செப்டம்பர் 08, 2011


துருக்கிய அரசின் இரண்டாவது அரசியல் தாக்குதல்



துருக்கிய அரசு மீண்டும் ஒரு அதிரடி 
நடவடிக்கையை எடுத்துள்ளது.
 இஸ்ரேலிய இராஜதந்திரிகள் நாட்டை
 விட்டு வெளியேற வேண்டும் எனும் 
அறிவிப்பே அது. இஸ்ரேலிய 
இராஜதந்திர குழுவின் தலைவரான
 “எலா அபேக்கையும் (ELLA ABHEK)
 அவரது சகாக்களையும் இரு நாள் 
அவகாசத்துள் நாட்டை விட்டு
 கட்டாயமாக வெளியேறுமாறு துருக்கிய 
அரசு கேட்டுள்ளது. 
இந்த அறிவிப்பை உத்தியோகபூர்வமாக துருக்கிய வெளியுறவு 
அமைச்சர் (AHMED DAVUTOGLU) அறிவித்துள்ளார்.

இஸ்ரேலிய இராஜதந்திரி எல்லா அபேக்
முன்னதாக துருக்கிய அரசு இஸ்ரேலுடனான அனைத்துவிதமான
 இராணுவ உறவுகளையும், ஒத்துழைப்புக்களையும் அடியோடு
 நிறுத்தி விட்டதாக அறிவித்ததுடன் உடன் அமுலக்கு வரும் 
வகையில் அதை நடைமுறைப்படுத்தியது.

காஸாவிற்கான துருக்கிய சமாதான கொடியேந்திய மனிதாபிமான
 உதவியின் அடிப்படையில் உணவு மற்றும் மருந்து பொருட்களை
 ஏற்றிச்சென்ற கப்பலை (FREEDOM FLOTILLA) இஸ்ரேலிய 
ஸியோனிஸ இராணுவம் தாக்கியதுடன் அதற்காக இஸ்ரேலிய
 அரசு மன்னிப்புக்கோர மறுத்ததை இதற்கான காரணமாக துருக்கி
 முன்வைத்துள்ளது. மேற்படி நடவடிக்கைய ஹமாஸ்
 வரவேற்றுள்ளதுடன் ஏனைய நாடுகளிற்கு இது ஒரு
 முன்னுதாரணம் எனவும் கூறியுள்ளது.

கடந்த தேர்தலில் அர்பகானின் அரசு வெற்றிபெற்றதையடுத்து 
அதிபர் அப்துல்லா குல் துருக்கிய இராணுவத்தில் பாரிய அதிகார
 மாற்றங்களை ஏற்படுத்தியதன் பின் நிகழ்ந்துள்ள ஒரு அரசியல் 
முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களாக மேற்படி இரண்டு
 தீர்மானங்களையும் கருதலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக