து கூறும்
 அவர்களது நாட்காட்டி. என பிரமிக்கவைக்கிறார்கள் மாயாக்கள்.ஆபிரிக்கர்களையும் விஞ்ஞிய
 சூனியகலையின் சொந்தக்காரர்கள் இவர்கள் 
என்றால் அது மிகையல்ல.
இன்று அந்த இனம் காலவழக்கில் அழிவிற்கும் சிதைவிற்கும் 
உட்பட்டு சுமார் 600000 மக்கள் மட்டுமு் பிரேசிலின் அமேசன்
 காட்டோரங்களிலும், குவாத்தமாலாவின் எல்லைகளிலும் 
வாழ்கிறார்கள். அண்மையில் கொண்டுராசிலும் மத்திய 
அமெரிக்காவிலும் உள்ள மாயா இனத்தவரை லத்தீன் அமெரிக்க
 தேசங்கள் புரட்சியாளர்கள், ஆபத்தானவர்கள் என அறிவித்துள்ளன. 


மாய இனத்தவரின் இன அழிப்பில் கிறிஸ்தவ மடாலயங்கள் பல
 இரகசிய திட்டங்களை மேற்கொண்டு காலத்திற்கு காலம் 
அவர்களை அழித்தது. ஐரோப்பாவின் உருவாக்கம் மாயாக்களின்
 அழிவினிலேயே கட்டியெழுப்பப்பட்டது. கிறிஸ்தவல மற்றும் 
சிலை வணக்கங்களில் வெறுப்புற்ற மாயாஇனத்தவர்கள் பலர்
 நாஸ்திக வாழ்வியலலை மேற்கொண்டு வருகின்றனர். 
அண்மைக்காலங்களில் சுமார் 500 இற்கும் மேற்பட்ட மாயா
 இனத்தவர் இஸ்லாத்தை விருப்புடன் தழுவியுள்ளனர்.


2012 உடன் முடிவிற்கு வரும் அவர்களது மாயா கலண்டரின் 
அடிப்படையில் அவர்களது அடுத்த தேடலின் முடிவு இஸ்லாம்.
 அண்மையில் இஸ்லாத்தை தழுவிய மாயாக்கள் சிலர் புனித ஹஜ் 
கடடைமையை மேற்கொண்டுள்ளனர். இன்னும் பலரும்
 இஸ்லாத்தை அறிய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்த மர்ம
 நாகரீகத்திற்கு சொரந்தக்காரர்கள் இஸ்லாத்தை நோக்கி
 நகர்வதையிட்டு தென்னமரிக்க கிறிஸ்தவ மடாலயங்கள் கவலை
 கொண்டுள்ளன.








1.jpg
                                                             (மாயா நகர பகுதி) 
கி.- 909-ஆம் ஆண்டு, தெளிவற்ற காரணத்தோடு, 80 
விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மாயா இனத்தவர்கள் உலகின்
 பார்வையிலிருந்து காணாமற் போகிறார்கள், அவர்கள் எங்கே 
போனார்கள் என்ற காரணத்தை யாருக்கும் சொல்லிக்
 கொள்ளவில்லை. நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த கோவிலின்
 வேலைபாடுகள் நிறைவடையவ்லை. சிலைகள் பாதியாய் ஊருவம்
 வாங்கி நிற்கின்றன. அனைத்தும் பாழடைந்து புதைந்து 
கொண்டிருக்கிறது.
வேண்டுதள்களும், மாய மந்திர வேலைகளும் அமைதி 
பெற்றுவிட்டது. அன்று முதல், இவ்வினத்தின் மூதாதைகளின் 
புத்திசாளிதனமும், கற்பித்தலும் காற்றோடு கலந்து போகிறது. 
மிச்சம் மீதி இருந்த மாயா இனத்தவர்களுக்கு எழுத்தின் மீதும் 
படிப்பறிவின் மீதும் கண் பார்வையற்று போகிறது. அவர்களுக்கு 
வாழ்க்கை நேறியும் மறந்து போகிறது. அவ்வினம் மிருகத்தன்மையை 
அடைகிறது. மேற் கூறியவை மெக்ஸிகோ நாட்டின் காட்டுப் 
பகுதியில் மர்மமாய் தோன்றி மறைந்த மாயா நாகரிக 
ஆராய்ச்சியாளர்களின் அறிக்கை.
1000 வருடங்களுக்கும் மேலாக இவ்வளவு ஆச்சரியமும், 
அற்புதமும் நிறைந்த நாகரிகம் புதைந்து கிடந்த்தை யாரும்
 கண்டறியவில்லை. 1839-ஆம் ஆண்டு, அமேரிக்காவை சேர்ந்த 
எழுத்தாளரான John Lloyd Stephens உதவியாளர் ஒருவரின் 
துணையோடு இங்கே செல்கிறார். பாழடைந்த பழமைமிக்க 
நகர பகுதி அங்கே உதித்து மறைந்ததை அவர் கண்டுபிடிக்கிறார்.
பல்லாயிரம் ஆண்டுகாலமாக செடிகொடிகள் குடி புகுந்த 
கட்டிடங்கள் கலைதிறன் வேலைபாடுகளோடு உருதியோடு
 இருக்க காண்கிறார். அடுத்ததாக அவர் ஒரு விசித்திரத்தை 
காண்கிறார். அவ்விட்த்தில் மனிதர்கள் யாரையும் காண 
முடியவில்லை. நீண்ட காலமாக அவ்விடம் நாதியற்று 
கிடந்திருக்கிறது.
அன்று முதல் அவ்விடம் ஆராய்ச்சிக்குள்ளாகிறது. 
ஆராய்ச்சியின் மேல் ஆராய்ச்சிகள் நடந்து புதைந்து போன 
மாயா இனத்தவரின் வரலாற்றை தோண்டி எடுக்கிறார்கள்.
 மாய இனத்தவர்கள் ஆச்சரியமிக்க நாகரிகத்தை உரூவாகியுள்
ளார்கள், பல பல துரைகளில் அறிவு திறன்மிக்கவர்களாக
 திகழ்திருக்கிறார்கள். இவையாவும் உலக நாகரிகம் வளர்த 
காலத்தில் நடந்தவை.
இந்த கண்டுபிடிப்பின் மகிழ்ச்சியில், ஆராய்ச்சியாளர்களுக்கு 
ஒரு விந்தையும் உதித்தது. ஒரு நகரத்தை வளர்ச்சியடைய செய்து 
பின்னர் எதற்காக அதைவிட்டு மறைந்தார்கள் என்பதே அவர்களின் 
வியப்பாகும்.
மாயா இனத்தவர்கள், அவர்களின் பெற் காலத்தின் போது உலகிற்கு 
பயனுள்ள பல துரைகளின் நுணுக்கங்களை ஆராய்ந்து 
கலைத்திறனும் புத்தி கூர்மையும் பெற்று விளங்கினார்கள்.
 16-ம் நூற்றாண்டின் போது தென் அமேரிக்க பகுதியை ஆட்சி 
செய்த ஸ்பெயின் நாட்டினரின் கடுமையான தாக்குதளால் 
இப்பகுதி அழிந்து போனது. அவர்களின் கண்டுபிடிப்பும் எழுதிய
 நூல்களும் அச்சமயம் அழிக்கப்பட்டது.
இச்செயல் உலகிற்கு மாயா இனத்தவரை பற்றிய பல
 உண்மைகளை உருத்த முடியாமலும் செய்துவிட்டது. அது நமக்கு 
பெரும் நஷ்டமும் கூட. தற்சமயம் நமக்கு வெளிபடையாக 
கிடைத்திருப்பது அந்நாகரித்தை பற்றிய சிறு துளி 
கண்டுபிடிப்புகள் மட்டுமே. இவையாவும் அவ்விடத்தில் 
கிடைக்கப்பட்ட சில துண்டு எழுத்துகளில் வடிவில் 
கிடைத்தவையாகும்.
இந்த மர்ம நகரில் பெரும் கற்களை கொண்ட கட்டிட 
வேலைபாடுகள் உள்ளன, பெரிய அளவிளான நகர வடிவமைப்பு,
 எழுத்துக்கள், மற்றும் அறிவு நுணுக்கங்கள் மாயா இனத்தவரின்
 போற்றதக்க கலைத்திறன்களாகும். இவை தற்போதய தொழில்
நுட்பத்தைவிடவும் மேலானவையாகவே கருதப்படுகிறது.
எகிப்திய பிரமிடுகளை அடுத்து இந்நகரில் காணப்படும் பிரமிடுகளே
 பிரசித்தி பெற்று விளங்குகிறது. இப்பிரமிடுகளை சுற்றிலும்
 4 பெரிய படிகட்டுகளும் அவற்றுள் அடங்கிய 365 படிக்கட்டுகளும் 
காணபடுகிறது. இவையாவும் ஒரு ஆண்டிற்கான ௪
காலங்களையும் 365 நாட்களையும் குறிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலை மாயா இனத்தவரின் வான் ஆராய்ச்சி நுட்பத்தை
 குறிக்கிறது. இதை தவிர்த்து கட்டிடங்களின் உட்புரமும் 
வெளிபுரமும் பல வகையான எண்களால், வான் மாற்றங்களை 
பற்றிய விசயங்கள் செதுக்கப்பட்டிருக்கிறது.  
                                                         2.jpg
                                             (கட்டிடத்தில் இருக்கும் வரைபடம்)

1.jpg
                                             
                                                (விளையாட்டு தளம்)
           மாயாக்களால் எப்படி ஆசாத்தியமிக்க கட்டிடங்களை 
எழுப்ப முடிந்த்து? அதுவும் அடர்ந்த காட்டிற்குள்? இவர்களது 
கட்டிடங்கள் ‘டன்’ கணக்கிலான கற்களை கொண்டு அந்த 
மர்ம நகரத்தினில் அமைக்கப்பட்டுள்ளது. மாயக்கள் இப்பெரிய 
கற்களை அடர்ந்த காட்டிற்குள் கொண்டு வந்ததும், அவற்றை 
சரிவர அடுக்கி கட்டிடங்களையும் பிரமிடுகளையும் 
அமைத்துள்ளதும் ஆச்சரியமிக்கவையாகும். மாயாக்கள் 
எவ்விதமான தொழில்நுட்பத்தை கையாண்டு இத்தகய நகரத்தை 
அமைத்தார்கள் என்பதும் கோள்விக்குறியே.
 ஆராய்ச்சியாளர்கள் மாயாக்களின் நாகரிகம் கி.மு 2000 
ஆண்டில் தொடங்கி சிறுகச் சிறுக வளர்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள். கி.மு 2000 முதல் 250 வரை வளர்ச்சி 
காலமாகவும், 250 தொடங்கி 900 வரை மாயாக்களின் 
பொற்காலமாகவும் கருதப்படுகிறது. 7 மற்றும் 8-ம் நூற்றாண்டுகள்
 மாயாக்களின் உச்சகட்ட பொற்காலம் எனவும் கூறுகிறார்கள்.
900-ஆம் ஆண்டில், நாகரிக உச்சத்தை அடைந்த பின் மாயாக்களின் 
ஆதிக்கம் மர்மமாய் மறைந்ததாய் கூறுகிறார்கள். அனாலும் இது 
முற்றிலும் உண்மையாகாது. ஆரம்ப காலத்தில் மாயாக்கள்
 மறைந்து போன மர்மத்தை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
 இதற்கு காரணம் மாயா நகர பகுதி குடிகள் இல்லாமல் நாதியற்று
 கிடந்தது தான். இதன் பின் ஆராய்ச்சியாளர்கள், மாயாக்களின்
 வம்சாவழியினர் தென் அமேரிக்க பகுதிகளில் இன்றளவும்
 வாழ்கிறார்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு சில 
ஆராய்ச்சியாளர்கள் மாயாக்களில் பல பிரிவினர் இருந்த்தாகவும் 
அவர்களில் ஒரு பிரிவினர் மட்டுமே இவர்கள் எனவும் 
குறிப்பிடுகிறார்கள்.
                மாயாக்களின் மறைவிற்கு இயற்கை சீற்றங்களே 
முக்கிய காரணம் என கூறுகிறார்கள். மாயாக்களின் கலை
 திறன் மிகவும் நுட்பமானது, சிற்ப கலையும் வரையும் திறனும்
 இவர்கள் விட்டுச் சென்ற அற்புத பொக்கிஷங்களின் வடிவில்
 இன்றளவும் நம்மால் காண முடிகிறது. கட்டிட கலையும் 
இவற்றுள் அடங்கும். மாயாக்களால் Tikal, Palenque, Copan,
 Kalakmul, Dos Pilas, Uaxactun, Altun Ha போன்ற நகரங்கள் 
மிகவும் திறமையாக உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றுள் மிகவும்
 பிரசித்தி பெற்று விளங்குவது பிரமிடும் அரண்மனையும் ஆகும்.
 மாயா நகர பகுதியில் காணப்படும் stelae எனப்படும் கல்
 வகையில் இவர்களின் ஆட்சிமுறை, போர்களில் பெற்ற
 வெற்றி மற்றும் பல முக்கிய தகவல்கள் heiroglyphik 
எழுத்துவடிவில் செதுக்கப்பட்டுள்ளது. மாயாக்கள் தூர தேச 
வியாபாரத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கபட்ட உண்மைகள்.

Bonampak என்ற இடத்தில் அமைந்த மாயாக்களின் சிற்ப 
கலைகள் எவ்வித பாதிப்பும் இன்றி கிடைக்கப் பெற்றதால் 
ஆராய்ச்சியாளர்கள் இவற்றை முறையாக தங்களது ஆய்விற்கு
 பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. இச்சிற்பங்கள் மாயாக்களின் 
நாகரிக வளர்ச்சியை சிறப்பாக எடுத்து காட்டுகின்றன. 
மாயாக்களின் எழுத்தின் அடிப்படையில், இச்சிற்பங்களை 
வடிவமைத்தவர்கள் தங்களது பெயரை சிற்பத்தின் எதாவது
 ஒரு இடத்தில் பொறித்துள்ளார்கள். இதனால் சிற்பிகள் 
மாயாக்களின் காலத்தில் பேற்றதக்கவர்களாக  மதிப்பளிக்கப்ப
ட்டிருக்கிறார்கள் என அறிய முடிகிறது. சிற்பகலை வருங்கால 
சந்ததியினருக்கு இவர்களின் சரித்திரத்தை அறிந்து கொள்ள 
ஏதுவாக இருக்கும் என முன்னதாகவே இவர்கள் 
தெரிந்திருக்கிறார்கள்.
           மாயாக்களால் நுட்பமாய் செய்யப்பட்டிருக்கும் கட்டிடங்கள் 
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாயினும் உறுதியாகவே இருக்கின்றன.
 பிரமிடு, வழிப்பாட்டு இடங்கள் மற்றும் வியாபார தளங்கள்
 இந்நாகரிக வளர்ச்சிக்கு பெரிதும் துனை புரிந்துள்ளன. 
இவையே ஆராய்ச்சியாளர்கள் மாயா நாகரிகத்தை அறிந்து 
கொள்ள துருப்பு சீட்டாய் அமைந்தது.
மாயாக்கள் பிரமீடுகளின் மேல் கோவிலை அமைத்துள்ளார்கள்.
 மாயக்களின் நம்பிக்கைபடி, உயரமான இடத்தில் அமைந்துள்ள 
பிரமீடுகளின் மேல் கோவிலை அமைப்பதால் இறைவழிபாட்டிற்கு
 சொர்க வாசலை அவர்கள் நெருங்க முடிகிறது என 
கண்டறிந்துள்ளனர்.
              ஆராய்ச்சியாளார்களின் கவனத்தை ஈர்த்த 
இன்னோரு விசயம் மாயாக்களின் விளையாட்டு மையம். 
ஒவ்வோரு மாயா நகர பகுதிகளிலும் மிகப் பெரிய பந்து 
விளையாட்டு மைதானம் காணப்படுகிறது. இம்மைதான்ங்கள் 
‘I’ ‘ஐ’ வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
மாயாக்களின் எழுத்து வகைகள் நீண்ட நாட்கள் ஆராய்ச்சி
யாளர்களின் பார்வையில் இருந்தவையாகும். 19-ஆம்
 நூற்றாண்டில் மாயா நகர பகுதி கண்டுபிடிக்கப்பட்டது 20-ஆம் 
நூற்றாண்டின் ஆரம்பம் வரை அவையாவும் புரியாத புதிராகவே
 இருந்த்து. 1960 முதல் 1970 வரையில் அனைத்து
 எழுத்துக்களுக்கும் அர்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டு படிக்கப்பட்டன.
 இதன் வழி ‘ஸ்பெயின்’ நாட்டினரின் படையெடுப்பும், பல்லாயிர 
காணக்கான புத்தகங்கள் எரிக்கப்பட்டதும் வருத்தத்துடன் 
தெரிந்து கொள்ள முடிந்த்து. அவர்களின் 4 புனித நூல்களில் 
மூன்றும் நான்காம் நூலின் சில பக்கங்களும் மட்டுமே 
கிடைத்துள்ளது.
             இந்திய நாகரிகத்தை அடுத்து மாயாக்களும் ‘0′ 
பூஜியத்தை கணக்கு வழக்குகளில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
 இவர்கள் 0 முதல் 20 வரையிலான எண் வகைகளை அமல்படுத்தியிருக்கிறார்கள். கல்வெட்டுகளில் இவர்கள் 
லட்சம் வரையில் கணக்கு வழக்குகளை எழுதி பார்த்திருக்கிறார்கள். 
அவை பெரும்பாழும் வான் ஆராய்ச்சிக்கு பாயன்படுத்தப்பட்டிருக்கிறது. கிரகங்களின் அசைவுகளும், வான் நிகழ்வுகளும் துள்ளியமாக கணிக்கப்பட்டுள்ளன.
                                                           maya.png
                                                     (மாயாக்களின் எண் முறைகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக